அய்யன் ராமபிரானே அய்யன் ராமபிரானே
நான் வசிக்கும் வனம் அன்றொரு நாள் வந்தீர்களே
உள்ளங்கையில் எனையெடுக்க குனிந்தீர்களே
தங்கள் திருத்தோளில் ஏறும் வரம் தந்தீர்களே
மரம் போன்ற கைகள் வழி நான் ஏறினேன்
தங்கள் திருத்தோள்கள் களமென்று நான் ஆடினேன்
முதுகில் மூன்று கோடுகளை போட்டீர்களே
மூவுலகும் எனை வியக்க வைத்தீர்களே
தங்கள் காரியத்தில் என் சிறுசேவை ஏற்றீர்களே
தங்கள் வரலாற்றில் என் சிறுபெயரை சேர்த்தீர்களே
கண்டவுடன் புரிந்து கொண்டேன் தாங்கள் யாரென
என் இதயத்தில் வீற்றிருக்கும் உயிரின் வேரென
மரக்கிளை இடையில் நான் போடும் துள்ளலை போலே
என் இதயம் அந்த நொடி துள்ளி சொன்னதே
பல முனிவருக்கும் கிடைக்காத இந்த பாக்கியம்
இந்த எளியனுக்கு தாங்கள் தந்த காரணம் என்ன?
காய் கனி மட்டும் உண்ணும் வாழ்க்கை தவமல்லவே
என் கீச்சு கீச்சு சத்தங்கள் ஜபமல்லவே
தீங்கிழைக்கா என் இயல்பு விரதமல்லவே
இரை தேடும் என் செய்கை கர்ம யோகமல்லவே
ஆனாலும் எப்பேர்ப்பட்ட புண்ணியனானேன்
ஆழ்வார்கள் பாட்டில் வரும் கண்ணியனானேன்
மனிதருக்கு என் வாழ்வில் செய்தியுள்ளது
தங்கள் அருளுக்கு தனி முயற்சி இல்லையென்பது
கொடுக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தால் அது போதுமே
சூழ்ச்சியற்ற மனம் இருந்தால் அது போதுமே
நாளை பற்றி கவலையற்றால் அது போதுமே
நானென்ற திமிரற்றால் அது போதுமே
மன பாரங்களை இறக்கி வைத்தால் அது போதுமே
மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தால் அது போதுமே
பிள்ளைகுணம் இழக்காத மனம் போதுமே
பிழை செய்யாது பார்த்துக் கொண்டால் அது போதுமே
அய்யன் ராமபிரானே அய்யன் ராமபிரானே
நான் வசிக்கும் வனம் அன்றொரு நாள் வந்தீர்களே
உள்ளங்கையில் எனையெடுக்க குனிந்தீர்களே
தங்கள் திருத்தோளில் ஏறும் வரம் தந்தீர்களே
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம ராம ராம ராம ராம்
10 comments:
//கண்டவுடன் புரிந்து கொண்டேன் தாங்கள் யாரென
என் இதயத்தில் வீற்றிருக்கும் உயிரின் வேரென//
நான் ரசித்த வரிகள்.
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்!
:) நன்றி கவிநயா.
ஸ்ரீ ராம ஜெயம்
சிறிய உயிரினத்தையும் பெறுமைப்படுத்திய ஸ்ரீ ராமரின் கருணை எத்தணை உயர்வானது..
ஸ்ரீ ராமரின் அருளைப் பெற்றதால்தான் அணிலும் ராமரைப்போல் சாத்வீகமான குணத்துடன் உள்ளதோ.?
வித்யாசமான இதுவரை பார்த்திராத படம், பாடலுக்கு பொருத்தமாக உள்ளது..
//ஸ்ரீ ராமரின் அருளைப் பெற்றதால்தான் அணிலும் ராமரைப்போல் சாத்வீகமான குணத்துடன் உள்ளதோ.?//
நிச்சயமாக. :)
வருகைக்கும் கருத்து சொன்னமைக்கு நன்றி திலகா.
ஸ்ரீ ராம ஜெயம்.
ஜெய் ஸ்ரீ ராம்.
ஜெய் ஸ்ரீ ராம்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
என் தலைவனின் தலைவனின் புகழ்பாடும்
தலைமகனே நீ என்றும் வாழி!
:) நன்றி நண்பா.
Post a Comment