அஞ்சனை பெற்ற அருந்தவப் புதல்வனே
வஞ்சனையற்ற பக்தியில் முதல்வனே
ராம பக்தியில் தன்னை இழந்திடும்
தன்னை இழப்பதில் உள்ளம் நெகிழ்ந்திடும்
நல்ல வித்தையில் நீயென் முன்னோடி
அதை நான் கற்றிட கேட்கிறேன் மன்றாடி
மீண்டும் மீண்டும் கனவில் வந்து
உள்ளம் தளரா ஊக்கம் தந்து
எனை ராம பக்தனாய் ஆக்கிய குருவே
பணிவின் துணிவின் பக்தியின் உருவே
எப்படி சொல்வேன் நன்றிகள் உனக்கு
கைம்மாறு செய்ய வக்கில்லை எனக்கு
காமக் களியாட்டம் நிறைந்த இலங்கையில்
ராக்கதர் யாவும் உறங்கும் வேளையில்
ராம தூதனாய் உள்ளே நுழைந்தாய்
ராக்கதர் ஆட்டத்தை அறவே களைந்தாய்
நான் இருந்ததனாலா நடமாடும் இலங்கையாய்
நானுறங்கும் வேளையில் என்னுள்ளே புகுந்தாய்?
ஆணவம் உள்ளவன் நானென புரிந்தும்
காடென வளர்த்த காமங்கள் தெரிந்தும்
கதையோடு எந்தன் கனவில் தோன்றினாய்
பக்தியின் விதையை சேற்றில் ஊன்றினாய்
ராவணன் மமதையை நெருப்பால் எரித்தாய்
என் மமதையை மட்டுமேன் அன்பால் கரைத்தாய்?
எண்ணுருப்பு தேய நிலத்தில் விழுகிறேன்
ராம பக்தனே உன் பாதம் தொழுகிறேன்
நீ கைகூப்பும் நிலையை மனதில் கொணர்கிறேன்
ஆணவம் அற்றல் இதுவென உணர்கிறேன்
இறை படைப்பில் உனைவிட செல்வந்தர் இல்லை
இதை உணர்ந்ததால் என்னுள் ஏழ்மைகள் இல்லை
அடியேன் பணிகிறேன் உன் பாதம் தொழுகிறேன்
இன்னொரு இமயமே உன் கால்களில் விழுகிறேன்
இவ்வுலகம் எனையும் உனைப் போல கொள்ளட்டும்
இன்னொரு அனுமன் இவனென்று சொல்லட்டும்
ஸ்ரீராமருக்காய் மலைசுமந்த உன் தோளுக்கு வணக்கம்
வெண்கல மணியணிந்த உன் வாலுக்கு வணக்கம்
ஸ்ரீராமர்புகழ் பாட நீ மீட்டும் யாழுக்கு வணக்கம்
உன்னையே தாங்கி நிற்கும் உன் காலுக்கு வணக்கம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்!!
10 comments:
கடவுள் நேற்று முளைத்த காளானா..
உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.
http://shanthru.blogspot.com/2009/08/blog-post_11.html
இந்தப்பாடலை வழக்கமாக நான் கேட்கும்போது பாடல் தொடங்குவதுதான் எனக்குத்தெரியும்.பாடல் முடிந்து சிறிது நேரத்தின்பின்னர்தான் பாடல் முடிந்துவிட்டது என்று சுய நினைவிற்கு வருவேன்.
உங்கள் வரிகளும் நன்றாக இருக்கின்றது.
நன்றி.
#சந்ரு
நிச்சயம் வருகிறேன்!
#நிரு
நன்றி நிரு. எனக்கும் அப்படித் தான் ஆகும்.
கோகுலாக்ஷ்டமி வர இருக்கும் நேரத்தில் நல்லதொரு பாடலை
எடுத்துக்காட்டி, கண்ணன் வருகின்ற நேரம் என்பதை
சுட்டிக் காட்டி விட்டீர்கள்.
நன்றி.
சுப்பு ரத்தினம்.
நன்றி சூரி சார்!
அருமையான பாடல். உணர்ந்து எழுதியிருக்கும் உங்கள் வரிகளும் அருமை.
நன்றி கவிநயா.
Realy this song very nice. Ungal varigal arumai.
ayarpaadi maligaiyil … this srikrishna song also I remembering
for singing pullanguzal song
…..,,, alwar paasuram with tamil meaning please visit
http://aazhvarmozhi.blogspot.com/2009_05_01_archive.html
mr.tamil sir starting explain alwar paasuram with tamil meanings ,, realy fentastic
Dear Rajesh,
Thanks.
ayarpaadi maligaiyil is also awesome song.I like that very much.
Yeah, I'll visit that blog. Thanks for the information.
I was touched by your devotion for Sri Rama. You write well too. Asirwadham.
Post a Comment