ராமர்செய்தபுண்ணியம் திரண்டெழுந்துவந்தது
நல்லவாசுதேவர்தேவகி பிள்ளையாகபிறந்தது
ராமர்காத்தசத்தியம் அவரைகாத்துநின்றது
கிருஷ்ணர்சொன்னசொற்களை உண்மையாக்கித்தந்தது
ஏகபத்னிவிரதனாய் ராமர்சேர்த்தபுண்ணியம்
ஏகபட்டமனைவிகளை கிருஷ்ணருக்குதந்தது
அஸ்வமேதயாகங்களில் ராமர்சேர்த்தபுண்ணியம்
கிருஷ்ணரையும்இந்திரனை வெற்றிக்கொள்ளவைத்தது
போரில்வெல்லஇந்திரனின் தேரைப்பெற்றராமரே
பார்த்தனுக்குசாரதியாய் கடனடைத்தார்கிருஷ்ணரே
அங்கதனின்தந்தையை கொல்லநேர்ந்ததாலயே
அர்ச்சுனனைநண்பனாக்கி கொஞ்சசெய்தார்கிருஷ்ணரே
நல்மனிதனாகவாழ்ந்துக்காட்ட பிறந்துவந்தராமரே
அப்படிவாழ்வதன்புண்ணியத்தை காட்டவந்தகிருஷ்ணரே
நல்மனிதனாகவாழ்ந்தபோது ராமர்பெற்றஞானத்தை
கீதையென்னும்பாடலாக பாடிவைத்தகிருஷ்ணரே
லக்ஷ்மணரின்அண்ணனாய் சேவையேற்றராமரே
பலராமரவர்தம்பியாகி சேவைசெய்தகிருஷ்ணரே
அன்புகொண்டநெஞ்சனாய் நெகிழ்ந்திருந்தராமரே
ஞானம்கொண்டகண்ணனாய் மகிழ்ந்திருந்தகிருஷ்ணரே
ஸ்ரீகிருஷ்ணபஞ்சரத்னகீதம் கிருஷ்ணஞானசோபிதம்
ஸ்ரீகிருஷ்ணபஞ்சரத்னகீதம் கிருஷ்ணநாமசேவிதம்
ஸ்ரீகிருஷ்ணபஞ்சரத்னகீதம் கிருஷ்ணபுண்யசோபிதம்
ஸ்ரீகிருஷ்ணபஞ்சரத்னகீதம் கிருஷ்ணபாதசேவிதம்
------------------------------------------------------------------------------
நேற்று சங்கடஹர் சதுர்த்தி விரதம் முடித்த பின் ஸ்ரீகிருஷ்ண பஞ்சரத்னத்தை இயற்றினேன். இது பிள்ளையார் தன் மாமாவுக்கு என் மூலமாக கொடுத்தனுப்பும் ஐந்தாவது அன்பளிப்பாகும்.
ஸ்ரீகணேஷ்ஜெயம்
ஸ்ரீகிருஷ்ணஜெயம்
ஸ்ரீராமஜெயம்!!
0 comments:
Post a Comment