ஸ்ரீராமர் பொழியும் ஆருள் மழையை பெற்று அனைவருக்கும் வழங்கும் ஏரியே ஸ்ரீராகவேந்திரர்.
ஸ்ரீராகவேந்திரர் பக்தராக இருந்து தனது நூறாவது படத்தில் ஸ்ரீராகவேந்திரராக நடித்து ராகவேந்திரருக்கு மரியாதை செய்தவர் ரஜினிகாந்த.
இதனால் ரஜினிகாந்த என்பவர் ஸ்ரீராமபிரானின் அன்புக்கு பாத்திரமானவர் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
சுராங்கினி மெட்டில் ஸ்ரீராமர்புகழ் பாடிய பொழுது
ராகவேந்தர் பூஜை செய்த மூலராமர்தான்
ரஜினிகாந்த் தியானம் செய்த ராகவேந்தர் தான்
ராகவேந்தர் மனசு வெச்சா சூப்பர் ஸ்டாருதான்
ராமநாமம் சொல்ல சொல்ல நீயும் ஸ்டாரு தான்
என்று பாடினேன்.
ரஜினியின் புகழுக்கான காரணம் ராமாயணத்தில் கூறப்பட்டிருக்கிறது.
நான் ஒரு முறை வால்மீகி ராமாயணம் தமிழ் உரைநடையில் படித்துக் கொண்டிருந்தேன்.
பரதர் ஸ்ரீராமரை அயோத்திக்கு திரும்பவும் வரச் சொல்லி அழைக்கும் கட்டம்.
பரதர் சொல்கிறார், 'அண்ணா! எப்படி பெருந்தன்மை உடையவர்களை விட்டு புகழ் ஒரு நாளும் பிரியாதோ அதைப் போலவே நானும் உங்களை விட்டு பிரிய மாட்டேன்!'
உடனே எனக்கு ரஜினிகாந்த் அவர்கள் ஞாபகம் தான் வந்தது. பரதர் சொன்ன வாசகத்துக்கு வாழும் உதாரணமாக இருப்பவர் ரஜினிகாந்த் மட்டுமே.
இவர் பெருந்தன்மைக்கு பல சான்றுகள் உள்ளன. இரண்டு மட்டும் இங்கே.
பாபா திரைப் படம் நஷ்டம் தந்ததாக கூறி விநியோகஸ்தர்கள் இவரிடம் வந்த பொழுது படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்த நிலையிலேயே அவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்தது.
திரையில் புகைப்பிடிப்பதை நிறுத்தியது. மக்கள் அவர் ஸ்டைலை பார்த்து அவரை விரும்பவில்லை. அவரை விரும்புவதாலேயே அவர் ஸ்டலை பார்க்கிறார்கள் என்பதற்கு அதுவே சான்றாக அமைந்தது.
ஆக ராமாயணம் புகழோடு வாழ்வதற்கு வழி காட்டுகிறது. அதற்கான சான்றையும் ஸ்ரீராகவேந்திரர் நம் கண் முன்னே உலவ விட்டிருக்கிறார்.
ரஜினிகாந்த தன் திரைப்படங்களில் இரு இடங்களில் ஸ்ரீராமரின் புகழை நிலை நாட்டும் விதமாக வாதாடுகிறார்.
1.ஸ்ரீராகவேந்திரர் திரைப்படத்தில் ஸ்ரீராகவேந்திரர் சைவ சிந்தாதிகளோடு புரியும் வாதத்தில், 'வரம் கொடுத்து விட்டு வலகியிருப்பது பெரிதா?
மண்ணில் மனிதனாக பிறந்து மனிதர்களோடு மனிதராக வாழ்ந்து காட்டியது பெரிதா என கேட்பார்.'
2.நெற்றிக்கண் திரைப் படத்தில் பிரகாலதரைப் போல வாழ்வது சரியா? ஸ்ரீராமரைப் போல் வாழ்வது சரியா என்ற பட்டிமன்றத்தில் ஸ்ரீராமரைப் போல வாழ்வதே சரியென்று பேசுவார்.
பிரகலாதர் தான் சரியென்று பேசுபவர் ராமரெல்லாம் அந்தக் காலத்து கதாபாத்திரம் அவரை இப்பொழுது பின் பற்ற முடியாது என்று கூறுவிட்டு அமர்வார்.
ரஜினிகாந்த் 'ஸ்ரீராமர் ஏகபத்தினி விரதனாக வாழ்ந்தவர். அவர் மனிதர்கள் அனைவருக்கும் உதாரண புருஷர். அவரைப் பின்பற்றி வாழ்ந்தால் குடும்பங்களில் நிம்மதியும் ஆனந்ததமும் நிலவும் எனக் கூறுவார். பிறகு ராமரை அந்தக் காலத்து கதாபாத்திரம் என்று கூறுபவர்கள் அதற்கும் முந்தைய கால கட்டத்தில் வாழ்ந்த பிரகலாதரை பற்றி பேச வந்திருக்கக் கூடாது என கூறுவார்.
ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் தன் பெண் குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லிக் கேட்டிருக்கிறார். ரஜினிகாந்த அந்த பெண்ணிற்கு 'சீதா' என்று பெயர் வைத்திருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு முன் இது நடந்திருக்கிறது. சமீபத்தில் அந்தப் பெண் சூர்யாவின் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இதைக் கூறினார்.
இதிலிருந்தே திரு.ரஜினிகாந்த் ஸ்ரீராமபிரான் மீதும் அன்னை சீதை மீதும் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
ராமரென்ற பெயருக்கே அளவற்ற ஆனந்தத்தை அள்ளித் தருபவர் என்று பொருள். ரஜினிகாந்தின் வெற்றியின் ரகசியமும் அதுவே தான்.
ரஜினிகாந்த் தன் ரசிகர்களுக்கு அளவற்ற ஆனந்தத்தை அள்ளித் தருகிறார். ஆதனால் ரசிகர்களும் அவருக்கு வெற்றியை அள்ளித் தருகிறார்கள்.
ரஜினிகாந்த் ஆனந்தத்தை கொடுப்பவர் என்பதற்கு என்வாழ்விலும் ஒரு சம்பவம் உள்ளது. நான் பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பொழுது எதையோ நினைத்து கவலையாக சோஃபாவில் அமர்ந்திருந்தேன். அப்பொழுது என் தம்பி வந்து தொலைக்காட்சியைத் துவக்கினான். அதில் ரஜினிகாந்த பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. அவரைப் பார்த்ததுமே ஒரு
உற்சாகம் என்னைத் தொற்றிக் கொண்டு எழுந்துவிட்டேன்.
ஒருமுறை மஹாவிஷ்ணு இந்திரனின் வஜ்ராயுதத்திற்கு தன் வலிமையை கொடுத்து ஒரு அரக்கனை கொல்லும் படி பணிப்பார். அதுபோல
ஸ்ரீராமர் தன்னுடைய ஆனந்தத்தை அள்ளித் தரும் ஆற்றலை ரஜினிகாந்திற்கு கொடுத்து விட்டார் போலிருக்கிறது.
அவருடைய பாடல்களிலும் ராமரும் சீதையும் ராமாயணமும் அவ்வப்பொழுது இடம் பெறும்.
1. ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் ராமாயணம் பாராயணம் என்று துவங்கும் பாடல்
2. தாஜ்மகாலின் காதிலே ராமகாதை கூறலாம் வாழும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம் என்றும் ஒரு பாடலில் வரும்.
3.எஜமான் படத்தில் அவர் சுயம்வரத்தில் வெற்றி பெற்று மாலையேற்கும் காட்சி, ஸ்ரீராமர் வில்லை முறித்து விட்டு அன்னை சீதையிடம் மாலை ஏற்கும் காட்சியை நினைவு படுத்தும்.
ரஜினிகாந்த் ஆஞ்சநேயர்கள் கோவில்களுக்கு சென்று அங்கு தனியாக அம்ர்ந்து ராம நாமம் ஜபிப்பார் என நண்பர் ஒருவர் கூறினார்.
நான் பனிரெண்டாவது படிக்கும் பொழுது ஆன்மீகமும் வண்ண மயமானதே என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் அவர்கள்.
விவேகானந்தர் ரஜினிகாந்த் என்ற இரு தூண்களைப் பார்த்து தான் நான் ஆன்மீகம் என்னும் கோவிலுக்குள் எட்டிப் பார்த்தேன் என்பது மிகையான வார்த்தைகளல்ல.
எங்கு பண்பு இருக்கிறதோ அங்கே ராமர் இருப்பார். எங்கு ராமர் இருக்கிறாரோ அங்கே சகல நன்மைகளும் இருக்கும்.
உச்சக் கட்ட சுவாரஸ்யம் ஒன்று உள்ளது.
துளசிதாஸரின் ஹனுமான் சாலீஸாவைத் தழுவி தமிழில் ஸ்ரீஅனுமன் புகழ் இயற்றினேன்.
அதில் ஆஞ்சநேயர் சூரியனை பழம் எனக் கருதி அதை உண்ணப் பறக்கும் காட்சியை கவிதையாக்கும் பொழுது
தானாக வந்து விழுந்த வரிகள்.
பால அனுமனாய் நீ பறப்பதைப் பார்த்தவர்
சிவந்து நிற்கும் அந்திச் சூரியன்
அனுமன் வாயில் ஜிலேபி என்றார்
அவன் திறனுக்கு இதெல்லாம் ஜுஜூபி என்றார்!
ஜெய்ஸ்ரீராம்! ஸ்ரீராமஜெயம்!!
0 comments:
Post a Comment