தந்தநத்தம் தந்தனா தந்தநத்தம் தந்தனா
பிள்ளையாரின் தத்துவத்தை சொல்லுகிறேன் கேளணா
தந்தநத்தம் தந்தனா தந்தநத்தம் தந்தனா
நல்லசெயல் ஒவ்வொன்றும் பிள்ளையாரே தானணா
நல்லசெயல் செய்யணும் நல்லசெயல் செய்யணும்
பிள்ளையாரின் அம்சமான நல்லசெயல் செய்யணும்
தீயசெயல் தள்ளணும் தீயசெயல் தள்ளணும்
கஜமுகனின் அம்சமான தீயசெயல் தள்ளணும்
தந்தநத்தம் தந்தனா தந்தநத்தம் தந்தனா
பிள்ளையாரை பற்றிமேலும் சொல்லுகிறேன் கேளணா
தந்தநத்தம் தந்தனா தந்தநத்தம் தந்தனா
கிருஷ்ணர் சொல்லும் கர்மயோகம் பிள்ளையாரே தானணா
துதிக்கையாரை துதிக்கணும் துதிக்கையாரை துதிக்கணும்
சேவைசெய்து துதிக்கவே முந்திமுந்தி குதிக்கணும்
யானையாரை வளர்க்கணும் யானையாரை வளர்க்கணும்
யானையாரின் அம்சமான கர்மயோகம் அணைக்கணும்
தந்தநத்தம் தந்தனா தந்தநத்தம் தந்தனா
அண்ணல்காந்தி தண்டிநடை பிள்ளையாரே தானணா
தந்தநத்தம் தந்தனா தந்தநத்தம் தந்தனா
மதர்தெரசா வாழ்க்கையெங்கும் பிள்ளையாரே தானணா
மண்சுமக்கும் எளியவர் மண்சுமக்கும் போதிலே
நாமும்கூட மண்சுமந்தால் நாமுங்கூட ஈசரே
பெரியபெரிய பாரங்கள் மக்கள்தாங்கும் போதிலே
நாமும்கூட தாங்கினால் நாமுங்கூட கூர்மரே
ராமபிரான் பாரணா ராமபிரான் பாரணா
ராமர்செய்த செயலெல்லாம் பிள்ளையாரே தானணா
கிருஷ்ணபிரான் பாரணா கிருஷ்ணபிரான் பாரணா
ராமர்சேர்த்த புண்ணியமாம் கிருஷ்ணபிரான் பாரணா
நல்லசெயல் செய்யணும் நல்லசெயல் செய்யணும்
ராமர்போல நாமுங்கூட நல்லசெயல் செய்யணும்
புண்ணியராய் மாறணும் புண்ணியராய் மாறணும்
கிருஷ்ணர்போல நாமுங்கூட புண்ணியராய் மாறணும்
உண்மைவார்த்தைபேசணும் உதவும்வார்த்தை பேசணும்
உதவிபல செய்யணும் நம்பியோரை காக்கணும்
பெரியவரை மதிக்கணும் சிறியவரை அணைக்கணும்
நல்லவரைப் போற்றிபோற்றி தீயவரை ஒதுக்கணும்
உடலை வலிமையாக்கணும் மனதை புனிதமாக்கணும்
புத்தி தெளிவாக்கணும் சித்திபல சேர்க்கணும்
வளையும்நேரம் வளையணும் இறுகும்நேரம் இறுகணும்
வீரமுகம் ஈரமுகம் தேவைக்கேற்ப காட்டணும்
ஈரெட்டு செயல்களை நாமுங்கூட செய்திட்டால்
நிச்சமாய் மானிடரில் நாமும்கூட ராமரே
வயதுசென்ற முதியவர் பாரம்சுமக்கும் போதிலே
பாரம்பெற்று நாம்சுமந்தால் நாமும் ஆஞ்சநேயரே
ராமஹரே ராமராம் ராமஹரே ராமராம்
நல்லமக்கள் பூமியிலே நல்லசெயல் செய்வராம்
ராமஹரே ராமராம் ராமஹரே ராமராம்
நல்லமக்கள் பூமியையே சொர்க்கமாக செய்வராம்!
0 comments:
Post a Comment