பாதம் என்ன பாதம் இது ஸ்ரீராமபிரான் பாதம்
பாவங்களை போக்குகின்ற செம்புனித பாதம்
துன்பங்களை இன்பங்களாய் மாற்றுகின்ற பாதம்
தூயவராம் ஆஞ்சநேயர் போற்றுகின்ற பாதம்
சரண் புகுந்தவர்க்கு அரணாக நிற்கின்ற பாதம்
பணிவு பாடத்தை ஞானியர் கற்கின்ற பாதம்
நான் என்ற எண்ணத்தை நசிக்கின்ற பாதம்
நல்ல மாருதியும் கண்களால் புசிக்கின்ற பாதம்
செம்பவள நகங்களால் ஜொலிக்கின்ற பாதம்
துதிப்பவர்க்கு விடுதலை அளிக்கின்ற பாதம்
நீலோத்பல மலராக விளங்குகின்ற பாதம்
வானளந்த ஆஞ்சநேயர் வணங்குகின்ற பாதம்
சீரிய விரல்களால் சிறந்திருக்கும் பாதம்
ஓரமெங்கும் அழகாக சிவந்திருக்கும் பாதம்
ரேகைகள் அலங்கரிக்கும் அழகான பாதம்
மாருதி மனதினில் நிலையான பாதம்
கௌசல்யை மடியினில் துயில்கொண்ட பாதம்
தசரதர் மார்பினில் நடை கண்ட பாதம்
லக்ஷ்மணர் நல் அன்பால் பிடித்துவிடும் பாதம்
ஆஞ்சநேயர் மென் பட்டால் துடைத்துவிடும் பாதம்
பரத சத்ருக்னர் பாசத்தோடு முத்தமிடும் பாதம்
ஒவ்வொரு பக்தரும் தனதென்று சத்தமிடும் பாதம்
சீதையவள் அதிகாலையில் கண்விழிக்கும் பாதம்
மாருதியும் மகிழ்ச்சியோடு சொடுக்கெடுக்கும் பாதம்
அகலிகையின் பாவத்தை அகற்றிய பாதம்
விராதனுக்கு பாடத்தை புகட்டிய பாதம்
பாவங்கள் களைவதால் புகழ் ஓங்கிடும் பாதம்
ஆஞ்சநேயர் உள்ளங்கையால் தாங்கிடும் பாதம்
கால் வண்ணம் கண்டதாய் குரு சொன்ன பாதம்
கடல் நீருண்ட மேகமாய் கரு வண்ண பாதம்
சபரியென்ற பக்தையை தேடிச் சென்ற பாதம்
மாருதியும் தன் மனதால் நாடிச் சென்ற பாதம்
பரதருக்கு பாதுகையை பரிசளித்த பாதம்
பக்தியோடு பணிபவர்க்கு நற்பண்பளிக்கும் பாதம்
ஆணவத்தை அழிப்பதால் மகிழ்ச்சி தரும் பாதம்
ஆஞ்சநேயர் மனதுக்கு நெகிழ்ச்சி தரும் பாதம்
விபீஷணர் நம்பிக்கையால் சரண் புகுந்த பாதம்
எவரையும் விலக்காததால் புகழ் மிகுந்த பாதம்
சுக்ரீவரைத் தேற்ற துந்துபியை விட்டெறிந்த பாதம்
மாருதியும் ஞானம் பெற கற்றறிந்த பாதம்
விரும்பி வருபவரை மட்டுமே ஏற்கின்ற பாதம்
அப்படி வருபவரை கண் போல காக்கின்ற பாதம்
சத்தியத்தின் பாதை நின்று விலகாத பாதம்
ஆஞ்சநேயர் மனதினின்று அகலாத பாதம்
உயிர்களெல்லாம் இறுதியாய் அடைகின்ற பாதம்
மோக்ஷத்தை உறுதியாய் தருகின்ற பாதம்
மாயவலை அறுக்கும் மெய்ஞான பாதம்
மாருதி தினம் துதிக்கும் மென்பஞ்சு பாதம்
7 comments:
Ramaaya Ramabhadraya Ramachandraaya vedase.
Raghunaathaya naathaaya seethayaa pathaye namaha
subbu rathinam.
உயிர்களெல்லாம் இறுதியாய் அடைகின்ற பாதம்
மோக்ஷத்தை உறுதியாய் தருகின்ற பாதம்
மாயவலை அறுக்கும் மெய்ஞான பாதம்
மாருதி தினம் துதிக்கும் மென்பஞ்சு பாதம் - சரணடைய உகந்த பாதம் !
ஸ்ரீ ராம ஜெயம்!! ஸ்ரீ ராம ஜெயம்!!
//சுக்ரீவனைத் தேற்ற தந்துபியை விட்டெறிந்த பாதம்//
இது என்னன்னு தெரியலையே...
ராமரின் தாமரைப் பாதங்கள் போலவே பாடலும் அழகு.
ஸ்ரீராம ஜெயம்.
கவிநயா,
ராமர் சுக்ரீவனுக்கு வாலியை கொல்வதாக வாக்களித்த பொழுது, சுக்ரீவனுக்கு ராமரின் வலிமையில் சந்தேகமிருந்தது. அப்பொழுது அவன் நம்பிக்கை பெருவதற்காக வாலி முன்னர் கொன்று தூக்கி எறிந்ததால் அங்கு கிடந்த துந்துபியின் எலும்புக் கூட்டை ராமர் தன் கால் கட்டைவிரலால் எம்பி விட்டெறிவார். அப்படியும் சுக்ரீவனுக்கு நம்பிக்கை பிறக்காததால் ஏழு சால மரங்களை ஒரே அம்பால் துளைத்துக் காட்டுவார்.
துந்துபியை தந்துபி என தவறாக எழுதிவிட்டேன்.
நன்றி
ஸ்ரீராமஜெயம்!!!
நன்றி ரமேஷ்!
நன்றி கவிநயா!
ஸ்ரீ ராம ஜெயம்!
Post a Comment