பாதம் என்ன பாதம் இது பிள்ளையாரின் பாதம்
சிறப்பாக செயலதனை செய்ய வைக்கும் பாதம்
மூஞ்சூரின் மீதினிலே பயணிக்கும் பாதம்
சித்தியவள் சிந்தையில் நிலைபெற்ற பாதம்
சக்தியின் மடியினிலே மகிழ்ந்த நற்பாதம்
சிவனாரின் மடியினிலும் திகழ்ந்த நற்பாதம்
முருகரோடு ஓடியாடி விளையாண்ட பாதம்
புத்தியவள் புத்தியில் நிலைபெற்ற பாதம்
தாய் தந்தை சுற்றிவந்து கனி வென்ற பாதம்
தயையுடைய திருமாலின் மருமகனார் பாதம்
ஔவையாரின் அன்புடைய பேரனாரின் பாதம்
அன்புடனே துதிசெய்ய வினையகற்றும் பாதம்
இபமுகாசூரனை வதைத்தவரின் பாதம்
நின்ற இடம் நின்ற படி வெற்றி பெரும் பாதம்
கணங்களை ஆள்பவரின் கண்ணிய நற்பாதம்
பக்தர்களின் பாதையில் தடையகற்றும் பாதம்
பானை வயிறு கொண்டவரின் பாதம் இந்த பாதம்
ஐங்கரங்கள் கொண்டவரின் அற்புத நற்பாதம்
ஆனைமுகம் கொண்டவரின் அழகான பாதம்
நேரத்தில் காரியத்தை முடிக்க வைக்கும் பாதம்
எச்செயலை துவங்கும் முன்னும் நினைக்கத் தக்க பாதம்
எத்தகைய தடைவரினும் தகர்த்தழிக்கும் பாதம்
தலையிலுள்ள தடைகளை அகற்றவல்ல பாதம்
பார்வையதை அகலமாய் ஆக்குகின்ற பாதம்
முக்குணமும் வழங்கவல்ல முழுமுதலின் பாதம்
மும்மலமும் அகற்றவல்ல ஆற்றல்மிகு பாதம்
அனுதினமும் துதிசெய்ய அன்புசெய்யும் பாதம்
அகமதனில் அமைதியை வளரச் செய்யும் பாதம்
அரனாரும் அரியாரும் அன்பு செய்யும் பாதம்
நான்முகரும் சண்முகரும் போற்றுகின்ற பாதம்
இந்திரனும் தேவர்களும் இசைந்து தொழும் பாதம்
இதயத்தில் வைத்துத் தொழ இனிமையான பாதம்
சிவனாரின் மடியினிலும் திகழ்ந்த நற்பாதம்
முருகரோடு ஓடியாடி விளையாண்ட பாதம்
புத்தியவள் புத்தியில் நிலைபெற்ற பாதம்
தாய் தந்தை சுற்றிவந்து கனி வென்ற பாதம்
தயையுடைய திருமாலின் மருமகனார் பாதம்
ஔவையாரின் அன்புடைய பேரனாரின் பாதம்
அன்புடனே துதிசெய்ய வினையகற்றும் பாதம்
இபமுகாசூரனை வதைத்தவரின் பாதம்
நின்ற இடம் நின்ற படி வெற்றி பெரும் பாதம்
கணங்களை ஆள்பவரின் கண்ணிய நற்பாதம்
பக்தர்களின் பாதையில் தடையகற்றும் பாதம்
பானை வயிறு கொண்டவரின் பாதம் இந்த பாதம்
ஐங்கரங்கள் கொண்டவரின் அற்புத நற்பாதம்
ஆனைமுகம் கொண்டவரின் அழகான பாதம்
நேரத்தில் காரியத்தை முடிக்க வைக்கும் பாதம்
எச்செயலை துவங்கும் முன்னும் நினைக்கத் தக்க பாதம்
எத்தகைய தடைவரினும் தகர்த்தழிக்கும் பாதம்
தலையிலுள்ள தடைகளை அகற்றவல்ல பாதம்
பார்வையதை அகலமாய் ஆக்குகின்ற பாதம்
முக்குணமும் வழங்கவல்ல முழுமுதலின் பாதம்
மும்மலமும் அகற்றவல்ல ஆற்றல்மிகு பாதம்
அனுதினமும் துதிசெய்ய அன்புசெய்யும் பாதம்
அகமதனில் அமைதியை வளரச் செய்யும் பாதம்
அரனாரும் அரியாரும் அன்பு செய்யும் பாதம்
நான்முகரும் சண்முகரும் போற்றுகின்ற பாதம்
இந்திரனும் தேவர்களும் இசைந்து தொழும் பாதம்
இதயத்தில் வைத்துத் தொழ இனிமையான பாதம்
0 comments:
Post a Comment