பாதம்
என்ன பாதம் மகாலட்சுமியின்
பாதம்
ஏழ்மையதை
எரிக்கின்ற ஏற்றமிகு பாதம்
வளங்களை
வாரி வாரி வழங்குகின்ற பாதம்
மதுசூதனர்
மார்பினை அலங்கரிக்கும்
பாதம்
பாற்கடலை
கடைந்திட தோன்றிய
நற்பாதம்
சந்திரனின்
சோதரியின் குளிர்ச்சிமிகு
பாதம்
மாலவரை
நோக்கி மெல்ல நடந்து சென்ற
பாதம்
மாலவரும்
மெட்டிமாட்ட விரல்பிடித்த
பாதம்
சீதையாய்
பிறந்தவளின் சிறப்புமிக்க
பாதம்
ருக்மிணியாய்
பிறந்தவளின் ரசிக்கத்தக்க
பாதம்
நரசிம்மர்
மடியினின்று தொங்குகின்ற
பாதம்
கேசவரும்
கைகளால் தாங்குகின்ற பாதம்
தாமரை
மலர்மீது வீற்றவளின் பாதம்
தாமரைகளை கரமிரண்டில் ஏந்தியவள் பாதம்
தாமரைக்
கண்கொண்டு அருள்பவளின் பாதம்
தாமரைக்
கண்ணரும் காதலிக்கும் பாதம்
பொன் நகைகள்
தரித்தவளின் பொன்னனைய பாதம்
பொற்குடத்தை
கையினிலே பிடித்தவளின் பாதம்
பொற்காசுகளை
மழைபோல பொழிபவளின் பாதம்
பொற்குணராம்
நாரணரின் நெஞ்சிலுறை பாதம்
வெள்ளை
நிறயானைகள் மலர்தூவும் பாதம்
ஆந்தை
மீதேறி வானில் உலவுகின்ற
பாதம்
அரசபோகம்
அருள்பவளின் அழகிய பொற்பாதம்
மாதவரும்
மருதாணியால் கோலமிடும் பாதம்
வீரமதை
தருபவளின் வீரிய நற்பாதம்
நற்பேறை
அருள்பவளின் சீரிய பொற்பாதம்
வெற்றியதை
தருபவளின் திறம்மிகுந்த
பாதம்
வாசுதேவரும்
கொலுசுகளை மாட்டிவிடும்
பாதம்
கவிகேட்டு கனிகள் பல பொழிந்தவளின் பாதம்
கவிகேட்டு கவிகளை பல புனைந்தவளின் பாதம்
ஆண்டாளாய் தமிழ் மொழியை ஆண்டவளின் பாதம்
தமிழ்க் கவி பாடி ரங்கரை அடைந்தவளின் பாதம்
இந்திரனை செல்வந்தனாய் வைப்பவளின் பாதம்
இந்திரனுக்கு வெற்றிகளை தருபவளின் பாதம்
இந்திரனும் நன்றியோடு போற்றுகின்ற பாதம்
இதயவாசரின் இதயத்தில் வசிப்பவளின் பாதம்
கவிகேட்டு கனிகள் பல பொழிந்தவளின் பாதம்
கவிகேட்டு கவிகளை பல புனைந்தவளின் பாதம்
ஆண்டாளாய் தமிழ் மொழியை ஆண்டவளின் பாதம்
தமிழ்க் கவி பாடி ரங்கரை அடைந்தவளின் பாதம்
இந்திரனை செல்வந்தனாய் வைப்பவளின் பாதம்
இந்திரனுக்கு வெற்றிகளை தருபவளின் பாதம்
இந்திரனும் நன்றியோடு போற்றுகின்ற பாதம்
இதயவாசரின் இதயத்தில் வசிப்பவளின் பாதம்
பிள்ளையாரின்
அத்தையாரின் பாசமிகு பாதம்
ஆறுமுகர்
அத்தையாரின் அன்புமிகு
பாதம்
சிவனாரின்
தங்கையாரின் தயைமிகுந்த
பாதம்
மகாவிஷ்ணுவின்
மனைவியின் மாண்புமிகு பாதம்
0 comments:
Post a Comment