இசைஞானி இளையராஜா அவர்கள் ச ரி க என்கிற இந்த மூன்றே சுவரங்களை வைத்துக்
கொண்டு இசையமைத்த பாட்டினால் உந்தப்பட்டு உருவாக்கப்பட்ட காணொளி.
காணொளியின் முற்பகுதியில் ராம நாம ஜபமும் பிற்பகுதியில் ஸ்ரீராம பக்தியில் ஒரு பாடலுமுண்டு.
பாடல் வரிகள்:
என் மனதில் மனதில் ராமர்தான்
என் மனதின் திரையில் ராமர்தான்
என் வானம் எங்கும் ராமர்தான்
எனை ஆளும் ஆளும் ராமர்தான்
மறையெல்லாம் தினம் தொழ
உதவ இருப்பது எது பெயரெது
மறைகள் துதிக்கும்
எதிலும் இருக்கும்
ராமர்தான்
வழியும் கொடுக்கும்
ஒளியும் கொடுக்கும்
நாமம் தான்
என் கண்ணும் கருத்தும் ராமர்தான்
என் கண்ணின் மணியும் ராமர்தான்
என் கண்ணின் கருவிழி ராமர்தான்
என் கண்ணின் ஒளியும் ராமர்தான்
ராகவன் ஆதவன்
பிள்ளை வழியிலே
அவன் வந்தவன்
ஆயிரம் காலங்கள்
வாழும் காவியம்
அவன் தந்தவன்
தன் அன்பை எதிரிக்கும் தந்தவன்
தன் வாழ்வை உலகுக்கே தந்தவன்
நன்மை உண்மை மென்மை
வன்மை இளகும் தன்மை
ஈரம் நெஞ்சில் நெஞ்சில் கொண்டவன்
ராம்ராம் ராம்ராம் ராமர்தான்
என் இதயம் போற்றும் ராமர்தான்
என் இதயம் வாழும் ராமர்தான்
என் இதயத் தெய்வம் ராமர்தான்
உயிரினில் விதை எது
ஒளி தருவது எது இறையது
என் இதயம் வாழும்
இதயம் வாழும் சீதா ராம்
என் இதயம் ஆளும்
இதயம் ஆளும் ராஜா ராம்
4 comments:
ஸ்ரீ ராம ஜெயம்!
ஸ்ரீ சரிக ராம ஜெயம்!!
ஸ்ரீ ராம பாத ஜெயம்!!!
ஸ்ரீ ராம ஜெயம்!
ஸ்ரீ சரிக ராம ஜெயம்!!
ஸ்ரீ ராம பாத ஜெயம்!!!
காணொளி அற்புதம்...
நன்றி மேடம்! ஸ்ரீராமஜெயம்!!
Post a Comment