குன்று எடுத்தவனே கோவிந்தா
குன்று எடுத்தவனே
குன்று எடுத்தவனே கோவிந்தா
குன்று எடுத்தவனே
சுண்டு விரலதிலே கோவிந்தா
சுண்டு விரலதிலே
குன்று எடுத்தவனே கோவிந்தா
குன்று எடுத்தவனே
குன்றின்கீழ் குன்றாகி கோவிந்தா
நின்று மகிழ்ந்தவனே
வாரமொன்று சென்றும் கோவிந்தா
நின்று திகழ்ந்தவனே
குன்றையும் குடையாக்கி கோவிந்தா
மழைக்கு பிடித்தவனே
குன்றின்கீழ் ஆநிறையை கோவிந்தா
தாய்ப்போல காத்தவனே
ஒற்றைக்கை இடுப்பினிலே கோவிந்தா
வைத்தபடி நின்றவா
மற்றொரு கையதனால் கோவிந்தா
மலையைப் பிடித்தவனே
ஒற்றைக்காலை ஊன்றி கோவிந்தா
மற்றைக்காலை மடக்கி
புன்னகை செய்தபடி கோவிந்தா
மலையைப் பிடித்தவனே
நீலதலைப் பாகை கோவிந்தா
தலையை அலங்கரிக்க
மஞ்சள்வண்ண ஆடை கோவிந்தா
இடையை அலங்கரிக்க
மேகவண்ண மேனி கோவிந்தா
வைரம்போல் வலுத்திருக்க
மேகவண்ண முகத்தில் கோவிந்தா
புன்னகை மின்னலென
ஆண்களும் பெண்களுமே கோவிந்தா
உன்னையும் சுற்றிநிற்க
பெரியோரும் சிறியோரும் கோவிந்தா
உன்னையே பார்த்துநிற்க
பசுக்களும் காளைகளும் கோவிந்தா
வெள்ளாடும் செம்மறியும்
உன்னையே நம்பிவந்து கோவிந்தா
குன்றின்கீழ் நின்றதென்ன?
இந்திரன் கர்வமதும் கோவிந்தா
ஒருவாரம் நீண்டதுவோ?
கனமழை இடிமின்னல் கோவிந்தா
ஒருவாரம் நீண்டதுவோ?
இந்திரன் கர்வமதும் கோவிந்தா
மெல்ல ஒழிந்ததுவோ
நீலவண்ண வானம் கோவிந்தா
மெல்ல விடிந்ததுவோ
எடுத்த இடத்தினிலே கோவிந்தா
மலையை வைத்தனையோ
உந்தன் திருவடியில் கோவிந்தா
இந்திரன் பணிந்தானோ
குன்று எடுத்தவனே கோவிந்தா
குன்று எடுத்தவனே
குன்று எடுத்தவனே கோவிந்தா
குன்று எடுத்தவனே
சுண்டு விரலதிலே கோவிந்தா
சுண்டு விரலதிலே
குன்று எடுத்தவனே கோவிந்தா
குன்று எடுத்தவனே
3 comments:
கோவிந்தனின் புகழை படித்து அனுபவித்தேன்.
அருமை
நன்றி. ஶ்ரீராமஜெயம்!!
Post a Comment