ராமரே அன்போடு பக்தன் நான்
எழுதுகின்ற கடிதமே
இதயத்தின் உள்ளே நீங்கள் சௌக்கியமா?
நான் வெளியில் சௌக்கியமே!
உங்களை எண்ணிப் பார்க்கையில்
மகிழ்ச்சி பொங்குது
மகிழ்ச்சி பொங்கியே கவிதை ஆகுது
ஓ ஓ
ராமரே அன்போடு பக்தன் நான்
எழுதுகின்ற கடிதமே
இதயத்தின் உள்ளே நீங்க சௌக்கியமா?
நான் வெளியில் சௌக்கியமே!
உங்கள் பேரை சொல்லி சொல்லி
நான் ஞானம் பெற்றேன் ஸ்ரீராமா ஸ்ரீராமா
உங்கள் பண்பை எண்ணி எண்ணி
நான் புனிதனானேன் ஸ்ரீராமா ஸ்ரீராமா
உங்கள் தியாகம் இன்னதென்று
எண்ண எண்ண அழுகைவந்தது
எந்தன் மகிழ்ச்சி உங்கள் நோக்கம்
என்றென்னும் போது வந்த அழுகை நின்றது
உங்கள் புகழை சொல்ல
வார்த்தை போத வில்லை
இதயம் தானே மௌனமாகுது
ஸ்ரீராமரே என்இதயவாசரே
சீதாவின் நேசரே
என்றுமே உங்கள் புகழ் பாடவே
நான் இங்கு வாழ்கிறேன்
ராம ராமராமராம் ராம ராமராம்
ராம ராமராமராம் ராம ராமராம்
2 comments:
அரசதம்...அறச்சதம்!
இது போல் இன்னும் பல கோடி ஸ்ரீ ராம மகுட சதங்களைப் படைக்க வாழ்த்துக்கள் அண்ணா :-)
ஸ்ரீராமஜெயம்! ஸ்ரீராமபாதஜெயம்!!
நன்றி மணி!
ஸ்ரீராமஜெயம்! ஸ்ரீராமபாதஜெயம்!!
Post a Comment