CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

ஸ்ரீராமர்புகழ்

நம்மைப்போல சிரித்தவர் நம்மைப்போலே அழுதவர்
நம்மைப்போலே காதலித்து காதலோடு வாழ்ந்தவர்
இழப்புகளைக் கண்டவர் மீண்டெழுந்து வந்தவர்
உறவுகளைப் பிரிந்திருக்கும் சோகங்களை அறிந்தவர்
செல்வத்தையும் கண்டவர் ஏழ்மையையும் கண்டவர்
செல்வத்திலும் ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்தவர்

விதியென்னும் புயலிலே ஆடாத மரமல்லர்
அத்தனை புயலிலும் வீழாத மரமவர்
தன்னுயிராம் சீதையை தியாகம்செய்த மேன்மையர்
இதயத்தில் சீதையை இழக்காத ஆண்மையர்
புரிதலில்லா மக்களை பொறுத்துக்காத்த பூமியர்
புரிந்தபின் இதயத்தில் உயிரான சாமியர்

என்னுயிரும் ராமரே என்மூச்சும் ராமரே
என்னிதயம் ராமரே என்வாழ்க்கை ராமரே
என்கண்கள் ராமரே கண்மணியும் ராமரே
என் மனத்திரையில் எப்பவும் மலருமவர் ரூபமே
என் மூளை எப்பவும் துதிப்பதவர் பாதமே!

ராமர் ராமர் ஜெய ராஜா ராமர்
ராமர் ராமர் ஜெய சீதா ராமர்
ராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்
ராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்

கொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்
துறு துறு சிறுவன் தசரத ராமர்
கல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்
ஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்

இணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்
ராஜ குருவாம் பரத ராமர்
தந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்
அன்புள்ள கணவன் சீதா ராமர்

உற்ற தோழன் குகனின் ராமர்
உதவும் நண்பன் சுக்ரீவ ராமர்
தெய்வ உருவாம் அனுமத் ராமர்
ஞான சூரியன் ஜாம்பவ ராமர்

மூத்த மகனாம் சுமித்ர ராமர்
மன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்
மன்னித்தருளும் கைகேயே ராமர்
மகனே போன்றவர் ஜனக ராமர்

எளிய விருந்தினர் சபரியின் ராமர்
அபயம் அளிப்பவர் விபீஷண ராமர்
கடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர்
பாப வினாசனர் கோதண்ட ராமர்

ஆண்கள் போற்றும் ஆதர்ஷ ராமர்
பெண்கள் போற்றும் கற்புடை ராமர்
மக்கள் மகிழும் அரசுடை ராமர்
பக்தர் நெகிழும் பண்புடை ராமர்

வேள்விகள் காக்கும் காவலன் ராமர்
சாபங்கள் போக்கும் அகல்ய ராமர்
இரு மனம் இணைக்கும் கௌதம ராமர்
திருமண நாயகன் ஜானகி ராமர்

சிவ வில் முறித்த பராக்ரம ராமர்
ஹரி வில் தரித்த சத்ரிய ராமர்
கடலை வென்ற வருண ராமர்
பாலம் கண்ட சேது ராமர்

மரம் ஏழு துளைத்த தீர ராமர்
மறு நாள் வரச்சொன்ன வீர ராமர்
குறையற்ற குணமகன் வீர்ய ராமர்
குலப் புகழ் காத்த சூர்ய ராமர்

சீதையைப் பிரிந்த மக்களின் ராமர்
காதலை மறவா சீதையின் ராமர்
தாயுமானவர் லவகுச ராமர்
தாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்

கீதை தந்த கண்ணன் ராமர்
கண்ணனே வணங்கும் கண்ணிய ராமர்
சிவனை வணங்கும் பக்த ராமர்
சிவனே ஜபிக்கும் புண்ணிய நாமர்

முனிவர்கள் போற்றும் பிரம்மம் ராமர்
தவசிகள் நினைக்கும் நித்திய ராமர்
காந்தியின் கடவுள் சத்திய ராமர்
அறப் போர் பணித்த ஆண்டவன் ராமர்

ராம் ராம் என்றால் நல்லது நடக்கும்
ராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்
ராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்
ராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்

ராம் ராம் என்றால் உள்ளம் உருகும்
ராம் ராம் என்றால் உவகை பெருகும்
ராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்
ராம் ராம் என்றால் தர்மம் புரியும்

ராம் ராம் என்றால் வீரம் விளங்கும்
ராம் ராம் என்றால் வெற்றி விழையும்
ராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்
ராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்

ராம் ராம் என்றால் மனது அடங்கும்
ராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்
ராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்
ராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்

ஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்
ஒரு வைரம் போல மனதில் பதித்தால்
துன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்
இன்பம் எல்லாம் விரைவில் கூடும்

ஸ்ரீராமபுண்யஜெயம்

ஸ்ரீராமபுண்யஜெயம்

பெரிய குரு தட்சணை

தேவகிநந்தன் வசுதேவபுத்ரன்
யசோதேயன் நந்தகுமாரன்

ஆயன் மாயன் சேயன் தூயன்
இலையன் சிலையன் களையன் மலையன்
அமிழ்ந்தவன் உமிழ்ந்தவன் விழுங்கினன் முழங்கினன்
உதைத்தவன் வதைத்தவன் கதைத்தவன் சிதைத்தவன்

ஆலன் லீலன் சீலன் ஞாலன்
பாலன் வாலன் காலன் காலன்
குறும்பன் கரும்பன் இரும்பன் துரும்பன்
ஆடலன் விளையாடலன் கூடலன் குழலூதினன்

ராதையன் பூங்கோதையன்
பாதையன் நற்கீதையன்
துகிலிழுத்தவன் துகிலளித்தவன்
உடனிருப்பவன் துயரறுப்பவன்

உரலுருட்டினன் உறித்திருட்டினன்
தோலிருட்டினன் பொய்புரட்டினன்
மலையெடுத்தவன் குடைப்பிடித்தவன்
தேர்ச்செழுத்தினன் தேரழுத்தினன்

மண்ணையுண்டவன் வெண்ணையுண்டவன்
கீரையுண்டவன் தோலையுண்டவன்
அவலையுண்டவன் அகிலமுண்டவன்
அறிவுக்குவிருந்தினன் மனதுக்குமருந்தினன்

ஏகன் அனேகன் ப்ரணவன் ப்ராணன்
ஈகன் இகபரன் அரங்கன் சுரங்கன்
மயக்கினன் கலக்கினன் விளக்கினன் விளக்கினன்
லயித்தவன் ஜெயித்தவன் நழுவினன் சிறையினன்

பன்முகன் இன்முகன் நன்முகன் நாயகன்
இன்னகன் விண்ணகன் மண்ணகன் தாயகன்
இன்மனன் நன்மனன் பொன்மனன் பூமணன்
சற்குணன் பொற்குணன் நற்குணன் நாரணன்

மேஷன் ரிஷபன் மிதுனன் கடகன்
சிம்மன் கன்யன் துலான் விருச்சிகன்
தனுஷன் மகரன் கும்பன் மீனன்
கிரகன் நட்சத்திரன் நாடியன் நற்சோதிடன்

முதலையறுத்தவன் யானைவிடுத்தவன்
கஜேந்திரவரதன் நரேந்திரவதனன்
உரலையிழுத்தவன் மரத்தைவிடுத்தவன்
நளகூபரவரதன் நலமேதருவதனன்

ஆமேய்த்தவன் ஆதேய்த்தவன்
புல்லூட்டினன் பால்கூட்டினன்
ஆவருடினன் ஆதடவினன்
ஆசுற்றினன் ஆபற்றினன்

ஆவணைத்தவன் ஆவனைத்தவன்
ஆமயக்கினன் ஆயியக்கினன்
ஆவுக்கொருநண்பன் ஆவிரும்புமன்பன்
ஆமணிக்கிசைவன் ஆமணியின்னிசையன்

காளிங்கநர்த்தனன் ஆலிங்கனர்த்தனன்
ராசலீலாதாரி பரமவுபகாரி
அகயோகியன் சுகபோகியன்
தவவீரியன் சுபகாரியன்

ஸ்ரீபாண்டவதூதன் ஸ்ரீபார்த்தகீதன்
பான்சசன்யசத்தன் குருட்சேத்திரயுத்தன்
பரீட்சீத்தைமீட்டான் தற்பெருமைகாட்டான்
இஷ்டத்துக்குக்கல்யாணன் பிரம்மச்சர்யப்ரமாணன்

வாழைபோல்செழிப்பன் ஆலைமேல்மிதப்பன்
ஊழிதோறும்பிறப்பன் வாழியெனவுரைப்பன்
அருந்தருமகற்பன் பெருஞ்சத்யகவசன்
கடமையிருகண்ணன் கண்ணியகருமன்னன்

ஆனந்தசயனன் ஆனந்தநடனன்
கரும்புஜகசயனன் கரும்புஜகநடனன்
நவநீதசோரன் தங்கமணியாரன்
புன்முறுவல்காரன் கீர்த்தியபாரன்

தோப்புக்கரணன் அபிஷேகன் அலங்காரன் புகழாரன்
பொன்னாரன் பூவாரன் பல்லாரன் சொல்லாரன்
மலராரன் மல்லியாரன் முத்தாரன் மணியாரன்
தாமரையாரன் வெண்தாமரையாரன்
செண்பகமலராரன் செந்தாமரையாரன்

கலியமூர்த்தி எளியமூர்த்தி இனியமூர்த்தி புனிதமூர்த்தி
மறைமூர்த்தி மலைமூர்த்தி சத்யமூர்த்தி நித்யமூர்த்தி
வரதமூர்த்தி விரதமூர்த்தி தேவமூர்த்தி தெய்வமூர்த்தி
அன்புமூர்த்தி அகிலமூர்த்தி அண்டமூர்த்தி உண்டமூர்த்தி

கோப்ரியன் கோபிப்ரியன் ஆப்ரியன் ஆவினப்ரியன்
கோநேசன் கோதாசன் கோவாசன் கோவீசன்
கோபாலன் கோவாளன் கோவைத்தியன் கோவைத்தனன்
பால்சோறுப்ரியன் திருவெண்ணைப்ரியன்
தயிர்சாதப்ரியன் நீர்மோர்ப்ரியன்

குதிரைமுகன் கூர்மமுகன் பன்றிமுகன் சிங்கமுகன்
ராமமுகன் கிருஷ்ணமுகன் கருணைமுகன் பொறுமைமுகன்
நல்லமுகன் ஞானமுகன் வல்லமுகன் வரதமுகன்
சூர்யமுகன் சந்திரமுகன் மலர்ச்சிமுகன் குளிர்ச்சிமுகன்

திருத்துழாய்ஆரன் சதுர்வேதஆரன்
பிரபந்தஆரன் அபங்கஆரன்
திருவாய்மொழியாரன் திருப்பாவைமணியாரன்
பல்லாண்டுமுத்தாரன் நாச்சியார்மொழியாரன்

திருமழிசைத்தமிழாரன் மதுரகவிமொழியாரன்
திருமாலையாரன் ஸ்ரீசுப்ரபாதன்
கொஞ்சுகுலசேகரபிஞ்சுதமிழாரன்
திருமங்கைமன்னன்பெரியமொழியாரன்

திருப்பாவையாரன் நாச்சிமொழியாரன்
திருமொழியாரன் சந்தவிருத்தாரன்
திருமாலையாரன் திருவெழுச்சியாரன்
அன்றலர்ந்ததாமரையன் சென்றுளவுமாநிறையன்
கொண்டலுடைவான்நிறத்தன் வெள்ளைமனபால்நிறத்தன்

ஸ்ரீராமானுஜஜெயம்

ஸ்ரீராமானுஜஜெயம்

இளையபெருமாள் துதி

அவர் படுக்கப்போனால் அவர் படுக்க முன்படுத்தீர்
அவர் பிறக்கப்போனால் அவர் சிறக்க பிறப்பெடுத்தீர்
அவர் மழையிலானால் நனையவிடாமல் நீர் குடையானீர்
அவர் மழையானால் சிதறவிடாமல் நீர் கூடையாவீர்

அவர் அமரப்போனால் அவர் அமர ஆசனமாய்
அவர் ஆளப்போனால் அவர் ஆள தாசனுமாய்
அவர் நிற்கப்போனால் அவர் நிற்க நீர் மேடை
உமக்கு கட்டளையாவதவர் முகக்குறிப்பு கண்ஜாடை

அவர் தமையனானால் அவர் அணைக்க நீர் தம்பி
அவர் தம்பியானால் அவரை அணைக்க நீர் தமையன்
அவர் தலைவனானால் அவருக்கு நீர் தொண்டன்
நீர் தலைவனானால் உமக்கு அவர் தொண்டன்

அவர் வேதமானால் நீர் விளக்கம்தரும் ஆசான்
அவர் கீதையானால் நீர் பொருளுரைக்கும் பாஷ்யான்
அவர் நடக்கும் பாதையெல்லாம் நீர் முன்சென்று திருத்துவீர்
அவருக்காய் உண்ணாமல் உறங்காமல் உம்மைநீர் வருத்துவீர்
பொன்ஆதிஷேஷ ராமானுஜேஷ
லக்ஷ்மண அருளாளே பலராமப் பெருமாளே
உடையவரே பாஷ்யரே உடையளவில் காஷ்யரே
எதிராஜ மூர்த்தி எண்ணற்ற கீர்த்தி

கோவிலொரு கோபுரம் சுருக்கமாய் ஏறி
நாராயண மந்திரம் முழக்கமாய் கூறி
அனைவருக்கும் மோக்ஷம் வழங்கினீர் வாரி
நரகம் புக துணிந்த பரம உபகாரி

இளையபெருமாளே உம் பாதம் போற்றி
லக்ஷ்மணப்பெருமாளே உம் சேவை போற்றி
பலராமப்பெருமாளே உம் கீர்த்தி போற்றி
ராமானுஜேஷரே உம் தொண்டு போற்றி

கிருஷ்ண பலராமரே போற்றி
பலராம கிருஷ்ணரே போற்றி
ராம லக்ஷ்மணரே போற்றி
லக்ஷ்மண ராமரே போற்றி!!

ஸ்ரீராமதூதஜெயம்

ஸ்ரீராமதூதஜெயம்

சின்ன குரு தட்சணை

அஞ்சனை பெற்ற அருந்தவப் புதல்வனே
வஞ்சனையற்ற பக்தியில் முதல்வனே
ராம பக்தியில் தன்னை இழந்திடும்
தன்னை இழப்பதில் உள்ளம் நெகிழ்ந்திடும்
நல்ல வித்தையில் நீயென் முன்னோடி
அதை நான் கற்றிட கேட்கிறேன் மன்றாடி

மீண்டும் மீண்டும் கனவில் வந்து
உள்ளம் தளரா ஊக்கம் தந்து
எனை ராம பக்தனாய் ஆக்கிய குருவே
பணிவின் துணிவின் பக்தியின் உருவே
எப்படி சொல்வேன் நன்றிகள் உனக்கு
கைம்மாறு செய்ய வக்கில்லை எனக்கு

காமக் களியாட்டம் நிறைந்த இலங்கையில்
ராக்கதர் யாவும் உறங்கும் வேளையில்
ராம தூதனாய் உள்ளே நுழைந்தாய்
ராக்கதர் ஆட்டத்தை அறவே களைந்தாய்
நான் இருந்ததனாலா நடமாடும் இலங்கையாய்
நானுறங்கும் வேளையில் என்னுள்ளே புகுந்தாய்?

ஆணவம் உள்ளவன் நானென புரிந்தும்
காடென வளர்த்த காமங்கள் தெரிந்தும்
கதையோடு எந்தன் கனவில் தோன்றினாய்
பக்தியின் விதையை சேற்றில் ஊன்றினாய்
ராவணன் மமதையை நெருப்பால் எரித்தாய்
என் மமதையை மட்டுமேன் அன்பால் கரைத்தாய்?

எண்ணுருப்பு தேய நிலத்தில் விழுகிறேன்
ராம பக்தனே உன் பாதம் தொழுகிறேன்
நீ கைகூப்பும் நிலையை மனதில் கொணர்கிறேன்
ஆணவம் அற்றல் இதுவென உணர்கிறேன்
இறை படைப்பில் உனைவிட செல்வந்தர் இல்லை
இதை உணர்ந்ததால் என்னுள் ஏழ்மைகள் இல்லை

அடியேன் பணிகிறேன் உன் பாதம் தொழுகிறேன்
இன்னொரு இமயமே உன் கால்களில் விழுகிறேன்
இவ்வுலகம் எனையும் உனைப் போல கொள்ளட்டும்
இன்னொரு அனுமன் இவனென்று சொல்லட்டும்

ஸ்ரீராமருக்காய் மலைசுமந்த உன் தோளுக்கு வணக்கம்
வெண்கல மணியணிந்த உன் வாலுக்கு வணக்கம்
ஸ்ரீராமர்புகழ் பாட நீ மீட்டும் யாழுக்கு வணக்கம்
உன்னையே தாங்கி நிற்கும் உன் காலுக்கு வணக்கம்

ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்!!

ரோம ரோமமு ராம நாமமே!

ஓம் ஸ்ரீசீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமந்த் சமேத ஸ்ரீராமச் சந்திர பரப்பிரம்மணே நமஹ!

கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே.
- நம்மாழ்வார்


சிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோ அவ்வேத முதல் காரணன்
-கம்பராமாயணம்

எனையே கதியென்று சரணம் புகுந்தவர்
வாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு
குற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்
நன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்
-ஸ்ரீராமர்

ஸ்ரீராம காயத்ரி

ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்

ஸ்ரீ சீதா காயத்ரி

ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்

ராம பாத காயத்ரி

ஓம் ராமபாதாய வித்மஹே
ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்

வேதசாரம் கீதையே
கீதைசாரம் கிருஷ்ணரே
கிருஷ்ணர்பாதம் பற்றவே
கிருஷ்ணசாரம் கிட்டுமே

கிருஷ்ணசாரம் ராமரே
ராமர்சாரம் நாமமே
ராமநாமம் சொல்லவே
ராமர்பாதம் கிட்டுமே

ராமர்பாதம் கிட்டினால்
நன்மையாவும் கொட்டுமே
நன்மையாவும் கொட்டினால்
நன்மையாவும் கிட்டுமே

நன்மையாவும் என்கையில்
அளவு ஒன்றும் இல்லையே
அளவொன்றும் இன்றியே
நன்மையாவும் கிட்டுமே

ராமாயணம் விவசாயம்
பாகவதம் அறுவடை

ஸ்ரீராமராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!
-சிவபெருமான்

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்
-கம்பர்

நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே

-கம்பர்

மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்
-கம்பர்

நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்

அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கிய
ர்

போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்

ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்

காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்

நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்

ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்

ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-
சிவவாக்கியர்

காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!
-வள்ளலார்

திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி

டில்லிக்கே ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே

ஹரியாரைப் பணியச் சொன்ன
நல்ல வார்த்தை தட்டாதே
ஹரனாரை நினைக்கச் சொன்ன
அன்பு வார்த்தை தட்டாதே

சிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்
சிந்தைமிகு மானிடா
சிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு
சிவத்தை மறப்பதேனடா?

ராம்ராம்

அம்மா பரமேஸ்வரியை
அடிபணிந்து போற்றுகிறேன்
அப்பா சதாசிவத்தை
அன்புடனே போற்றுகிறேன்
குருநாதர் கிருஷ்ணரை
கும்பிட்டே போற்றுகிறேன்
எந்தெய்வம் ராமரை
என்னுயிராய் போற்றுகிறேன்

கணிதம் தந்து அன்பு செய்த
ஈவ்ளின் மிஸ் போற்றுகிறேன்
தட்டித் தந்து தமிழ் தந்த
துரைராஜ் சார் போற்றுகிறேன்
அடித்தாலும் அன்பான
ராபர்ட் சார் போற்றுகிறேன்
என்னிலும் ஓளி கண்ட
க்ஸேவியர் சார் போற்றுகிறேன்

இன்னும் பல ஆசான்கள்
எத்தனை பேர் என் வாழ்வில்
அத்தனை பேரையும்
அடி பணிந்து போற்றுகிறேன்!

சுவாமி சின்மயானந்தர்

சுவாமி சின்மயானந்தர்
என் கீதாச்சார்யார்

நன்றியுரை

சின்மையா னந்தரை சிந்தையுடன் நினைக்கிறேன்
என்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்
அவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது
நாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது

அவரென் இதயத்தில்
போட்ட விதை
மரமாகி நின்றது

இறைவனுக்காய்
பலபூக்கள்
நறுமணமாய்
பூத்தது

மனிதருக்கும்
பலகனிகள்
சுவைசத்தாய்
தந்தது

கிருஷ்ணரே அம்மரத்தை
நீரூற்றி வளர்த்தது
ராமரே அம்மரத்துக்கு
உரமாக இருந்தது

அவரைக் காணாத என் கண்கள்
என் குற்றம் செய்ததோ
அக்குற்றத்தை கரைத்திடவே
கண்ணீரை பெய்ததோ

அழுவது குற்றமென்று
அறிவுரைத்த குருவுக்கு
அழுகையில் சொட்டுகின்ற
கண்ணீரே காணிக்கை!

சுகம்பெற்ற இதயத்தின்
சோகமில்லா காணிக்கை
நன்றியால் பெருகியதால்
குற்றமில்லா காணிக்கை!

சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!!

Sunday, June 8, 2014

ஆனந்த விஷ்ணுவின் ஆயிர நாமங்கள்

















கருடாழ்வார் துதி
விநதை புத்ரனை விஷ்ணு மித்ரனை
விரிந்த நேத்ரனை விஷமச் சத்ருவை
விண்ணில் விரிந்திடும் சொர்ணச் சிறகனை
எண்ணி வியப்பவர் எதிலும் வெல்வரே!

ஆனந்த விஷ்ணுவின் ஆயிர நாமங்கள்

அ உ இ ன்
அ உ இ ள்
அ உ இ வ்
சொல் பொருள் உயிர் ஆத்மா (16)

அ அது அதன் அவன்
உ உது உதன் உவன்
இ இது இதன் இவன்
ஓம் பால் பாம்பு பரமன் (32)

ஸ்ரீராமஹரி நாராயண வாசுதேவ கிருஷ்ணா
ஸ்ரீஸ்ரீநிவாச பத்மநாப ஷேஷசாயி சுரேஷா
ஸ்ரீகமலபாத கமலநயன கமலநாப கமலேஷா
ஸ்ரீலக்ஷ்மிகாந்த பூமிநாத பிரம்மதாதா சர்வேஷா (49)

ஸ்ரீகதாதர கமலகர பாஞ்சசன்ய சுதர்ஷனேஷா
ஸ்ரீபிரம்மநேச சிவநேச தேவநேச பக்தேஷா
ஸ்ரீமணிமார்ப மாலைமார்ப மங்கைமார்ப மார்பேஷா
ஸ்ரீசுருள்கேச இருள்கேச தோள்புரள்கேச அடர்கேசா (82)

ஸ்ரீகனகக்ரீட மகரகுண்டல கனகாபர்ண கனகபாதுகேஷா
ஸ்ரீநாமதாரி ஸ்ரீமந்தகாச ஸ்ரீமஞ்சள்வஸ்திர கருணாகடாக்ஷா
ஸ்ரீசார்ங்கதாரி ஸ்ரீநந்தகதாரி ஸ்ரீசக்ரதாரி ஸ்ரீகௌமோதகேஷா
ஸ்ரீஸ்ரீவத்சமார்ப வனமாலைமார்ப ஸ்ரீவாசமார்ப ஸ்ரீகௌஸ்துபேஷா (98)

ஸ்ரீசூர்யநேத்ர ஸ்ரீசந்திரநேத்ர ஸ்ரீகருணாநேத்ர நேத்ரஜோதீஷா
ஸ்ரீசத்துவயீஷா ரஜோகாரணேஷா தமோகாரணேஷா குணகாரணேஷா
ஸ்ரீநரசிம்மமூர்த்தி ஸ்ரீவராகமூர்த்தி ஸ்ரீகருடமூர்த்தி ஸ்ரீஹனுமந்தேஷா
ஸ்ரீஹயக்ரீவமூர்த்தி ஐம்பூதவாசா ஜீவாத்மவாசா பரமாத்மயீஷா (114)

ஸ்ரீகடாக்ஷன் பங்கஜாக்ஷன் புன்டரீகாக்ஷன் மஹாக்ஷன்
சூர்யாக்ஷன் சந்திராக்ஷன் கருணாக்ஷன் பிரமராக்ஷன்
ராமாக்ஷன் கிருஷ்ணாக்ஷன் சுக்லாக்ஷன் சுபாக்ஷன்
ஜலாக்ஷன் கலாக்ஷன் ஞானாக்ஷன் பிரேமாக்ஷன் (130)

பத்மாக்ஷன் கமலாக்ஷன் மலராக்ஷன் அலராக்ஷன்
அரவிந்தாக்ஷன் சுந்தராக்ஷன் காந்தாக்ஷன் கடாக்ஷன்
அகல்யாக்ஷன் அற்புதாக்ஷன் அன்பாக்ஷன் அருளாக்ஷன்
அழகாக்ஷன் அகன்றாக்ஷன் சுத்தாக்ஷன் சுகாக்ஷன் (146)

ஸ்ரீமுரளீதர ஸ்ரீதாமோதர ஸ்ரீவேணுகோபால ஸ்ரீவேங்கடேஷா
ஸ்ரீசதுர்கரதேகா பாம்பணைநேசா பாற்கடல்வாசா நீலவண்ணேஷா
ஸ்ரீமேகவண்ண செந்தாமரைக்கண்ண செம்பவளவாய கருவண்ணகேசா
ஸ்ரீபொற்கழல்பாத பொன்மெட்டிப்பாத பொற்பாதுகாபாத பாதகங்கேஷா (158)

ஸ்ரீகௌசல்யாசுப்ரஜ தசரதநந்தன லக்ஷ்மணசோதர பரதசத்ருக்னேக்ஷா
ஸ்ரீவஷிஷ்டசிஷ்ய ஸ்ரீகௌஷிகசிஷ்ய கௌதமசகாய அகலிகவிமோக்ஷா
ஸ்ரீசுனயனமருக ஸ்ரீஜனகமருக ஸ்ரீசீதாராம ஸ்ரீஜானகீஷா
ஸ்ரீஜானகீராம ஸ்ரீகௌசல்யாராம ஸ்ரீசுமித்ராராம சுபகாரணேஷா (174)

ஸ்ரீவரதவாய ஸ்ரீவரதகைய ஸ்ரீவரதபாத ஸ்ரீவரதராஜேஷா
ஸ்ரீபவளவாய ஸ்ரீபவளகைய ஸ்ரீபவளபாத பவளபாதுகேஷா
ஸ்ரீவெண்ணைவாய மண்ணுண்டவாய அண்டமுண்டவாய ஏகவாக்கீஷா
ஸ்ரீஆலிலைபாலா ஆநிறைபாலா ஆயர்குலபாலா பக்தபாலேஷா (190)

ஸ்ரீஅன்னமூர்த்தி ஸ்ரீமச்சமூர்த்தி ஸ்ரீகூர்மமூர்த்தி ஸ்ரீவாமனேஷா
ஸ்ரீவேதாச்சார்ய ஸ்ரீகீதாச்சார்ய ஸ்ரீகலாச்சார்ய கலாகாரணேஷா
ஸ்ரீசதுர்வேதன் ஸ்ரீதனுர்வேதன் ஸ்ரீசாமவேதன் சாமகானேஷா
ஸ்ரீவேதஅருளன் ஸ்ரீவேதபொருளன் ஸ்ரீவேதரட்சக ஸ்ரீவேதாந்தேஷா (206)

ஸ்ரீரங்கமூர்த்தி ஸ்ரீரங்கநாதா ஸ்ரீரங்கமன்னா ஸ்ரீரங்கரங்கேஷா
ஸ்ரீரங்கக்கண்ணா ஸ்ரீரங்கராமா ஸ்ரீரங்கவாசா ஸ்ரீரங்கராஜேஷா
ஸ்ரீரங்கசயன குடதிசைத்தலைய குணதிசைபாத தென்திசைக்கடாக்ஷா
ஸ்ரீரங்கநேசா அகன்றதிருகண்ணா காவிரிக்கரைவாசா கோதைசொல்லீசா (222)

ஸ்ரீவைகுண்டவாச வைகுண்டராஜ வைகுண்டமன்ன ஸ்ரீவைகுண்டேஷா
ஸ்ரீயிதயவாச பக்தர்மனவாச நாரதநாவாச இதயகமலேஷா
ஸ்ரீவேதபொருளுறையன் அணுயுறைபொருளன் அண்டநிறைபொருளன் அந்தர்யாமீஷா
ஸ்ரீவிஸ்வரூப சகலபொருளுருவ சகலவுயிர்ஜீவ  சகலசர்வேஷா (238)

ஸ்ரீசகலதர்ஷி ஸ்ரீசகலவ்யாபி ஸ்ரீசகலஞானி சகலகாரணேஷா
ஸ்ரீசகலஸ்நேக ஸ்ரீசகலநேச ஸ்ரீசகலபந்து சகலகாருண்யேஷா
ஸ்ரீகருணைமூர்த்தி கருணைமலர்ப்பாத கருணைமலர்வதன கருணாநிதீஷா
ஸ்ரீகருணைச்செல்வன் திருக்கருணைச்சொல்லன் பெருங்கருணைக்கடலன்
கருணாக்காரணேஷா (254)

ஸ்ரீசுக்ரீவமித்ர ஸ்ரீபார்த்தமித்ர ஸ்ரீவேடர்குகமித்ர ஜீவமித்ரேஷா
ஸ்ரீவிபீஷணநாத சரணாகதபாத சரணாகதயிஷ்ட சரணாகதேஷா
ஸ்ரீகுசேலப்ராண பிரகலாதப்ராண ஸ்ரீதுருவப்ராண ஜீவப்ராணேஷா
பக்தபூஜிதபாத பக்தபூஜிதயிஷ்ட ஸ்ரீஅம்பரீஷப்ராண பக்தப்ராணேஷா (270)

ஸ்ரீகணேஷமாமா ஸ்ரீமுருகமாமா ஸ்ரீஐயப்பமாதா காசிநாதேஷா
ஸ்ரீலக்ஷ்மிமணாள வாணியாச்சார்ய ஸ்ரீஉமையதமைய கள்ளழகேஷா
ஸ்ரீபூமிக்கேள்வ ஸ்ரீகேழல்மூர்த்தி பூங்கோதைமாலா ரங்கமாலேஷா
ஸ்ரீமலைவாசா அலமேலுநேசா மாமல்லசயனா மல்லாண்டவீரேஷா (286)

ஸ்ரீஆழிசுழல்விரல வன்தோளிருமல்ல வில்லம்பிருக்கைய ஸ்ரீவீரவீரேஷா
ஸ்ரீகதாயுதபாணி ஸ்ரீநந்தகவாள்பாணி  ஸ்ரீசார்ங்கபாணி ஸ்ரீபாஞ்சசன்யேஷா
ஸ்ரீதர்மயுத்தன் ஸ்ரீதர்மசித்தன் ஸ்ரீதர்மசுத்தன் ஸ்ரீதர்மரக்ஷேஷா
ஸ்ரீதர்மவுபகாரி ஸ்ரீதர்மாவதாரி ஸ்ரீதர்மபரிபால ஸ்ரீதர்மகர்மேஷா (302)

உள்ளவன் உடையவன் உறைபவன் நிறைபவன்
அன்பினன் பண்பினன் அருள்பவன் தருபவன்
அறிவினன் அழகினன் மகிழ்பவன் நெகிழ்பவன்
சொல்பவன் செய்பவன் கொடுப்பவன் கொள்பவன் (318)

இதயன் இதயமலர்வாசன் இதயவிசாலன் இதயவிலாசன்
உதயன் உதயமலைசூர்யன் சூர்யப்ரகாசன் ஸ்ரீசூர்யயீசன்
உள்ளத்தவன் வெல்லத்தவன் கரும்பினன் இரும்பினன்
அருவினன் உருவினன் உறவினன் உணர்வினன் (334)

அன்பன் அழகன் அறிஞன் கவிஞன்
ரசிகன் நடிகன் கண்ணன் கலைஞன்
பண்பன் நண்பன் இடையன் இறையன்
செல்வன் வெல்வன் படையன் மறையன் (350)

பற்றினன் பற்றற்றினன் உற்றவன் மற்றற்றினன்
உயர்ந்தவன் மலர்ந்தவன் வளர்ந்தவன் அளந்தவன்
சுருங்கினன் பெருகினன் உதவினன் உறங்கினன்
நெருங்கினன் விலகினன் மறைபவன் தெரிபவன் (366)

அருளினன் பொருளினன் இருளினன் ஒளியினன்
அயர்விலன் தளர்விலன் பிறனிலன் முரணிலன்
உயிருளன் உணர்வுளன் உறவுளன் முரணுளன்
பிறப்பிலன் இறப்பிலன் மறப்பிலன் வெறுப்பிலன் (382)

படைப்பவன் துடைப்பவன் பொறுப்பவன் இருப்பவன்
விதைப்பவன் வளர்ப்பவன் துவைப்பவன் மடிப்பவன்
களைபவன் வளைபவன் முயல்பவன் முடிப்பவன்
நனைபவன் குளிர்பவன் நினைப்பவன் மறப்பவன் (398)

புகழுடையான் பெயருடையான் திருவுடையான் மருவுடையான்
வலுவுடையான் வடிவுடையான் வளமுடையான் நலமுடையான்
குணமுடையான் கொடையுடான் படையுடையான் விடையுடையான்
விண்ணுடையான் மண்ணுடையான் பொன்னுடையான் பொறையுடையான் (414)

நல்லவன் வல்லவன் கொண்டவன் கொடுத்தவன்
கொற்றவன் பெற்றவன் கற்றவன் செற்றவன்
துணிந்தவன் பணிந்தவன் முனிந்தவன் தணிந்தவன்
விருந்தினன் அருந்தினன் மருந்தினன் பருந்தினன் (430)

உத்தமன் வித்தகன் வாமனன் விக்ரமன்
சத்தியன் சத்துவன் காரணன் பூரணன்
வானவன் ஆனவன் ஆவினன் ஆண்டவன்
ஆதவன் மாதவன் சந்திரன் இந்திரன் (444)

ஆதியன் அந்தன் இடையன் இமயன்
சிங்கன் கருடன் அரசன் ஈசன்
குமரன் குபேரன் நெருப்பன் சுரப்பன்
அகரன் கடலன் அனந்தன் வசந்தன் (460)

மதன் பதன் இதன் மிதன்
பரன் சுரன் தரண் அரன்
யமன் பலன் உளன் இலன்
நலன் பலன் சுபன் சுகன் (476)

மிதப்பவன் பறப்பவன் பிறப்பவன் சிறப்பவன்
எடுப்பவன் தொடுப்பவன் தடுப்பவன் படுப்பவன்
அடைப்பவன் விடுப்பவன் அணைப்பவன் பிணைப்பவன்
பிரிப்பவன் சேர்ப்பவன் சிரிப்பவன் ஏற்பவன் (492)

அமலன் விமலன் நிமலன் கமலன்
அதிபன் அதிகன் அகிலன் முகிலன்
மதியன் விதியன் புதியன் முதியன்
விழியன் வழியன் இனியன் கனியன் (498)

சுத்தன் சித்தன் சத்தன் அத்தன்
அருவன் உருவன் ஒருவன் சிறுவன்
கரியன் அரியன் சரியன் விரியன்
களியன் எளியன் கலியன் காலன் (514)

யுவன் யுகன் பவன் பகன்
அகன் புதன் தவன் தனன்
லவன் லகன் லசன் நிசன்
வரன் வசன் கணன் குணன் (530)

மனத்தவன் மணத்தவன் சினத்தவன் குணத்தவன்
வசிப்பவன் ரசிப்பவன் பசிப்பவன் புசிப்பவன்
சுமப்பவன் சமைப்பவன் இசைப்பவன் இயல்பினன்
கடப்பவன் கிடப்பவன் கேட்பவன் காப்பவன் (546)

வள்ளுவன் வியாசன் வசிஷ்டன் சிஷ்டன்
இஷ்டன் நிஷ்டன் த்ரிஷ்டன் ப்ரதிஷ்டன்
இனிப்பன் கசப்பன் கணக்கன் இணக்கன்
தகப்பன் தகிப்பன் பகுப்பன் வகுப்பன் (562)

அண்மையன் உண்மையன் நன்மையன் பன்மையன்
கண்ணியன் புண்ணியன் எண்ணியன் பண்ணியன்
பள்ளியன் துள்ளியன் சொல்லியன் வில்லியன்
வானன் மோனன் வாகனன் மோகனன் (578)

சூரியன் சீரியன் வீரியன் வெற்றியன்
ஆதியன் ஜோதியன் அகன்றவன் பகன்றவன்
பகலவன் சகலவன் அலகிலன் அளவிலன்
பூர்வன் அபூர்வன் தேகன் விதேகன் (594)

பசுமையன் பழமையன் வண்ணன் மன்னன்
புதுமையன் பதுமையன் திண்ணன் நன்னன்
தன்மையன் தண்மையன் மாசிலான் பேசிலான்
இன்மையன் மறுமையன் இனிமையன் தனிமையன் (610)

ஐராவதன் உச்சஸ்ரவன் மேருகிரி ஏழுகிரி
நாரதன் சித்ரதன் பிருகுமுனி கபிலமுனி
வாசுகி பேரிடி கங்கைநீர் மகரமீன்
ஏகாதசி நெல்லிக்கனி வெண்ணை நீர்மோர் (626)

ஆயன் மாயன் சேயன் தூயன்
இலையன் சிலையன் களையன் மலையன்
அமிழ்ந்தவன் உமிழ்ந்தவன் விழுங்கினன் முழங்கினன்
உதைத்தவன் வதைத்தவன் கதைத்தவன் சிதைத்தவன் (644)

ஆலன் லீலன் சீலன் ஞாலன்
பாலன் வாலன் காலன் காலன்
குறும்பன் கரும்பன் இரும்பன் துரும்பன்
ஆடலன் விளையாடலன் கூடலன் குழலூதினன் (660)

துகிலவன் முகிலவன் நர்த்தனன் பரிவர்த்தனன்
துயிலவன் ஒயிலவன் யுத்தனன் மல்யுத்தனன்
பலவேலையன் மலர்மாலையன்
சிகைசுருளினன் மயில்சிறகினன் (672)

ராதையன் பூங்கோதையன்
பாதையன் நற்கீதையன்
துகிலிழுத்தவன் துகிலளித்தவன்
உடனிருப்பவன் துயரறுப்பவன் (680)

உரலுருட்டினன் உறித்திருட்டினன்
தோலிருட்டினன் பொய்புரட்டினன்
மலையெடுத்தவன் குடைப்பிடித்தவன்
தேர்ச்செழுத்தினன் தேரழுத்தினன் (688)

மண்ணையுண்டவன் வெண்ணையுண்டவன்
கீரையுண்டவன் தோலையுண்டவன்
அவலையுண்டவன் அகிலமுண்டவன்
அறிவுக்குவிருந்தினன் மனதுக்குமருந்தினன் (694)

ஏகன் அனேகன் ப்ரணவன் ப்ராணன்
ஈகன் இகபரன் அரங்கன் சுரங்கன்
மயக்கினன் கலக்கினன் விளக்கினன் விளக்கினன்
லயித்தவன் ஜெயித்தவன் நழுவினன் சிறையினன் (710)

பன்முகன் இன்முகன் நன்முகன் நாயகன்
இன்னகன் விண்ணகன் மண்ணகன் தாயகன்
இன்மனன் நன்மனன் பொன்மனன் பூமணன்
சற்குணன் பொற்குணன் நற்குணன் நாரணன் (726)

மேஷன் ரிஷபன் மிதுனன் கடகன்
சிம்மன் கன்யன் துலான் விருச்சிகன்
தனுஷன் மகரன் கும்பன் மீனன்
கிரகன் நட்சத்திரன் நாடியன் நற்சோதிடன் (742)

முதலையறுத்தவன் யானைவிடுத்தவன்
கஜேந்திரவரதன் நரேந்திரவதனன்
உரலையிழுத்தவன் மரத்தைவிடுத்தவன்
நளகூபரவரதன் நலமேதருவதனன் (750)

ஆமேய்த்தவன் ஆதேய்த்தவன்
புல்லூட்டினன் பால்கூட்டினன்
ஆவருடினன் ஆதடவினன்
ஆசுற்றினன் ஆபற்றினன்  (758)

ஆவணைத்தவன் ஆவனைத்தவன்
ஆமயக்கினன் ஆயியக்கினன்
ஆவுக்கொருநண்பன் ஆவிரும்புமன்பன்
ஆமணிக்கிசைவன் ஆமணியின்னிசையன் (764)

காளிங்கநர்த்தனன் ஆலிங்கனர்த்தனன்
ராசலீலாதாரி பரமவுபகாரி
அகயோகியன் சுகபோகியன்
தவவீரியன் சுபகாரியன் (772)

ஸ்ரீபாண்டவதூதன் ஸ்ரீபார்த்தகீதன்
பான்சசன்யசத்தன் குருட்சேத்திரயுத்தன்
பரீட்சீத்தைமீட்டான் தற்பெருமைகாட்டான்
இஷ்டத்துக்குக்கல்யாணன் பிரம்மச்சர்யப்ரமாணன் (780)

வாழைபோல்செழிப்பன் ஆலைமேல்மிதப்பன்
ஊழிதோறும்பிறப்பன் வாழியெனவுரைப்பன்
அருந்தருமகற்பன் பெருஞ்சத்யகவசன்
கடமையிருகண்ணன் கண்ணியகருமன்னன் (788)

ஆனந்தசயனன் ஆனந்தநடனன்
கரும்புஜகசயனன் கரும்புஜகநடனன்
நவநீதசோரன் தங்கமணியாரன்
புன்முறுவல்காரன் கீர்த்தியபாரன் (794)

கலியமூர்த்தி எளியமூர்த்தி இனியமூர்த்தி புனிதமூர்த்தி
மறைமூர்த்தி மலைமூர்த்தி சத்யமூர்த்தி நித்யமூர்த்தி
வரதமூர்த்தி விரதமூர்த்தி தேவமூர்த்தி தெய்வமூர்த்தி
அன்புமூர்த்தி அகிலமூர்த்தி அண்டமூர்த்தி உண்டமூர்த்தி (810)

கோப்ரியன் கோபிப்ரியன் ஆப்ரியன் ஆவினப்ரியன்
கோநேசன் கோதாசன் கோவாசன் கோவீசன்
கோபாலன் கோவாளன் கோவைத்தியன் கோவைத்தனன்
பால்சோறுப்ரியன் திருவெண்ணைப்ரியன்
தயிர்சாதப்ரியன் நீர்மோர்ப்ரியன் (826)

குதிரைமுகன் கூர்மமுகன் பன்றிமுகன் சிங்கமுகன்
ராமமுகன் கிருஷ்ணமுகன் கருணைமுகன் பொறுமைமுகன்
நல்லமுகன் ஞானமுகன் வல்லமுகன் வரதமுகன்
சூர்யமுகன் சந்திரமுகன் மலர்ச்சிமுகன் குளிர்ச்சிமுகன் (842)

ஸ்ரீபதி பூபதி ஆபதி கோபதி
லக்ஷ்மிபதி பூமிபதி சீதாபதி ராதாபதி
துளசிபதி தூயபதி ஆயபதி ஆயர்பதி
அண்டபதி பிண்டபதி அகிலபதி உலகபதி (858)

சுரபதி நரபதி வரபதி மருபதி
வளபதி நலபதி குணபதி குலபதி
தேவபதி ஜீவபதி மூலபதி காலபதி
வேதபதி ஞானபதி மோனபதி கானபதி (874)

கண்ணன் பூங்கண்ணன்
கருங்கண்ணன் பெருங்கண்ணன்
மலர்க்கண்ணன் அலர்க்கண்ணன்
கதிர்க்கண்ணன் குளிர்க்கண்ணன் (882)

அழகுக்கண்ணன் அகன்றக்கண்ணன்
அற்புதக்கண்ணன் அதிசயக்கண்ணன்
அரவிந்தக்கண்ணன் அருளுடைக்கண்ணன்
அன்புக்கண்ணன் அறிவுக்கண்ணன் (890)

நீலமுகன் நீலகரன் நீலகண்டன் நீலவண்ணன்
திருநீலத்தோளன் திருநீலமார்பன் திருநீலவயிறன் திருநீலபாதன்
திருநீலக்கன்னன் திருநீலமூக்கன் திருநீலகாதன் திருநீலபாதன்
திருநீலத்தாடை திருநீலத்தொடையன் திருநீலவுடலன் திருநீலதேகன் (906)

கருமுகன் கருகரன் கருகண்டன் கருவண்ணன்
கருநீலத்தோளன் கருநீலமார்பன் கருநீலவயிறன் கருநீலபாதன்
கருநீலக்கன்னன் கருநீலமூக்கன் கருநீலகாதன் கருநீலபாதன்
கருநீலத்தாடை கருநீலத்தொடையன் கருநீலவுடலன் கருநீலதேகன் (922)

ஆண்டவன் ஆள்பவன் வெகுள்பவன் அருள்பவன்
அளிப்பவன் அழிப்பவன் அடிப்பவன் அணைப்பவன்
அளப்பவன் அகல்பவன் அகன்றவன் பகன்றவன்
அருமையன் பொறுமையன் கருமையன் பெருமையன் (938)

அன்பினன் பண்பினன் அழகினன் அறிவினன்
அருளினன் பொருளினன் ஒளியினன் இருளினன்
வெளியினன் உள்ளினன் சொல்லினன் வில்லினன்
களியினன் களையினன் விழியினன் மொழியினன் (954)

முனிபவன் தணிபவன் பணிபவன் துணிபவன்
விரைபவன் நிறைபவன் கரைபவன் மறைபவன்
தருபவன் வருபவன் பகர்பவன் நகர்பவன்
நுகர்பவன் முகர்பவன் மலர்பவன் அலர்பவன் (970)

துயில்பவன் வைகுண்டத்துயிலவன் பாம்பணைத்துயிலவன் பாற்கடல்துயிலவன்
ஸ்ரீரங்கத்துயிலவன் மாமல்லத்துயிலவன் ஆதிஷேஷத்துயிலவன் லக்ஷ்மிமடித்துயிலவன்
இதயக்கமலதுயிலவன் இதயமலர்துயிலவன் இதயபத்மதுயிலவன் ஸ்ரீயிதயத்துயிலவன்
அசத்யத்துயிலவன் அழகியத்துயிலவன் அலர்ந்தத்துயிலவன் ஆனந்ததுயிலவன்(986)
சயனன் வைகுண்டசயனன் பாம்பணைசயனன் பாற்கடல்சயனன்
ஸ்ரீரங்கசயனன் மாமல்லசயனன் ஆதிஷேஷசயனன் லக்ஷ்மிமடிசயனன்
இதயக்கமலசயனன் இதயமலர்சயனன் இதயபத்மசயனன் ஸ்ரீயிதயசயனன்
அசத்யசயனன் அழகியசயனன் அலர்ந்தசயனன் ஆனந்தசயனன் (1002)
ஸ்ரீராமானுஜநேசா ஸ்ரீராமானுஜதாசா ஸ்ரீராமானுஜவாசா ஸ்ரீராமானுஜேஷா
ஸ்ரீஹனுமந்த்நேச ஸ்ரீஹனுமந்த்தாச ஸ்ரீஹனுமந்த்வாச ஸ்ரீஹனுமந்தீசா
ஸ்ரீதுளசிநேசா ஸ்ரீதுளசிதாசா ஸ்ரீதுளசிவாசா ஸ்ரீதுளசியீஷா
ஸ்ரீகருடத்நேச ஸ்ரீகருடத்தாச ஸ்ரீகருடத்வாச ஸ்ரீகருடத்தீசா (1018)

ஸ்ரீராகவேந்திரநேச ஸ்ரீராகவேந்திரதாச ஸ்ரீராகவேந்திரவாச  ஸ்ரீராகவேந்திரேஷா
ஸ்ரீஆழ்வார்நேசா ஸ்ரீஆழ்வார்தாசா ஸ்ரீஆழ்வார்வாசா ஸ்ரீஆழ்வாரீசா
ஸ்ரீபாண்டவநேசா ஸ்ரீபாண்டவதாசா ஸ்ரீபாண்டவவாசா ஸ்ரீபாண்டவேஷா
ஸ்ரீபீஷ்மநேசா ஸ்ரீபீஷ்மதாசா ஸ்ரீபீஷ்மவாசா ஸ்ரீபீஷ்மயீஷா (1034)

ஸ்ரீபொய்கையார்நேச ஸ்ரீபொய்கையார்தாச ஸ்ரீபொய்கையார்வாச ஸ்ரீபொய்கையாரீசா
ஸ்ரீபூதத்தார்நேச ஸ்ரீபூதத்தார்தாச ஸ்ரீபூதத்தார்வாச ஸ்ரீபூதத்தாரீசா
ஸ்ரீபேயார்நேச ஸ்ரீபேயார்தாச ஸ்ரீபேயார்வாச ஸ்ரீபேயாரீசா
ஸ்ரீசக்கரத்தார்நேச ஸ்ரீசக்கரத்தார்தாச ஸ்ரீசக்கரத்தாவாச ஸ்ரீசக்கரத்தாரீசா (1050)

ஸ்ரீநம்மாழ்வார்நேசா ஸ்ரீநம்மார்வார்தாசா ஸ்ரீநம்மாழ்வார்வாசா ஸ்ரீநம்மாழ்வாரீசா
ஸ்ரீமதுரகவிநேசா ஸ்ரீமதுரகவிதாசா ஸ்ரீமதுரகவிவாசா ஸ்ரீமதுரகவியீசா
ஸ்ரீகுலசேகரநேசா ஸ்ரீகுலசேகரதாசா ஸ்ரீகுலசேகரவாசா ஸ்ரீகுலசேகரயீசா
ஸ்ரீபெரியாழ்வார்நேசா ஸ்ரீபெரியாழ்வார்தாசா ஸ்ரீபெரியாழ்வார்வாசா ஸ்ரீபெரியாழ்வாரீசா(1066)

ஸ்ரீகோதைநேசா ஸ்ரீகோதைதாசா ஸ்ரீகோதைவாசா ஸ்ரீகோதையீசா
ஸ்ரீதொண்டரடிநேசா ஸ்ரீதொண்டரடிதாசா ஸ்ரீதொண்டரடிவாசா ஸ்ரீதொண்டரடியீசா
ஸ்ரீபாணாழ்வார்நேசா ஸ்ரீபாணாழ்வார்தாசா ஸ்ரீபாணாழ்வார்வாசா ஸ்ரீபாணாழ்வாரீசா
ஸ்ரீமங்கைமன்னநேசா ஸ்ரீமங்கைமன்னதாசா ஸ்ரீமங்கைமன்னவாசா ஸ்ரீமங்கைமன்னேஷா (1082)

ஸ்ரீபிரகலாதநேச ஸ்ரீபிரகலாததாச ஸ்ரீபிரகலாதவாச ஸ்ரீபிரகலாதேஷா
ஸ்ரீதுருவநேச ஸ்ரீதுருவதாச ஸ்ரீதுருவவாச ஸ்ரீதுருவேஷா
ஸ்ரீகஜேந்திரநேச ஸ்ரீகஜேந்திரதாச ஸ்ரீகஜேந்திரவாச ஸ்ரீகஜேந்திரேஷா
ஸ்ரீஅம்பரீஷநேச ஸ்ரீஅம்பரீஷதாச ஸ்ரீஅம்பரீஷவாச ஸ்ரீஅம்பரீஷயீஷா (1096)

மலர்ப்பாதன் அலர்ப்பாதன் வளர்ப்பாதன் குளிர்ப்பாதன்
வன்பாதன் மென்பாதன் நன்பாதன் ஞானப்பாதன்
அருளும்பாதன் அழகுப்பாதன் புனிதபாதன் புகழுடைப்பாதன் (1108)

ஆனந்த விஷ்ணுவின் ஆயிர நாமங்களை
ஒவ்வொரு நாளும் ஓயாது சொல்பவர்
சகல நற்பண்புகளும் தம்மில் சிறக்க
சகல ஆற்றல்களும் தம்முள் பிறக்க
சகல ஞானங்களும் தம்முள் மலர
சகல செல்வங்களும் தம்மை நாட
ஆனந்தமாக வாழ்வார்களாக!
ஆனந்த விஷ்ணு இதற்கு அருள்வாராக!

ஆனந்த விஷ்ணுவின் ஆயிர நாமங்களை
சொல்ல நேரம் இல்லாதவர்கள்
ராம்ராமராமா ராம்ராமராமா ராம்ராமராமா!
என ஒரே முறை கூறி
ஆனந்த விஷ்ணுவின் ஆயிர நாமங்களை
மும்முறை சொன்ன பலன்களை அடைவார்களாக!
இந்த யுக்தியை உலகுக்கு தந்த
சிவனார் அவர்களுக்கு அருள்வாராக!
விஷ்ணு அவர்களுக்கு அருள்வாராக!!

ஜெய்ஸ்ரீராமா ஜெய்ஜெய் ஸ்ரீராமராமா
ஜெய்ஸ்ரீ மந் நாராயணா ஜெய்ஜெய் ஸ்ரீமந்நாராயணா!
ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர!! நமோ நம!!
ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர!! நமோ நம!!

2 comments:

இராஜராஜேஸ்வரி said...


"ஆனந்த விஷ்ணுவின்
ஆயிர நாமங்கள்"
அழகுத்தமிழில்
அருமையான ஆக்கம்...!

ramesh sadasivam said...

நன்றி மேடம்! :)

ஸ்ரீராமஜெயம்! ஸ்ரீராமபாதஜெயம்!!