ராமராம ராமராம
ராமவென்று பாடுவோம்
ராமராம ராமவென்று
ராமநாமம் பாடுவோம்
ராமராம ராமராம
ராமவென்று பாடுவோம்
ராமராம ராமவென்று
ராமநாமம் பாடுவோம்
நல்லராமர் பேரைச்சொல்லி
நாளும் நாளும் பாடுவோம்
வல்லராமர் பேரைச்சொல்லி
வாழ்த்தி வாழ்த்தி பாடுவோம்
வெல்லும்ராமர் பேரைச்சொல்லி
வெற்றிபெற்று வாழுவோம்
அன்புராமர் பேரைச்சொல்லி
ஆடிஆடி பாடுவோம்
பிள்ளையார் ஆறுமுகர்
போற்றுகின்ற பேரெது?
நன்மைநல்கும் நன்மைநல்கும்
ராமம் நாமம் தானது!
காசிப்போய் பாரடா
காதைத்தந்து கேளடா
சிவனாரும் ராமநாமம்
ஓதுவதை கேளடா
மீனாட்சி காதில்கிளி
சொல்லுவது ஏதடா?
மாண்புமிகு மாண்புமிகு
ராமநாமம் தானடா
அனுமாரை அனுமாரை
அருகில்சென்று பாரடா
அவர்ரோமங்கூட ராமநாமம்
சொல்லுவதைப் கேளடா
ராமராம ராமராம
ராமவென்று பாடுவோம்
ராமராம ராமவென்று
ராமநாமம் பாடுவோம்
ராமராம ராமராம
ராமவென்று பாடுவோம்
ராமராம ராமவென்று
ராமநாமம் பாடுவோம்
ராமகிருஷ்ணர் பாரடா
பேரின்முதல் யாதடா?
ஞானம் தரும் ஞானம் தரும்
ராமநாமம் தானடா!
பரசுராமர் யாதுசொல்லி
கற்றுத்தந்தார் போர்க்கலை?
காந்திமகான் யாதுசொல்லி
பெற்றுத்தந்தார் விடுதலை?
பரசுராமர் போற்றியதும்
ராமநாமம் தானடா!
காந்திமகான் ஏற்றியதும்
ராமதீபம் தானடா!
காஞ்சிமுனி எழுதிக்கேட்ட
நாமம் ராமநாமன்டா
விசிறிசாமி சொல்லசொன்ன
நாமம் ராமநாமன்டா
இளையராஜா முதல் பாட்டில்
எழுதியது ஏதடா?
தியாகப்ரம்மம் ராமநாமம் பாடி
உருகியது தானடா!
பாலுமகேந்திரா கடைசி படத்தில்
கூறியது ஏதடா?
பாசமிகு பாசமிகு
ராம நாமம் தானடா!
ரஜினிகாந்தின் ராகவேந்தர்
ஓதுவது ஏதடா?
வெற்றி தரும் வெற்றி தரும்
ராமநாமம் தானடா!
ராமராம ராமராம
ராமநல்ல நாமன்டா
ராமர்ராமர் ராமர்ராமர்
ராமர்நல்ல ராமர்டா
சக்கரத்தார் புகழ்
நான்
அடா உடா
சொல்லக் கண்டு
அடா அடா
என முனிபவர்
சடார் சடார் என
என் சட்டையை
பிடிக்கும் எண்ணம்
கைவிடீர்
மடார் மடார் என
மழ் இசை
ஆழ்வாரை
கைப்பிடீர்
தடார்தடார் என
தொடுத்தவரை
படாமல்பட்டு
விட்டுவிட்டு
அதால்அதால்
வந்த அம்பு
என்னை நோதல்
நியாயமோ?
சிவவாக்கியர் சிந்தைக்கு
என்றென்றும் என் வணக்கம்
இசையாழ்வார் இனிமைக்கு
இன்றுமென்றும் என் வணக்கம்
தடாலடி தமிழுக்கு
தரைத்தொட்டுக்
கலைவணக்கம்
பாதவடி நிழலுக்கு
மண்தொட்டுத்
தலைவணக்கம்
சக்கரத்தார் சத்ருக்கனார்
சிவவாக்கியர் மால்பாக்கியர்
பக்திசாரர் பாட்டுக்காரர்
பாடும்போது வேட்டுக்காரர்
சுடர்பவர் சுதர்சனர்
வடிவார்சோதி வலக்கையாழி
ஆழியாழ்வர் ஹேதிராஜர்
மழிசைமுனி மயிலைமுனி
குடந்தைமுனி குழந்தைமுனி
காஞ்சிமண்தாரி பரமவுபகாரி
பேயாழ்வார்பாசான்
கணிகண்ணன்ஆசான்
சொன்னவண்ணம்செய்தவர்
செய்யும்வண்ணம்சொன்னவர்
பாய்சுருட்டசொன்னவர்
பாய்விரிக்கசொன்னவர்
பாயெடுத்தத் திரு
திரும்பிப்பார்த்த வுரு
கூனெடுத்தத் திரு
சேவைசெய்த குரு
நூறு நூறு நூறுமாய்
பின்னும் ஒரு நூறுமாய்
பத்து நூறு ரெண்டுமாய்
பின்னும் மூன்று நூறுமாய்
ஆழ்ந்து ஆழ்ந்து ஆழ்ந்தவர்
வாழ்ந்து வாழ்ந்து வாழ்ந்தவர்
சமயம்பல கற்றவர்
ஞானம்பல பெற்றவர்
மாலபக்தி உற்றவர்
மற்றவற்றை விட்டவர்
யோகியர் வாதியர்
பாவலர் பயமிலர்
எண்ணியல் பாடகர்
சொல்விளை யாடகர்
ஓரிக்கைக் காரணர்
பக்திபரி பூரணர்
வாழ்கவாழ்க வாழ்கவாழ்க
அவர் தமிழென்றும் வாழ்கவே
வாழ்கவாழ்க வாழ்கவாழ்க
அவர் புகழென்றும் வாழ்கவே
0 comments:
Post a Comment