ஒவ்வொரு முறை ராமா என்று சொல்லும் போதும் நாம் மேன்மை அடைகிறோம். எங்கெல்லாம் ராம காதை சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயர் வருகை தருவார். ஆசீர்வதிப்பார்.
ராம் ராம் ராம் ராம் ராஜா ராம்
ராம் ராம் ராம் ராம் சீதா ராம்
மன்னன் மகனாய் பிறந்தாராம்
மக்கள் போற்ற வளர்ந்தாராம்
கல்விகள் பற்பல கற்றாராம்
ஆற்றல்கள் பற்பல பெற்றாராம்
வேள்விக்கு காவல் நின்றாராம்
கன்னி யுத்தத்தில் வென்றாராம்
சிவனின் வில்லை ஒடித்தாராம்
மண்ணின் மகள் கை பிடித்தாராம்
துறவுக் கோலம் ஏற்றாராம்
தந்தை சொல்லை காத்தாராம்
கானக வாழ்க்கை வாழ்ந்தாராம்
காதல் மனைவியை இழந்தாராம்
வானர தலைவனை தீர்த்தாராம்
வானர சேனையை சேர்த்தாராம்
கடலை தாண்டி சென்றாராம்
கொடிய அரக்கனை கொன்றாராம்
மீண்டும் தாயகம் வந்தாராம்
ராம ராஜ்ஜியம் தந்தாராம்
மண்ணில் தர்மத்தை காத்தாராம்
மக்கள் மகிழ பார்த்தாராம்
ராம் ராம் ராம் ராம் ராஜா ராம்
ராம் ராம் ராம் ராம் சீதா ராம்
2 comments:
ஸ்ரீராமஜெயம்.
ஸ்ரீராமன் அருள்வான். நலமெல்லாம் தருவான்!
ஸ்ரீராமஜெயம். நன்றி கவிநயா.
Post a Comment