கண்ணன் கள்வன்
கடல் கடைந்தானை
எண்ணின் எளிதில்
வினை ஒழிப்போமே
ஒழிப்போம் தீவினை
பழிப்போம் தீசெயல்
அழிப்போம் அஞ்ஞானம்
அவன் அருளாலே
அருள்வோன் அருளன்
அளிப்போன் அளிப்பு
அமுதன் இனியன்
தாள் பணிவோமே
பணிவோம் அவன்தாள்
இணைவோம் அடியார்
கடப்போம் பிறவி
அடைவோம் அவனடி
அவனடி அதையே
அனுதினம் தொழுதால்
அலரும் ஞானம்
மனதில் மோனம்
மோனன் மோகனன்
கருட வாகனன்
நாமம் கூறிட
நீங்கும் துயரே
துயரறு சுடரடி
தொழுதிட இடரது
நொடிதினில் வழிவிடும்
தொழுது காண்மினே
காண்மின் கண்ணன்கண்
காண்மின் கண்ணன்தாள்
காண்மின் கண்ணனை
கண்டு உய்மினே
உய்மின் உய்ந்திட
உத்தமன் திருவடி
பற்றுக பற்றி
பற்றிலர் ஆவீரே
ஆவீர் பக்தர்கள்
ஆவீர் ஞானியர்
அடைவீர் வைகுந்தம்
அவன் அருளாலே
நம்மாழ்வார் பாசுரங்கள் பாடி பாடி அவர் பாணியிலேயே பாடினேன் கண்ணனுக்கு நானும் ஓர் அந்தாதி. நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!!!
பழிப்போம் தீசெயல்
அழிப்போம் அஞ்ஞானம்
அவன் அருளாலே
அருள்வோன் அருளன்
அளிப்போன் அளிப்பு
அமுதன் இனியன்
தாள் பணிவோமே
பணிவோம் அவன்தாள்
இணைவோம் அடியார்
கடப்போம் பிறவி
அடைவோம் அவனடி
அவனடி அதையே
அனுதினம் தொழுதால்
அலரும் ஞானம்
மனதில் மோனம்
மோனன் மோகனன்
கருட வாகனன்
நாமம் கூறிட
நீங்கும் துயரே
துயரறு சுடரடி
தொழுதிட இடரது
நொடிதினில் வழிவிடும்
தொழுது காண்மினே
காண்மின் கண்ணன்கண்
காண்மின் கண்ணன்தாள்
காண்மின் கண்ணனை
கண்டு உய்மினே
உய்மின் உய்ந்திட
உத்தமன் திருவடி
பற்றுக பற்றி
பற்றிலர் ஆவீரே
ஆவீர் பக்தர்கள்
ஆவீர் ஞானியர்
அடைவீர் வைகுந்தம்
அவன் அருளாலே
நம்மாழ்வார் பாசுரங்கள் பாடி பாடி அவர் பாணியிலேயே பாடினேன் கண்ணனுக்கு நானும் ஓர் அந்தாதி. நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!!!
0 comments:
Post a Comment