கௌசல்யப் பாலகா எழுந்து வா
அவள் அதிஷ்டப் பிள்ளையே எழுந்து வா
பொழுதுப் புலர்ந்தது எழுந்து வா
ஸ்ரீராமச்சந்திரனே எழுந்து வா
வழிபடும் நேரம் வந்தது
கீழ்த்திசை ஒளிப் பெற்றது
மனிதரில் நீ உத்தமன்
மூ உலகங்கள் உனில் கொண்டவன்
கருடக் கொடியை
கொண்டு விளங்கும்
கோவிந்தா
கமலக் காந்தா
உலகமாள
வா வா வா
அன்னையே ஓ லக்ஷ்மியே
விஷ்ணு மார்பினில் நீ வாழ்கிறாய்
புலர்ந்திடும் இக்காலையில் உனக்கு
மங்களம் உண்டாகட்டும்
மதுக்கைடப அரக்கரை
அழித்தவன்
காண்பவர் மனதினைக்
கவர்பவன்
சரண் அடைந்தோர்
நம்பி வந்தோர்
புகல் அடைந்தோர்
புலம்பி நின்றோர்
செல்வம் செல்வம் செல்வம்
வளமை வாழ்க்கை ஞானம்
மகிழ்ச்சி இன்பம் இன்பம் தருபவன்
---------------------------1
இந்திராணி அரித் தொழ நிற்கிறார்
கலைமகளும் உமையும் நிற்கிறார்
ரிஷபாத்ரி தேவனின் தேவியே
உனக்கு மங்களம் மங்களம் மங்களம்
புலரொளி தமைத் தொழுதவர்
கடன்களை நலம் முடித்தவர்
அத்ரியார் முதல் முனிவர்கள்
ஏழுபேர் கொண்ட குழுவினர்
கங்கை நதியில் பூத்த பத்மம்
தருகின்றார்
ஆதிஷேஷ மலையின் தேவா
வா வா வா
முக்கண்ணன் நான்முகன்
மூவிருமுகன் அவ்விந்திரன்
திருவிக்ரமாய் நீ செய்ததை
புகழ்ந்தேற்றியே அவர் உரைக்கிறார்
பிரகஸ்பதி பஞ்சங்காங்கள் படிக்கிறார்
சேஷாச்சல தேவனே எழுந்து வா
கொட்டைப் பாக்கு
தேங்காய் வாசம்
தென்றல் தன்னில்
சுமந்து வீசும்
பூக்கள் அரும்பாய்ப் பூக்கும்
மலர்ந்தே வாசம் வீசும்
ஷேஷதேவா உனக்கு உனக்கு
மங்களம்
-----------------------------------------------2
கிளிகள் கூண்டில் விழித்தன
அவை அழகாய் பாடல் பாடின
வாழைப்பழங்கள் தின்றன
பாயசமும் கொஞ்சம் தின்றன
நாரதர் உனை துதிக்கிறார்
வீணையை நலம் இசைக்கிறார்
உன் செயல்களை அதில் உரைக்கிறார்
மொழி அழகினில் கவி படைக்கிறார்
ஒரு கையை உயர தூக்கியுன்னை
துதிக்கின்றார்
மறு கையில் தனது வீணையதை
இசைக்கின்றார்
வண்டுகள் கூட்டமாய்
அருகே குளத்திலே
அவை மொய்த்தன
தாமரை தேனினை
உனக்குக் கொடுக்கவே
அவை எடுத்தன
ஷேஷாச்சலா உனக்கு மங்களம் மங்களம்
இந்தக் காலையில் உனக்கு மங்களம் மங்களம்
கோபிப் பெண்கள்
தயிரைக் கடைய
கடையும் சத்தம்
விண்ணைப் பிளக்க
சண்டைப் போல போல
கேட்கத் தோன்றும் தோன்றும்
ஷேஷதேவா உனக்கு உனக்கு
மங்களம்
---------------------------------------3
தாமரையை மொய்த்திடும் வண்டுகள்
அவை சூரிய தேவனின் நண்பர்கள்
நீலப் பூக்களின் அழகை மிஞ்சவே
அவை ரீங்காரங்கள் செய்தன
வரம் தரும் அலை
மகளுடன் வசிக்கிறாய்
அவள் உன்னில் வசிக்கிறாள்
வரம் தரும் அலை
மகளுடன் வசிக்கிறாய்
அவள் உன்னில் வசிக்கிறாள்
உலகின் நண்பா
கருணைக் கடலே
ஸ்ரீமார்பா
வேங்கடமலையின்
இறைவா இறைவா
வா வா வா
முக்கண்ணன் நான்முகன்
சனாந்தர்கள் நீராடினார்
உனைக் காணவே
ஆவலாய் கதவருகிலே
அவர் நிற்கிறார்
வேங்கடாச்சலா உனக்கு மங்களம் மங்களம்
பல பெயர் கொண்ட உன் இருப்பிடம் மங்களம்
ஷேஷாத்ரிக்கும் கருடாத்ரிக்கும்
வேங்கடாத்ரிக்கும் நாரணாத்ரிக்கும்
விருஷபாத்ரி மலைக்கும் மலைக்கும்
விருஷாத்ரி மலைக்கும் மலைக்கும்
மங்களம் மங்களம் மங்களம்
மங்களம்
-----------------------------------------4
சிவனும் இந்த்ரனும் நிற்கிறார்
அவ் அக்னியும் யமனும் நிற்கிறார்
நைருதி வருணனும் நிற்கிறார்
குபேரனும் வாயுவும் நிற்கிறார்
இருகரம் ஒன்றாய் சேர்த்தனர்
தலைக்கு மேல் அதை உயர்த்தினர்
இருகரம் ஒன்றாய் சேர்த்தனர்
தலைக்கு மேல் அதை உயர்த்தினர்
உன்னைக் காண ஆசைகொண்டு நிற்கின்றார்
உனக்கு சேவை செய்ய ஆசைகொண்டு நிற்கின்றார்
விலங்கின தலைவர்கள்
உன் வாகனம் ஆகின்றார்
பறவைகள் தலைவனாம்
நல் கருடனும் உன் வாகனம்
வேங்கடாச்சலா உனக்கு மங்களம் மங்களம்
உன் வாகனங்கள் அனைத்துக்கும் மங்களம்
பாம்புத் தலைவன் ஆதிஷேஷன்
சிங்கத் தலைவன் சிங்கராஜன்
ஐராவதன் யானைத் தலைவன்
உச்சைச்ரவன் குதிரைத் தலைவன்
உன்னை சுமக்கும் வாய்ப்புக்காக
நிற்கிறார்
----------------------------------------------5
தேவர்கள் தலைவர்கள் வந்தனர்
நவகோள்களின் நாயகர் வந்தனர்
உனக்கு சேவை செய்து மகிழவே
கீழ் படிந்தே உனக்காய் நின்றனர்
சூரியன் சந்த்ரன் மங்களன்
நல்புதன் வியாழன் சுக்கிரன்
சூரியன் சந்த்ரன் மங்களன்
நல்புதன் வியாழன் சுக்கிரன்
ராகு கேது ராகு கேது
வந்தார்கள்
உனக்கு வந்தனங்கள் வந்தனங்கள்
தந்தார்கள்
உன் பாதத்தின் தூசியால்
உன் பக்தர்கள் புனிதராகிறார்
உன் இடத்தினை அடைந்தவர்
சொர்க்கத்தையும் வெறுக்கிறார்
வேங்கடாச்சலா உனக்கு மங்களம் மங்களம்
வேங்கடேஷ்வரா உனக்கு மங்களம் மங்களம்
சொர்க்கம் செல்ல உன்னைப் பிடித்தோர்
முக்தி வேண்டி உன்னைத் துதித்தோர்
உனை துதிக்கும் மகிழ்ச்சிக்காக
உன் கோவில் கோபுரத்தைக் காண
இம் மண்ணில் வாழும் பற்றை
விட மறுக்கிறார்
------------------------------------------6
ஸ்ரீதேவி பூதேவி தலைவனே
நல் அறத்தின் கருணையின் தலைவனே
தேவர்க் கூட்டத்தின் தலைவனே
இந்த ஞாலத்தின் ஞாலத்தின் தலைவனே
செல்வங்கள் எல்லாம் உன்னது
இவ்வண்டம் உந்தன் சொத்தது
செல்வங்கள் எல்லாம் உன்னது
இவ்வண்டம் உந்தன் சொத்தது
அனந்தன் கருடன்
உந்தன் பாதம் பூஜித்தார்
உனக்கு மங்களங்கள் மங்களங்கள்
வேங்கடேஷா
பத்மநாபனே புருஷோத்தமா
வாசுதேவனே ஸ்ரீவைகுந்தா
மாதவா ஜனார்த்தனா
சக்ரபாணியே ஸ்ரீஸ்ரீவத்சா
பாரிஜாதமாய் நீ சரணங்கள் ஏற்கிறாய்
கல்பவ்ருக்ஷ்மாய் நீ வரங்களை தருகிறாய்
உன் தேகம் எங்கும்
அழகு கொஞ்சும்
உன் முகத்தின் அழகோ
மன்மதனை மிஞ்சும்
அலைமகள் மார்பு
மலர் மொட்டாம் மொட்டாம்
அதை ரசிக்கும் உன் கண்கள் கொட்டாம்
அறத்தின் நற்புகழின் வீடே
வேங்கடேஷா உனக்கு உனக்கு மங்களம்
--------------------------------------7
மச்சமாய் கூர்மமாய் கேழலாய்
நரசிம்மமாய் விக்ரமாய் வந்தவன்
பரசுராமனாய் ராமனாய் வந்தவன்
பலராமனாய் கிருஷ்ணனாய் வந்தவன்
கல்கியாய் வர இருப்பவன்
அவதாரங்கள் பல எடுப்பவன்
கல்கியாய் வர இருப்பவன்
அவதாரங்கள் பல எடுப்பவன்
வேதம் கற்ற பிராமணர்கள்
வருகின்றார்
தங்கக் குடத்தில் கங்கை நீரை
தருகின்றார்
ஏலக்காயால் கற்பூரத்தால்
க்ராம்பாலே
நீ குளிக்கும் நீரும் காத்திருக்கு
மணத்தோடே
சூரியன் எழுகிறான்
தாமரைகளும் நன்று மலர்ந்தன
பறவைகள் குரல் எழுப்பின
வைணவர் உனை புகழ்கிறார்
பிரம்மனோடு பெருந்தவசிகள் யோகிகள்
சனாந்தர்கள் உன் இடத்தினில் நிற்கிறார்
மங்களங்கள்
அளிக்கும் பொருட்கள்
அவர்கள் கையில்
வைத்துக் கொண்டு
உந்தன் அழகைப் பார்க்க
கண்கள் ரெண்டும் பூக்க
மரங்கள் போலே அவர்கள்
நிற்கிறார்
----------------------------------------8
ஸ்ரீஸ்ரீநிவாசனே கோவிந்தா
ஒரு குற்றம் அற்ற கோவிந்தா
நல்ல மங்களம் அருளும் கோவிந்தா
இகக் கடல்மேல் பாலமே கோவிந்தா
உபநிஷத்துகள் மூலம்
உந்தன் புகழ் அறியலாம்
உன்னால் மகிழலாம்
உபநிஷத்துகள் மூலம்
உந்தன் புகழ் அறியலாம்
உன்னால் மகிழலாம்
மங்களங்கள் உனக்கு
உனக்கு வேங்கடேஷா
இந்தக்காலை உனக்கு
மங்களங்கள் வேங்கடேஷா
விருஷாச்சல தேவனே
உனக்கு சுப்ரபாதம் பாடினோம்
சுப்ரபாதத்தை மறக்காதவர்
ஞானத்தை எளிதில் அடைகிறார்
ஆறு வேதாங்கங்கள் பயின்ற நற்பலன்களும்
இவ்வுலகினில் அடைய விரும்பும் பல பலன்களும்
எளிதில் பெறுவர்
மகிழ்ந்து வாழ்வர்
செல்வம் பெறுவர்
கர்வம் அறுவர்
இன்னும் பல நன்மை நன்மை
விலகும் பல தீமை தீமை
பெறுகும் நற்செல்வம் செல்வம்
கோவிந்தா!
-----------------------------------9
ராம்ராம் கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா ராம்ராம் கோவிந்தா
ராம்ராம் கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா ராம்ராம் கோவிந்தா
கோவிந்தா ராம்ராம் கோவிந்தா
கோவிந்தா ராம்ராம் கோவிந்தா
கோவிந்தா ராம்ராம் கோவிந்தா
கோவிந்தா ராம்ராம் கோவிந்தா
ராமராம ராமராம கோவிந்தா
ராமராம ராமராம கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா ராம் கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா ராம் கோவிந்தா
கோவிந்தா ராம் கோவிந்தா ராம்ராம்
கோவிந்தா ராம் கோவிந்தா ராம்ராம்
ராம ராம்ராம்
கோவிந்தா ராம்
ராம ராம்ராம்
கோவிந்தா ராம்
ராம்ராம் கோவிந்தா ராம்ராம்
ராம்ராம் கோவிந்தா ராம்ராம்
ராம்ராம் கோவிந்தா ராம்ராம்
கோவிந்தா!
------------------------------10
ரோம ரோமமு ராம நாமமே!
ஓம் ஸ்ரீசீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமந்த் சமேத ஸ்ரீராமச் சந்திர பரப்பிரம்மணே நமஹ!
கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
- நம்மாழ்வார்
சிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோ அவ்வேத முதல் காரணன்
-கம்பராமாயணம்
எனையே கதியென்று சரணம் புகுந்தவர்
வாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு
குற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்
நன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்
-ஸ்ரீராமர்
ஸ்ரீராம காயத்ரி
ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்
ஸ்ரீ சீதா காயத்ரி
ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்
ராம பாத காயத்ரி
ஓம் ராமபாதாய வித்மஹே
ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்
வேதசாரம் கீதையே
கீதைசாரம் கிருஷ்ணரே
கிருஷ்ணர்பாதம் பற்றவே
கிருஷ்ணசாரம் கிட்டுமே
கிருஷ்ணசாரம் ராமரே
ராமர்சாரம் நாமமே
ராமநாமம் சொல்லவே
ராமர்பாதம் கிட்டுமே
ராமர்பாதம் கிட்டினால்
நன்மையாவும் கொட்டுமே
நன்மையாவும் கொட்டினால்
நன்மையாவும் கிட்டுமே
நன்மையாவும் என்கையில்
அளவு ஒன்றும் இல்லையே
அளவொன்றும் இன்றியே
நன்மையாவும் கிட்டுமே
ராமாயணம் விவசாயம்
பாகவதம் அறுவடை
ஸ்ரீராமராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!
-சிவபெருமான்
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே.- நம்மாழ்வார்
சிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோ அவ்வேத முதல் காரணன்
-கம்பராமாயணம்
எனையே கதியென்று சரணம் புகுந்தவர்
வாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு
குற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்
நன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்
-ஸ்ரீராமர்
ஸ்ரீராம காயத்ரி
ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்
ஸ்ரீ சீதா காயத்ரி
ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்
ராம பாத காயத்ரி
ஓம் ராமபாதாய வித்மஹே
ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்
வேதசாரம் கீதையே
கீதைசாரம் கிருஷ்ணரே
கிருஷ்ணர்பாதம் பற்றவே
கிருஷ்ணசாரம் கிட்டுமே
கிருஷ்ணசாரம் ராமரே
ராமர்சாரம் நாமமே
ராமநாமம் சொல்லவே
ராமர்பாதம் கிட்டுமே
ராமர்பாதம் கிட்டினால்
நன்மையாவும் கொட்டுமே
நன்மையாவும் கொட்டினால்
நன்மையாவும் கிட்டுமே
நன்மையாவும் என்கையில்
அளவு ஒன்றும் இல்லையே
அளவொன்றும் இன்றியே
நன்மையாவும் கிட்டுமே
ராமாயணம் விவசாயம்
பாகவதம் அறுவடை
ஸ்ரீராமராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!
-சிவபெருமான்
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்
-கம்பர்
நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே
-கம்பர்
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்
-கம்பர்
நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கியர்
போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்
ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்
காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்
நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்
ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்
ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-சிவவாக்கியர்
காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!
-வள்ளலார்
திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி
டில்லிக்கே ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
ஹரியாரைப் பணியச் சொன்ன
நல்ல வார்த்தை தட்டாதே
ஹரனாரை நினைக்கச் சொன்ன
அன்பு வார்த்தை தட்டாதே
சிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்
சிந்தைமிகு மானிடா
சிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு
சிவத்தை மறப்பதேனடா?
நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே
-கம்பர்
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்
-கம்பர்
நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கியர்
போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்
ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்
காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்
நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்
ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்
ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-சிவவாக்கியர்
காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!
-வள்ளலார்
திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி
டில்லிக்கே ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
ஹரியாரைப் பணியச் சொன்ன
நல்ல வார்த்தை தட்டாதே
ஹரனாரை நினைக்கச் சொன்ன
அன்பு வார்த்தை தட்டாதே
சிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்
சிந்தைமிகு மானிடா
சிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு
சிவத்தை மறப்பதேனடா?
ராம்ராம்
அம்மா பரமேஸ்வரியை
அடிபணிந்து போற்றுகிறேன்
அப்பா சதாசிவத்தை
அன்புடனே போற்றுகிறேன்
குருநாதர் கிருஷ்ணரை
கும்பிட்டே போற்றுகிறேன்
எந்தெய்வம் ராமரை
என்னுயிராய் போற்றுகிறேன்
கணிதம் தந்து அன்பு செய்த
ஈவ்ளின் மிஸ் போற்றுகிறேன்
தட்டித் தந்து தமிழ் தந்த
துரைராஜ் சார் போற்றுகிறேன்
அடித்தாலும் அன்பான
ராபர்ட் சார் போற்றுகிறேன்
என்னிலும் ஓளி கண்ட
க்ஸேவியர் சார் போற்றுகிறேன்
இன்னும் பல ஆசான்கள்
எத்தனை பேர் என் வாழ்வில்
அத்தனை பேரையும்
அடி பணிந்து போற்றுகிறேன்!
அடிபணிந்து போற்றுகிறேன்
அப்பா சதாசிவத்தை
அன்புடனே போற்றுகிறேன்
குருநாதர் கிருஷ்ணரை
கும்பிட்டே போற்றுகிறேன்
எந்தெய்வம் ராமரை
என்னுயிராய் போற்றுகிறேன்
கணிதம் தந்து அன்பு செய்த
ஈவ்ளின் மிஸ் போற்றுகிறேன்
தட்டித் தந்து தமிழ் தந்த
துரைராஜ் சார் போற்றுகிறேன்
அடித்தாலும் அன்பான
ராபர்ட் சார் போற்றுகிறேன்
என்னிலும் ஓளி கண்ட
க்ஸேவியர் சார் போற்றுகிறேன்
இன்னும் பல ஆசான்கள்
எத்தனை பேர் என் வாழ்வில்
அத்தனை பேரையும்
அடி பணிந்து போற்றுகிறேன்!
சுவாமி சின்மயானந்தர்
நன்றியுரை
சின்மையா னந்தரை சிந்தையுடன் நினைக்கிறேன்
என்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்
அவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது
நாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது
அவரென் இதயத்தில்
போட்ட விதை
மரமாகி நின்றது
இறைவனுக்காய்
பலபூக்கள்
நறுமணமாய்
பூத்தது
மனிதருக்கும்
பலகனிகள்
சுவைசத்தாய்
தந்தது
கிருஷ்ணரே அம்மரத்தை
நீரூற்றி வளர்த்தது
ராமரே அம்மரத்துக்கு
உரமாக இருந்தது
அவரைக் காணாத என் கண்கள்
என் குற்றம் செய்ததோ
அக்குற்றத்தை கரைத்திடவே
கண்ணீரை பெய்ததோ
அழுவது குற்றமென்று
அறிவுரைத்த குருவுக்கு
அழுகையில் சொட்டுகின்ற
கண்ணீரே காணிக்கை!
சுகம்பெற்ற இதயத்தின்
சோகமில்லா காணிக்கை
நன்றியால் பெருகியதால்
குற்றமில்லா காணிக்கை!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!!
என்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்
அவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது
நாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது
அவரென் இதயத்தில்
போட்ட விதை
மரமாகி நின்றது
இறைவனுக்காய்
பலபூக்கள்
நறுமணமாய்
பூத்தது
மனிதருக்கும்
பலகனிகள்
சுவைசத்தாய்
தந்தது
கிருஷ்ணரே அம்மரத்தை
நீரூற்றி வளர்த்தது
ராமரே அம்மரத்துக்கு
உரமாக இருந்தது
அவரைக் காணாத என் கண்கள்
என் குற்றம் செய்ததோ
அக்குற்றத்தை கரைத்திடவே
கண்ணீரை பெய்ததோ
அழுவது குற்றமென்று
அறிவுரைத்த குருவுக்கு
அழுகையில் சொட்டுகின்ற
கண்ணீரே காணிக்கை!
சுகம்பெற்ற இதயத்தின்
சோகமில்லா காணிக்கை
நன்றியால் பெருகியதால்
குற்றமில்லா காணிக்கை!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!!
Saturday, June 7, 2014
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கோவிந்தா ராம் கோவிந்தா ராம்ராம்
கோவிந்தா ராம் கோவிந்தா ராம்ராம்
அழகுத்தமிழில்
வேங்கடவன் திருப்பள்ளி எழுச்சி
மனம்கொள்ளைகொண்டது..
பாராட்டுக்கள்..
நன்றி மேடம்!
ராம்ராம் கோவிந்தா!
Post a Comment