உணவை உண்ணும் போதிலே ஜனார்தனா சொல்லடா
படுக்க போகும் போதிலே பத்மநாப நாமம் சொல்லடா
திருமணத்தின் போதிலே பிரஜாபதி என்று சொல்லடா
யுத்தம் செய்ய செல்கையில் சக்ரதாரி என்று சொல்லடா
பயணம் செய்யும் போதிலே த்ரிவிக்ரமரை சொல்லடா
மரண படுக்கை நெருங்கினால் நாராயணா சொல்லடா
வாழ்க்கை துணையை புரிந்திட ஶ்ரீதரரை சொல்லடா
கெட்ட கனவில் புரள்கையில் கோவிந்தனை சொல்லடா
நெருப்பை நெருங்கும் வேளையில் ஜெயசாயியென்று சொல்லடா
நீரில் ஆடும் போதிலே வராஹரை சொல்லடா
மலைகள் ஏறும் போதிலே ரகுநந்தனரை சொல்லடா
பிரச்சனையில் அகப்பட்டால் மதுசூதனரை சொல்லடா
வனங்களிலே திரிகையில் நரசிம்ம நாமம் சொல்லடா
கால் நடையாய் செல்கையில் வாமனரை சொல்லடா
எங்கேயும் எப்போதும் மாதவரை சொல்லடா
அதிகாலை எழுந்தவுடன் அனுதினமும் அன்புடன்
இந்த ஈரெட்டு பெயர்களை நம்பி நீயும் கூறினால்
பாவங்களும் தொலையுமே பாற்கடலும் கிட்டுமே
பி.கு: விஷ்ணு ஷோடச நாம ஸ்லோகத்தின் தமிழ் வடிவம்
0 comments:
Post a Comment