CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

ஸ்ரீராமர்புகழ்

நம்மைப்போல சிரித்தவர் நம்மைப்போலே அழுதவர்
நம்மைப்போலே காதலித்து காதலோடு வாழ்ந்தவர்
இழப்புகளைக் கண்டவர் மீண்டெழுந்து வந்தவர்
உறவுகளைப் பிரிந்திருக்கும் சோகங்களை அறிந்தவர்
செல்வத்தையும் கண்டவர் ஏழ்மையையும் கண்டவர்
செல்வத்திலும் ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்தவர்

விதியென்னும் புயலிலே ஆடாத மரமல்லர்
அத்தனை புயலிலும் வீழாத மரமவர்
தன்னுயிராம் சீதையை தியாகம்செய்த மேன்மையர்
இதயத்தில் சீதையை இழக்காத ஆண்மையர்
புரிதலில்லா மக்களை பொறுத்துக்காத்த பூமியர்
புரிந்தபின் இதயத்தில் உயிரான சாமியர்

என்னுயிரும் ராமரே என்மூச்சும் ராமரே
என்னிதயம் ராமரே என்வாழ்க்கை ராமரே
என்கண்கள் ராமரே கண்மணியும் ராமரே
என் மனத்திரையில் எப்பவும் மலருமவர் ரூபமே
என் மூளை எப்பவும் துதிப்பதவர் பாதமே!

ராமர் ராமர் ஜெய ராஜா ராமர்
ராமர் ராமர் ஜெய சீதா ராமர்
ராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்
ராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்

கொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்
துறு துறு சிறுவன் தசரத ராமர்
கல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்
ஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்

இணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்
ராஜ குருவாம் பரத ராமர்
தந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்
அன்புள்ள கணவன் சீதா ராமர்

உற்ற தோழன் குகனின் ராமர்
உதவும் நண்பன் சுக்ரீவ ராமர்
தெய்வ உருவாம் அனுமத் ராமர்
ஞான சூரியன் ஜாம்பவ ராமர்

மூத்த மகனாம் சுமித்ர ராமர்
மன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்
மன்னித்தருளும் கைகேயே ராமர்
மகனே போன்றவர் ஜனக ராமர்

எளிய விருந்தினர் சபரியின் ராமர்
அபயம் அளிப்பவர் விபீஷண ராமர்
கடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர்
பாப வினாசனர் கோதண்ட ராமர்

ஆண்கள் போற்றும் ஆதர்ஷ ராமர்
பெண்கள் போற்றும் கற்புடை ராமர்
மக்கள் மகிழும் அரசுடை ராமர்
பக்தர் நெகிழும் பண்புடை ராமர்

வேள்விகள் காக்கும் காவலன் ராமர்
சாபங்கள் போக்கும் அகல்ய ராமர்
இரு மனம் இணைக்கும் கௌதம ராமர்
திருமண நாயகன் ஜானகி ராமர்

சிவ வில் முறித்த பராக்ரம ராமர்
ஹரி வில் தரித்த சத்ரிய ராமர்
கடலை வென்ற வருண ராமர்
பாலம் கண்ட சேது ராமர்

மரம் ஏழு துளைத்த தீர ராமர்
மறு நாள் வரச்சொன்ன வீர ராமர்
குறையற்ற குணமகன் வீர்ய ராமர்
குலப் புகழ் காத்த சூர்ய ராமர்

சீதையைப் பிரிந்த மக்களின் ராமர்
காதலை மறவா சீதையின் ராமர்
தாயுமானவர் லவகுச ராமர்
தாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்

கீதை தந்த கண்ணன் ராமர்
கண்ணனே வணங்கும் கண்ணிய ராமர்
சிவனை வணங்கும் பக்த ராமர்
சிவனே ஜபிக்கும் புண்ணிய நாமர்

முனிவர்கள் போற்றும் பிரம்மம் ராமர்
தவசிகள் நினைக்கும் நித்திய ராமர்
காந்தியின் கடவுள் சத்திய ராமர்
அறப் போர் பணித்த ஆண்டவன் ராமர்

ராம் ராம் என்றால் நல்லது நடக்கும்
ராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்
ராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்
ராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்

ராம் ராம் என்றால் உள்ளம் உருகும்
ராம் ராம் என்றால் உவகை பெருகும்
ராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்
ராம் ராம் என்றால் தர்மம் புரியும்

ராம் ராம் என்றால் வீரம் விளங்கும்
ராம் ராம் என்றால் வெற்றி விழையும்
ராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்
ராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்

ராம் ராம் என்றால் மனது அடங்கும்
ராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்
ராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்
ராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்

ஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்
ஒரு வைரம் போல மனதில் பதித்தால்
துன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்
இன்பம் எல்லாம் விரைவில் கூடும்

ஸ்ரீராமபுண்யஜெயம்

ஸ்ரீராமபுண்யஜெயம்

பெரிய குரு தட்சணை

தேவகிநந்தன் வசுதேவபுத்ரன்
யசோதேயன் நந்தகுமாரன்

ஆயன் மாயன் சேயன் தூயன்
இலையன் சிலையன் களையன் மலையன்
அமிழ்ந்தவன் உமிழ்ந்தவன் விழுங்கினன் முழங்கினன்
உதைத்தவன் வதைத்தவன் கதைத்தவன் சிதைத்தவன்

ஆலன் லீலன் சீலன் ஞாலன்
பாலன் வாலன் காலன் காலன்
குறும்பன் கரும்பன் இரும்பன் துரும்பன்
ஆடலன் விளையாடலன் கூடலன் குழலூதினன்

ராதையன் பூங்கோதையன்
பாதையன் நற்கீதையன்
துகிலிழுத்தவன் துகிலளித்தவன்
உடனிருப்பவன் துயரறுப்பவன்

உரலுருட்டினன் உறித்திருட்டினன்
தோலிருட்டினன் பொய்புரட்டினன்
மலையெடுத்தவன் குடைப்பிடித்தவன்
தேர்ச்செழுத்தினன் தேரழுத்தினன்

மண்ணையுண்டவன் வெண்ணையுண்டவன்
கீரையுண்டவன் தோலையுண்டவன்
அவலையுண்டவன் அகிலமுண்டவன்
அறிவுக்குவிருந்தினன் மனதுக்குமருந்தினன்

ஏகன் அனேகன் ப்ரணவன் ப்ராணன்
ஈகன் இகபரன் அரங்கன் சுரங்கன்
மயக்கினன் கலக்கினன் விளக்கினன் விளக்கினன்
லயித்தவன் ஜெயித்தவன் நழுவினன் சிறையினன்

பன்முகன் இன்முகன் நன்முகன் நாயகன்
இன்னகன் விண்ணகன் மண்ணகன் தாயகன்
இன்மனன் நன்மனன் பொன்மனன் பூமணன்
சற்குணன் பொற்குணன் நற்குணன் நாரணன்

மேஷன் ரிஷபன் மிதுனன் கடகன்
சிம்மன் கன்யன் துலான் விருச்சிகன்
தனுஷன் மகரன் கும்பன் மீனன்
கிரகன் நட்சத்திரன் நாடியன் நற்சோதிடன்

முதலையறுத்தவன் யானைவிடுத்தவன்
கஜேந்திரவரதன் நரேந்திரவதனன்
உரலையிழுத்தவன் மரத்தைவிடுத்தவன்
நளகூபரவரதன் நலமேதருவதனன்

ஆமேய்த்தவன் ஆதேய்த்தவன்
புல்லூட்டினன் பால்கூட்டினன்
ஆவருடினன் ஆதடவினன்
ஆசுற்றினன் ஆபற்றினன்

ஆவணைத்தவன் ஆவனைத்தவன்
ஆமயக்கினன் ஆயியக்கினன்
ஆவுக்கொருநண்பன் ஆவிரும்புமன்பன்
ஆமணிக்கிசைவன் ஆமணியின்னிசையன்

காளிங்கநர்த்தனன் ஆலிங்கனர்த்தனன்
ராசலீலாதாரி பரமவுபகாரி
அகயோகியன் சுகபோகியன்
தவவீரியன் சுபகாரியன்

ஸ்ரீபாண்டவதூதன் ஸ்ரீபார்த்தகீதன்
பான்சசன்யசத்தன் குருட்சேத்திரயுத்தன்
பரீட்சீத்தைமீட்டான் தற்பெருமைகாட்டான்
இஷ்டத்துக்குக்கல்யாணன் பிரம்மச்சர்யப்ரமாணன்

வாழைபோல்செழிப்பன் ஆலைமேல்மிதப்பன்
ஊழிதோறும்பிறப்பன் வாழியெனவுரைப்பன்
அருந்தருமகற்பன் பெருஞ்சத்யகவசன்
கடமையிருகண்ணன் கண்ணியகருமன்னன்

ஆனந்தசயனன் ஆனந்தநடனன்
கரும்புஜகசயனன் கரும்புஜகநடனன்
நவநீதசோரன் தங்கமணியாரன்
புன்முறுவல்காரன் கீர்த்தியபாரன்

தோப்புக்கரணன் அபிஷேகன் அலங்காரன் புகழாரன்
பொன்னாரன் பூவாரன் பல்லாரன் சொல்லாரன்
மலராரன் மல்லியாரன் முத்தாரன் மணியாரன்
தாமரையாரன் வெண்தாமரையாரன்
செண்பகமலராரன் செந்தாமரையாரன்

கலியமூர்த்தி எளியமூர்த்தி இனியமூர்த்தி புனிதமூர்த்தி
மறைமூர்த்தி மலைமூர்த்தி சத்யமூர்த்தி நித்யமூர்த்தி
வரதமூர்த்தி விரதமூர்த்தி தேவமூர்த்தி தெய்வமூர்த்தி
அன்புமூர்த்தி அகிலமூர்த்தி அண்டமூர்த்தி உண்டமூர்த்தி

கோப்ரியன் கோபிப்ரியன் ஆப்ரியன் ஆவினப்ரியன்
கோநேசன் கோதாசன் கோவாசன் கோவீசன்
கோபாலன் கோவாளன் கோவைத்தியன் கோவைத்தனன்
பால்சோறுப்ரியன் திருவெண்ணைப்ரியன்
தயிர்சாதப்ரியன் நீர்மோர்ப்ரியன்

குதிரைமுகன் கூர்மமுகன் பன்றிமுகன் சிங்கமுகன்
ராமமுகன் கிருஷ்ணமுகன் கருணைமுகன் பொறுமைமுகன்
நல்லமுகன் ஞானமுகன் வல்லமுகன் வரதமுகன்
சூர்யமுகன் சந்திரமுகன் மலர்ச்சிமுகன் குளிர்ச்சிமுகன்

திருத்துழாய்ஆரன் சதுர்வேதஆரன்
பிரபந்தஆரன் அபங்கஆரன்
திருவாய்மொழியாரன் திருப்பாவைமணியாரன்
பல்லாண்டுமுத்தாரன் நாச்சியார்மொழியாரன்

திருமழிசைத்தமிழாரன் மதுரகவிமொழியாரன்
திருமாலையாரன் ஸ்ரீசுப்ரபாதன்
கொஞ்சுகுலசேகரபிஞ்சுதமிழாரன்
திருமங்கைமன்னன்பெரியமொழியாரன்

திருப்பாவையாரன் நாச்சிமொழியாரன்
திருமொழியாரன் சந்தவிருத்தாரன்
திருமாலையாரன் திருவெழுச்சியாரன்
அன்றலர்ந்ததாமரையன் சென்றுளவுமாநிறையன்
கொண்டலுடைவான்நிறத்தன் வெள்ளைமனபால்நிறத்தன்

ஸ்ரீராமானுஜஜெயம்

ஸ்ரீராமானுஜஜெயம்

இளையபெருமாள் துதி

அவர் படுக்கப்போனால் அவர் படுக்க முன்படுத்தீர்
அவர் பிறக்கப்போனால் அவர் சிறக்க பிறப்பெடுத்தீர்
அவர் மழையிலானால் நனையவிடாமல் நீர் குடையானீர்
அவர் மழையானால் சிதறவிடாமல் நீர் கூடையாவீர்

அவர் அமரப்போனால் அவர் அமர ஆசனமாய்
அவர் ஆளப்போனால் அவர் ஆள தாசனுமாய்
அவர் நிற்கப்போனால் அவர் நிற்க நீர் மேடை
உமக்கு கட்டளையாவதவர் முகக்குறிப்பு கண்ஜாடை

அவர் தமையனானால் அவர் அணைக்க நீர் தம்பி
அவர் தம்பியானால் அவரை அணைக்க நீர் தமையன்
அவர் தலைவனானால் அவருக்கு நீர் தொண்டன்
நீர் தலைவனானால் உமக்கு அவர் தொண்டன்

அவர் வேதமானால் நீர் விளக்கம்தரும் ஆசான்
அவர் கீதையானால் நீர் பொருளுரைக்கும் பாஷ்யான்
அவர் நடக்கும் பாதையெல்லாம் நீர் முன்சென்று திருத்துவீர்
அவருக்காய் உண்ணாமல் உறங்காமல் உம்மைநீர் வருத்துவீர்
பொன்ஆதிஷேஷ ராமானுஜேஷ
லக்ஷ்மண அருளாளே பலராமப் பெருமாளே
உடையவரே பாஷ்யரே உடையளவில் காஷ்யரே
எதிராஜ மூர்த்தி எண்ணற்ற கீர்த்தி

கோவிலொரு கோபுரம் சுருக்கமாய் ஏறி
நாராயண மந்திரம் முழக்கமாய் கூறி
அனைவருக்கும் மோக்ஷம் வழங்கினீர் வாரி
நரகம் புக துணிந்த பரம உபகாரி

இளையபெருமாளே உம் பாதம் போற்றி
லக்ஷ்மணப்பெருமாளே உம் சேவை போற்றி
பலராமப்பெருமாளே உம் கீர்த்தி போற்றி
ராமானுஜேஷரே உம் தொண்டு போற்றி

கிருஷ்ண பலராமரே போற்றி
பலராம கிருஷ்ணரே போற்றி
ராம லக்ஷ்மணரே போற்றி
லக்ஷ்மண ராமரே போற்றி!!

ஸ்ரீராமதூதஜெயம்

ஸ்ரீராமதூதஜெயம்

சின்ன குரு தட்சணை

அஞ்சனை பெற்ற அருந்தவப் புதல்வனே
வஞ்சனையற்ற பக்தியில் முதல்வனே
ராம பக்தியில் தன்னை இழந்திடும்
தன்னை இழப்பதில் உள்ளம் நெகிழ்ந்திடும்
நல்ல வித்தையில் நீயென் முன்னோடி
அதை நான் கற்றிட கேட்கிறேன் மன்றாடி

மீண்டும் மீண்டும் கனவில் வந்து
உள்ளம் தளரா ஊக்கம் தந்து
எனை ராம பக்தனாய் ஆக்கிய குருவே
பணிவின் துணிவின் பக்தியின் உருவே
எப்படி சொல்வேன் நன்றிகள் உனக்கு
கைம்மாறு செய்ய வக்கில்லை எனக்கு

காமக் களியாட்டம் நிறைந்த இலங்கையில்
ராக்கதர் யாவும் உறங்கும் வேளையில்
ராம தூதனாய் உள்ளே நுழைந்தாய்
ராக்கதர் ஆட்டத்தை அறவே களைந்தாய்
நான் இருந்ததனாலா நடமாடும் இலங்கையாய்
நானுறங்கும் வேளையில் என்னுள்ளே புகுந்தாய்?

ஆணவம் உள்ளவன் நானென புரிந்தும்
காடென வளர்த்த காமங்கள் தெரிந்தும்
கதையோடு எந்தன் கனவில் தோன்றினாய்
பக்தியின் விதையை சேற்றில் ஊன்றினாய்
ராவணன் மமதையை நெருப்பால் எரித்தாய்
என் மமதையை மட்டுமேன் அன்பால் கரைத்தாய்?

எண்ணுருப்பு தேய நிலத்தில் விழுகிறேன்
ராம பக்தனே உன் பாதம் தொழுகிறேன்
நீ கைகூப்பும் நிலையை மனதில் கொணர்கிறேன்
ஆணவம் அற்றல் இதுவென உணர்கிறேன்
இறை படைப்பில் உனைவிட செல்வந்தர் இல்லை
இதை உணர்ந்ததால் என்னுள் ஏழ்மைகள் இல்லை

அடியேன் பணிகிறேன் உன் பாதம் தொழுகிறேன்
இன்னொரு இமயமே உன் கால்களில் விழுகிறேன்
இவ்வுலகம் எனையும் உனைப் போல கொள்ளட்டும்
இன்னொரு அனுமன் இவனென்று சொல்லட்டும்

ஸ்ரீராமருக்காய் மலைசுமந்த உன் தோளுக்கு வணக்கம்
வெண்கல மணியணிந்த உன் வாலுக்கு வணக்கம்
ஸ்ரீராமர்புகழ் பாட நீ மீட்டும் யாழுக்கு வணக்கம்
உன்னையே தாங்கி நிற்கும் உன் காலுக்கு வணக்கம்

ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்!!

ரோம ரோமமு ராம நாமமே!

ஓம் ஸ்ரீசீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமந்த் சமேத ஸ்ரீராமச் சந்திர பரப்பிரம்மணே நமஹ!

கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே.
- நம்மாழ்வார்


சிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோ அவ்வேத முதல் காரணன்
-கம்பராமாயணம்

எனையே கதியென்று சரணம் புகுந்தவர்
வாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு
குற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்
நன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்
-ஸ்ரீராமர்

ஸ்ரீராம காயத்ரி

ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்

ஸ்ரீ சீதா காயத்ரி

ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்

ராம பாத காயத்ரி

ஓம் ராமபாதாய வித்மஹே
ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்

வேதசாரம் கீதையே
கீதைசாரம் கிருஷ்ணரே
கிருஷ்ணர்பாதம் பற்றவே
கிருஷ்ணசாரம் கிட்டுமே

கிருஷ்ணசாரம் ராமரே
ராமர்சாரம் நாமமே
ராமநாமம் சொல்லவே
ராமர்பாதம் கிட்டுமே

ராமர்பாதம் கிட்டினால்
நன்மையாவும் கொட்டுமே
நன்மையாவும் கொட்டினால்
நன்மையாவும் கிட்டுமே

நன்மையாவும் என்கையில்
அளவு ஒன்றும் இல்லையே
அளவொன்றும் இன்றியே
நன்மையாவும் கிட்டுமே

ராமாயணம் விவசாயம்
பாகவதம் அறுவடை

ஸ்ரீராமராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!
-சிவபெருமான்

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்
-கம்பர்

நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே

-கம்பர்

மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்
-கம்பர்

நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்

அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கிய
ர்

போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்

ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்

காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்

நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்

ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்

ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-
சிவவாக்கியர்

காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!
-வள்ளலார்

திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி

டில்லிக்கே ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே

ஹரியாரைப் பணியச் சொன்ன
நல்ல வார்த்தை தட்டாதே
ஹரனாரை நினைக்கச் சொன்ன
அன்பு வார்த்தை தட்டாதே

சிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்
சிந்தைமிகு மானிடா
சிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு
சிவத்தை மறப்பதேனடா?

ராம்ராம்

அம்மா பரமேஸ்வரியை
அடிபணிந்து போற்றுகிறேன்
அப்பா சதாசிவத்தை
அன்புடனே போற்றுகிறேன்
குருநாதர் கிருஷ்ணரை
கும்பிட்டே போற்றுகிறேன்
எந்தெய்வம் ராமரை
என்னுயிராய் போற்றுகிறேன்

கணிதம் தந்து அன்பு செய்த
ஈவ்ளின் மிஸ் போற்றுகிறேன்
தட்டித் தந்து தமிழ் தந்த
துரைராஜ் சார் போற்றுகிறேன்
அடித்தாலும் அன்பான
ராபர்ட் சார் போற்றுகிறேன்
என்னிலும் ஓளி கண்ட
க்ஸேவியர் சார் போற்றுகிறேன்

இன்னும் பல ஆசான்கள்
எத்தனை பேர் என் வாழ்வில்
அத்தனை பேரையும்
அடி பணிந்து போற்றுகிறேன்!

சுவாமி சின்மயானந்தர்

சுவாமி சின்மயானந்தர்
என் கீதாச்சார்யார்

நன்றியுரை

சின்மையா னந்தரை சிந்தையுடன் நினைக்கிறேன்
என்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்
அவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது
நாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது

அவரென் இதயத்தில்
போட்ட விதை
மரமாகி நின்றது

இறைவனுக்காய்
பலபூக்கள்
நறுமணமாய்
பூத்தது

மனிதருக்கும்
பலகனிகள்
சுவைசத்தாய்
தந்தது

கிருஷ்ணரே அம்மரத்தை
நீரூற்றி வளர்த்தது
ராமரே அம்மரத்துக்கு
உரமாக இருந்தது

அவரைக் காணாத என் கண்கள்
என் குற்றம் செய்ததோ
அக்குற்றத்தை கரைத்திடவே
கண்ணீரை பெய்ததோ

அழுவது குற்றமென்று
அறிவுரைத்த குருவுக்கு
அழுகையில் சொட்டுகின்ற
கண்ணீரே காணிக்கை!

சுகம்பெற்ற இதயத்தின்
சோகமில்லா காணிக்கை
நன்றியால் பெருகியதால்
குற்றமில்லா காணிக்கை!

சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!!

Monday, April 28, 2014

ஸ்ரீராமர் நற்கவசம்




பிள்ளையார் துதி!
------------
ஓமென்ற ஒரு சொல்லா
நற்செயலான பெருவல்லா
நீக்கிடு தடையெல்லா
பெருக்கிடு நல்வினை நல்லா

பா துதி
-----
சீராமர் நற்கவசம்
சீராமரருள் பெறுங்கவசம்
சீதையை சக்தியாய்
தன்னுள்ளே கொண்டது
ஆஞ்சநேயரை காவலாய்
தன்னிடம் கொண்டது
பாவுரைத்த பசுபதிக்கு
ஹரஹர சிவசிவ
பாடிவைத்த புத்தருக்கு
போற்றிகள் பலபல

பா தேவதை துதி
------------
ஸ்ரீராமச்சந்திர பரப்பிரம்மணைப் பற்றி
ஸ்ரீசீதா மஹாமாயைப் போற்றி
ஸ்ரீ ஆஞ்சநேயசுவாமியின் பாதைகள் ஒட்டி
பாமாலை படைக்கிறேன் வார்த்தைகள் கட்டி

பா தலைவர் துதி
------------
முட்டி தொடும் கையழகும்
வில் பிடித்த கரத்தழகும்
அம்பெடுத்த விரலழகும்
புஜங்களின் புடைப்பழகும்

மஞ்சள் நிற உடையழகும்
செந்தாமரை கண்ணழகும்
அன்றலர்ந்த முகத்தழகும்
அதிலுறையும் நிறைவழகும்

நல்லசீதை வீற்றிருக்கும்
சிறப்பான தொடையழகும்
சீதையை கண்டிருக்கும்
கொட்டாத இமையழகும்

மழைமுகில் மேலழகும்
பொன்மின்னல் நகையழகும்
இருளடர்ந்த சிகையழகும்
சூரியச்சுடர் முடியழகும்

கண் மூடிப் பாக்கிறேன்
காட்சியில் திளைக்கிறேன்
மகிழ்ச்சியாய் ரசிக்கிறேன்
அமிர்தமாய் புசிக்கிறேன்

ஆனந்தம் ஆனந்தம்
ராம நினைவதுவே ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம்
ராம தரிசனமும் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம்
ராம புகழ் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம்
ராம துதி ஆனந்தம்

ஆனந்த ராமரே போற்றுகிறேன் உம்மை
என்றுமும் திருவடியாய் ஏற்றிடுவீர் எம்மை
ஆதர்ஷ ராமரே போற்றுகிறேன் உம்மை
இப்பூமியில் உம்பிம்பமாய் மாற்றிடுவீர் எம்மை

ஆகாய ராமரே போற்றுகிறேன் உம்மை
அறிவளித்து ஞானியாய் ஆக்கிடுவீர் எம்மை
ஆண்டவ ராமரே போற்றுகிறேன் உம்மை
ஆவியாய் உட்புகுந்து ஆட்கொள்வீர் எம்மை

ஆளுகை ராமரே போற்றுகிறேன் உம்மை
மனதினின்று மனிதினின்று ஆண்டிடுவீர் எம்மை
ஆற்றல் மிகுராமரே போற்றுகிறேன் உம்மை
ஆபத்தில் சாமத்தில் காத்திடுவீர் எம்மை

ஆத்மார்த்த ராமரே போற்றுகிறேன் உம்மை
ஆசைகளால் தவறாமல் தடுத்திடுவீர் எம்மை
ஆத்மராம் ராமரே போற்றுகிறேன் உம்மை
புண்ணியனாய் புவியினிலே வாழவைப்பீர் எம்மை

ஆனந்தராம் ஆதர்ஷராம்
ஆகாயராம் ஆண்டவராம்
ஆளுகைராம் ஆற்றல்மிகுராம்
ஆத்மார்த்தராம் ஆத்மராம்ராம்

ராம கவசம்
---------
திருராமர் திருக்காதை
கடலனைய பெருங்காதை
அதிலிருக்கும் ஒருவார்த்தை
அமிர்தம் அத்திருவார்த்தை
அதற்கேதும் இணையில்லை
போக்காத வினையில்லை

கருநீல உடலழகர்
செம்பத்ம விழியழகர்
நற்சீதை இணையழகர்
லக்ஷ்மண துணையழகர்

இருண்டிருக்கும் கருமுடியும்
ஒளிர்ந்திருக்கும் மணிமுடியும்
ஒளிர்சூர்ய விழியழகும்
குளிர்ச்சந்திர முகத்தழகும்

வாளிருக்கும் இடையழகும்
இடையிலவ் வாளழகும்
வில்லழகும் அம்பழகும்
ஏந்தியுள்ள வடிவழகும்

அரக்கரை கொன்றொழித்து
வென்ற நற்புகழழகும்
காவலனாய் வீற்றிருக்கும்
கம்பீர மிடுக்கழகும்

பிறப்பற்று விளங்குகின்ற
தெய்வவீகப் பெருநிலையும்
மனிதருக்காய் பிறப்பெடுத்த
கருணைமிகு அருள்நிலையும்

இதயத்தில் சிலையாக்கி
ஈரத்தால் குளிப்பாட்டி
மலர்மாலை பல சூட்டி
பாடிடுவோம் ராம்போற்றி!!

காக்க காக்க கோதண்டம் காக்க
காக்க காக்க கனகவாள் காக்க
காக்க காக்க கரபுஜம் காக்க
காக்க காக்க கருணையால் காக்க

அம்புறாத்தூணியின் அம்புகள் காக்க
சர சர சரவென பறந்தெம்மை காக்க
குறியென்றும் தப்பா கூரான அம்புகள்
சர்ரென்று வந்தெம்மை சடுதியாய் காக்க

வருணனை வாட்டிய வென்சரம் காக்க
சம்சார பெருங்கடல் வற்றிட காக்க
வாலியை வீழ்த்திய ராம்சரம் காக்க
வாலாட்டிடும் கர்வத்தை வெட்டியே காக்க

தாடகையை தகர்த்த வன்சரம் காக்க
ஆணவ ஆட்டத்தை அடக்கியே காக்க
மாரீசனை வென்ற மனசரம் காக்க
மயக்கத்தை போக்கி அறிவைக் காக்க

சுபாகுவை கொன்ற சுடுசரம் காக்க
சுர்ரென்று வந்து சுகத்தை காக்க
வல்லரக்கரை கலக்கிய வாயுசரம் காக்க
உறுதியாய் வந்து உடல்நலம் காக்க

பத்துத் தலையறுத்த பலசரம் காக்க
பரபர வந்தென் பண்பினை காக்க
கும்பக்காதனைக் கொன்றக் கனிசரம்
கடகட வந்தென் கௌரவம் காக்க

மணிகள் பொறுத்திய மணிவில் காக்க
கிங்கிணி ஒலித்து கிருபையால் காக்க
வேலைப்பாட்டுடன் விளங்கும் வில்காக்க
வேகமாய் இயங்கியென் வெற்றியை காக்க

இடையில் இடம்கண்ட வாளெனை காக்க
இருட்டில் மின்னியென் நம்பிக்கைக் காக்க
இருகரம் விரிந்தென் அன்பினை காக்க
இதயம் இளகியென் தவத்தினை காக்க

ரகுவம்ச ராமர் தலையினைக் காக்க
தசரத ராமர் நெற்றியைக் காக்க
கௌசல்ய ராமர் கண்ணினைக் காக்க
கௌசிக ராமர் காதினைக் காக்க

யாகத்தை காத்தவர் நாசியைக் காக்க
லக்ஷ்மணப் பிரியர் வாயினைக் காக்க
ஞானக் கடல்ராமர் நாவினைக் காக்க
பரதஇறை ராமர் கழுத்தினைக் காக்க

தேவாஸ்திர ராமர் தோளினை காக்க
சிவாஸ்திர ராமர் புஜங்களை காக்க
சீதாநாத ராமர் கைகளை காக்க
பரசுராம ராமர் இதயத்தை காக்க

கரவதை ராமர் வயிற்றினை காக்க
ஜாம்பவ ரட்சகர் தொப்புளைக் காக்க
சுக்ரீவ ராமர் அல்லையைக் காக்க
அனுமந்த் ராமர் இடையினைக் காக்க

ரகுகுல திலகர் வலத்தொடை காக்க
ராக்கத வைரி இடத்தொடை காக்க
சேதணை ராமர் முட்டியைக் காக்க
தசமுக வதையர் முழந்தாள் காக்க

விபீஷண ராமர் பாதத்தை காக்க
ஸ்ரீராம தேவர் தேகத்தை காக்க
காக்க காக்க நோயின்றி காக்க
காக்க காக்க தாயாய்க் காக்க

ராமகவசத்தை ஓதிடும் நல்லவர்
ராமரின் சக்தி இதுவென உணர்ந்தவர்
வாழ்வர் நெடுநாள் பிள்ளைகள் பெற்று
வெற்றிகள் பெற்று ஆணவம் அற்று

ராமகவசத்தை தரித்தவர் சுற்றி
துஷ்ட சக்திகள் வராது சுற்றி
ராமநாமரை ராமபத்ரரை ராமசந்த்ரரை
விடாது போற்றி
பக்தன் புனிதனாய்ப்பெறுகிறான்
இகபர வெற்றி

ராமநாமக் கவசத்தை கழுத்தில் உறுபவன்
மூவுலக ஆற்றல்கள் முழுவதும் பெறுபவன்
ராமகவசத்துள்  வைரக்கூடென உறைபவன்
எவரும் தட்டா வார்த்தையை உறைப்பவன்

புத்தகௌசிகர் கனவில் சிவனார் உரைத்தது
அக்காலைக் கௌசிகர் எழுத்தில் விதைத்தது
இதுவே இக்கவசம் உருவான காதை
எனவே இதொழிக்கும் சகல உபாதை

கற்பக மரமாய் வரங்கள் தருபவர்
நற்பாதைக் காட்ட தடைகள் களைபவர்
மூவுலகினர் பாடும் துதியை ஏற்பவர்
சீராமரே எங்கள் உயிராய் இருப்பவர்

இளமை அழகு வீரம் ஞானம்
அகன்ற கண்ணோ மலர்ந்த பத்மம்
மரவுரி தரித்த மரகத தேகம்
தேகம் காக்க காய்கனி விரதம்
இளைஞராய் இருந்தும் சிற்றின்ப துறவும்
இளவரசராய் இருந்தும் அருந்தவ உறவும்
எளிமை அழகுடன் வாழ்ந்த தசரத புத்திரர்
ராமலக்ஷ்மரைப் பணிந்தவர் என்றுமே பத்திரர்

சகல உயிரையும் கண்ணென காப்பவர்
வில்லாள வீரரில் முன்னணி நிற்பவர்
ராக்கதர் வம்சத்தை வேரோடு அகழ்பவர்
ரகுவம்ச வரிசையில் திலகராய் திகழ்பவர்
எண்ணிக்கைக் குறையா அம்புறாத்தூணியர்
வலக்கரம் சரம்தொடும் ஆயத்த பாணியர்
வாழ்க்கைக்கும் வழிக்கும் விளக்காய் நிற்பவர்
ராமலக்ஷ்மரைப் பணிந்தவர் என்றுமே பத்திரர்

கௌசல்ய தசரதர் இருஇதய உலகர்
ரகுராஜ வம்சத்தின் நெற்றியொரு திலகர்
வில்லம்பு தரித்தவர் கேடயவாள் பிடித்தவர்
ஆயத்த யுவர்கள் ஸ்ரீராம லக்ஷ்மணர்கள்
எம்மிதய சொத்து ராமரெமை காக்க
அவரிதய சொத்து லக்ஷ்மரும் காக்க

ரகுவம்ச தீபம் திருவீரராமர்
சர்வசெயல்வல்லர் திருத்தமொருரூபர்
தசரதபுத்ரர் கௌசல்யைபுத்ரர்
என்றுமவர் துணைவர் திருலக்ஷ்மபத்ரர்
வேதத்தின் விளக்கம் யாகத்தீ தெய்வம்
தொல்புகழ் லட்சம் சிறப்புகளின் உச்சம்
சீதையின் உயிர் வீரத்தின் உடல்

தமைப்பற்றும் பக்தர்க்கு சிவனார் சொல்கிறார்
சீராமரை இப்படித் துதிக்கச் சொல்கிறார்
அஸ்வமேத புண்ணியம் கிட்டும் என்கிறார்
சந்தேகம் விட்டு நம்பவே சொல்கிறார்

தாமரைக்கண்ணர் மஞ்சளுடையாளர்
பச்சைப்புல்லிலை கருநிற ராமர்
புகழை என்றும் பாடிடும் வாணர்
பூபந்தம் அறுந்து ஆவர் வானர்

லக்ஷ்மணத் தமையர் ரகுவம்சத் திலகர்
சீதையின் நாதர் அழகிய அழகர்
அன்பின் ஆழ்கடல் அறத்தின் புதையல்
மதமதை மதிப்பவர் மனதினில் நிலைத்தவர்
அரசர்க்கு அரசர் அருஞ்சத்ய விரதர்
தசரதர் மைந்தனர் மேனியில் மையினர்
திருசாந்தப் புனிதர் ஆதர்ஷ மனிதர்
ரகுவம்சமகுடம் ராவணமரணம்

சீதாமணாளரே மதியின் குணாளரே
ரகுவம்ச சுவாமியே ஆருயிர் ராமரே
வணக்கம் வணக்கம் பல வணக்கம்

ரகுவம்ச அரசருக்கு இனியதொரின்பம்
அக்ரம அரசர்க்கு அவரொரு துன்பம்
பரதநம்பிக்கு அணைத்திடும் அண்ணன்
அடிதொடும் எனக்கோ அடைக்கல நன்னன்

ஸ்ரீராமச்சந்திரர் பாதத்தை என்றும் மனதால்
நினைத்துப் போற்றுகிறேன்
ஸ்ரீராமச்சந்திரர் பாதத்தை என்றும் சொல்லால்
புகழ்ந்துப் போற்றுகிறேன்
ஸ்ரீராமச்சந்திரர் பாதத்தை என்றும் தலையால்
தொட்டுப் போற்றுகிறேன்
ஸ்ரீராமச்சந்திரர் பாதமே கதியென அடிக்கீழ்
பணிந்தே போற்றுகிறேன்

தாயும் ராமரே தந்தையும் ராமரே
அருமை நண்பனும் ராமரே ராமரே
அனைத்தும் எனக்கென் அன்புக் கடலே
அன்புக் கடலவர் ராமரே ராமரே
அவரைப் போலே யாரையும் அறியேன்
அறியேன் அறியேன் உண்மையில் அறியேன்

லக்ஷ்மணத் தம்பி வலப்பக்கம் வணங்க
ஜனகரின் புதல்வி இடப்பக்கம் அணைக்க
அன்பன் அனுமனும் அவர்முன் இருக்க
ரகுவம்ச மகிழ்ச்சியை பணிந்து நான் துதிக்க

மக்களை ஈர்ப்பவர் போரில் ஜொலிப்பவர்
ரகுவம்ச மன்னர் தாமரைக் கண்ணர்
கருணை உருவரை சரணம் புகுந்தேன்
சரணம் ராமா சரணம் சரணம்
ராமா சரணம் ராமா சரணம்

மனதுக்கு இணையாய் வேகமாய் செல்பவர்
வேகத்தில் காற்றுக்கு இணையாய் இருப்பவர்
ஐந்து புலனை அடக்கத்தில் வைத்தவர்
அறிவுச் சுடர்களில் அகரமாய் இருப்பவர்
குரங்குப் படையின் தலைவராய் இருப்பவர்
காற்றின் பிள்ளை ஸ்ரீராம தூதர்
அனுமன் அவருக்கு வணக்கம் வணக்கம்
அவரடி பணிந்து அன்பாய் வணக்கம்

ராம நாமத்தை குயிலென கூவிய
வால்மீகி முனிவரே வணக்கம் வணக்கம்
ராம காதையை அழகாய்ப் பாடிய
வால்மீகி முனிவரே வணக்கம் வணக்கம்

அனைத்து ஆபத்தை அழிப்பவர் அழிப்பவர்
அனைத்து நன்மையும் அளிப்பவர் அளிப்பவர்
மக்கள் மனதினை கவரும் ராமரை
மக்கள் அறிவினை வளர்த்திடும் ராமரை
அன்புடன் அன்புடன் வணங்குகிறேன்
வணங்கியே வணங்கியே போற்றுகிறேன்

மறு ஜென்மம் எடுக்கும் காரணம் அழிக்கும்
மனதுக்கு ஆனந்தம் அளவற்று அளிக்கும்
அனைத்து செல்வமும் நிறைவாய் அளிக்கும்
மரணம் அதனை அலறவே அடிக்கும்
ராம நாமத்தின் கர்ஜனை கர்ஜனை

எங்கு இருப்பினும் அணியாய் இருப்பவர்
எங்கு இருப்பினும் ஜெயமாய் இருப்பவர்
என்றும் சீயைத் துணையாய்க் கொண்டவர்
இரவில் உலவும் அரக்கரை அழித்தவர்
அழகிய ராமரே வணக்கம் வணக்கம்
வெல்லும் ராமரே வணக்கம் வணக்கம்
செல்வ ராமரே வணக்கம் வணக்கம்
சீதையின் ராமரே வணக்கம் வணக்கம்

சரண்புக ராமரின் சரணைவிட்டால்
நமக்கு வேறு கதியில்லை
ராமரின் சேவகன் ராமரின் அடியவன்
ராமரின் நினைவில் மனதால் அமிழ்பவன்
ராமா ராமா எனை உயர்த்து
ராமா ராமா என் நிலை உயர்த்து

அழகிய முகத்தை உடையவளே
அன்பே அன்பே உமையவளே
ராமரின் பெயரைச்
சொல்லி சொல்லி
எனது மனமோ மகிழ்கிறது
ராமரின் பெயரை
ஒரு முறைச் சொல்லி
ஆயிரம் பலன்கள் அடைகிறது

வேறெந்தத் தெய்வத்தின் பெயரையுமே
ஆயிரம் முறைகள் சொன்னாலும்
ராமரின் பெயரை ஒருமுறையே
சொல்வது போலே ஆகாது

ராமரை ஏற்றிப் புத்தக் கௌசிகர்
இயற்றிய பாடல் முடிகிறது
எனது அனைத்தும் ராமரின் ராமரின்
அடியை அடியை அடைகிறது!

- ஸ்ரீராமஜெயம்--

புத்த கௌசிகர் இயற்றிய ராம ரக்ஷா ஸ்தோத்திரத்தின் தமிழாக்கம்.

ராம ரக்ஷா ஸ்தோத்திரத்தின் மொழி பெயர்ப்பை ஆங்கிலத்தில் காண இங்கே சொடுக்கவும். 




3 comments:

Manivannan Sadasivam said...

ஸ்ரீராமஜெயம்!
ஸ்ரீராமநற்கவசஜெயம்!
ஸ்ரீராமபாதஜெயம்!

இராஜராஜேஸ்வரி said...

ஸ்ரீராமச்சந்திர பரப்பிரம்மணைப் பற்றி
ஸ்ரீசீதா மஹாமாயைப் போற்றி
ஸ்ரீ ஆஞ்சநேயசுவாமியின்
பாதைகள் ஒட்டி வார்த்தைகள் கட்டி
படைத்திட்ட
பாமாலை அற்புதம்..
பாராட்டுக்கள்..!

ramesh sadasivam said...

ஸ்ரீராமஜெயம்!
ஸ்ரீராமஜெயம்!
ஸ்ரீராமஜெயம்!

ஸ்ரீராமநற்கவசஜெயம்!
ஸ்ரீராமபாதஜெயம்!

ஸ்ரீராமநற்கவசஜெயம்!
ஸ்ரீராமபாதஜெயம்!

ஸ்ரீராமநற்கவசஜெயம்!
ஸ்ரீராமபாதஜெயம்!