ராமநாமம் பாடும் பக்தன் நான்
என் வாழ்வின் நாதம் ராமர் பேர் தான்
ராமநாமம் பாடும் பக்தன் நான்
என் வாழ்வின் கீதம் ராமர் பேர் தான்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
உண்ணும் போதும் உறங்கும் போதும் ராம்ராம்ராம் சொல்கிறேன்
ஊர் சுற்ற செல்லும் போதும் அவர் நாமமே
ராமநாமம் பாடும் பக்தன் நான்
என் வாழ்வை ஆளும் மன்னர் ராம் தான்
ராம்ராம் ராஜா ராம்ராம்
அதிகாலை உச்சி மாலை அவர் நாமம் சொல்கிறேன்
எவ்வேலை செய்யும் போதும் அவர் நாமமே
தேன் தேடும் வண்டை போலே அவர் நாமம் சொல்கிறேன்
தேனன்றி ஒன்றும் தீண்டா வண்டாகிறேன்
எப்போதும் கரையை நாடும் அலையாக ஆகிறேன்
எண்ணத்தால் ராமபாதம் நான் தொடுகிறேன்
ஓயாத எண்ணமே ஓயாமல் சொல்லுமே
ராமராம் ராம்ராமராம் ராம்ராமராம் ராம்ராம்!
ராமநாமம் பாடும் பக்தன் நான்
என் சுவாசமாகும் ராமர் பேர் தான்
ராம்ராம் சீதா ராம்ராம்
பலவாகும் எந்தன் உள்ளம் ஒன்றாகி சொல்லுதே
உண்டாகும் இச்சையெல்லாம் துண்டாகுதே
தடுமாறும் எந்தன் உள்ளம் மலையாகி நிற்குதே
தடம் மாறும் அச்சம் அச்சம் தூளாகுதே
ஸ்ரீராமர் பேரை சொல்லும் பேரானந்தம்
சுவை கண்ட உள்ளம் நாடா வேறானந்தம்!!
ஸ்ரீராமநாமமே என் வாழ்வின் நாதமே
ராமராம் ராம்ராமராம் ராம்ராமராம் ராம்ராம்!
ராமநாமம் பாடும் பக்தன் நான்
என் வாழ்க்கை எங்கும் ராமர் புகழ் தான்
ராமநாமம் பாடும் பக்தன் நான்
என் உயிரின் நாதம் ராமர் பேர் தான்
ராம்ராம் ராஜா ராம்ராம்
தெய்வீகம் நாவில் வந்து பேராக ஆனதே
ஸ்ரீராமநாமம் என்று பேர் கொண்டதே
ராமநாமம் பாடும் பக்தன் நான்
என் வாழ்வின் நாதம் ராமர் பேர் தான்
ராம்ராம் சீதா ராம்ராம்
0 comments:
Post a Comment