CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

ஸ்ரீராமர்புகழ்

நம்மைப்போல சிரித்தவர் நம்மைப்போலே அழுதவர்
நம்மைப்போலே காதலித்து காதலோடு வாழ்ந்தவர்
இழப்புகளைக் கண்டவர் மீண்டெழுந்து வந்தவர்
உறவுகளைப் பிரிந்திருக்கும் சோகங்களை அறிந்தவர்
செல்வத்தையும் கண்டவர் ஏழ்மையையும் கண்டவர்
செல்வத்திலும் ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்தவர்

விதியென்னும் புயலிலே ஆடாத மரமல்லர்
அத்தனை புயலிலும் வீழாத மரமவர்
தன்னுயிராம் சீதையை தியாகம்செய்த மேன்மையர்
இதயத்தில் சீதையை இழக்காத ஆண்மையர்
புரிதலில்லா மக்களை பொறுத்துக்காத்த பூமியர்
புரிந்தபின் இதயத்தில் உயிரான சாமியர்

என்னுயிரும் ராமரே என்மூச்சும் ராமரே
என்னிதயம் ராமரே என்வாழ்க்கை ராமரே
என்கண்கள் ராமரே கண்மணியும் ராமரே
என் மனத்திரையில் எப்பவும் மலருமவர் ரூபமே
என் மூளை எப்பவும் துதிப்பதவர் பாதமே!

ராமர் ராமர் ஜெய ராஜா ராமர்
ராமர் ராமர் ஜெய சீதா ராமர்
ராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்
ராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்

கொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்
துறு துறு சிறுவன் தசரத ராமர்
கல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்
ஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்

இணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்
ராஜ குருவாம் பரத ராமர்
தந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்
அன்புள்ள கணவன் சீதா ராமர்

உற்ற தோழன் குகனின் ராமர்
உதவும் நண்பன் சுக்ரீவ ராமர்
தெய்வ உருவாம் அனுமத் ராமர்
ஞான சூரியன் ஜாம்பவ ராமர்

மூத்த மகனாம் சுமித்ர ராமர்
மன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்
மன்னித்தருளும் கைகேயே ராமர்
மகனே போன்றவர் ஜனக ராமர்

எளிய விருந்தினர் சபரியின் ராமர்
அபயம் அளிப்பவர் விபீஷண ராமர்
கடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர்
பாப வினாசனர் கோதண்ட ராமர்

ஆண்கள் போற்றும் ஆதர்ஷ ராமர்
பெண்கள் போற்றும் கற்புடை ராமர்
மக்கள் மகிழும் அரசுடை ராமர்
பக்தர் நெகிழும் பண்புடை ராமர்

வேள்விகள் காக்கும் காவலன் ராமர்
சாபங்கள் போக்கும் அகல்ய ராமர்
இரு மனம் இணைக்கும் கௌதம ராமர்
திருமண நாயகன் ஜானகி ராமர்

சிவ வில் முறித்த பராக்ரம ராமர்
ஹரி வில் தரித்த சத்ரிய ராமர்
கடலை வென்ற வருண ராமர்
பாலம் கண்ட சேது ராமர்

மரம் ஏழு துளைத்த தீர ராமர்
மறு நாள் வரச்சொன்ன வீர ராமர்
குறையற்ற குணமகன் வீர்ய ராமர்
குலப் புகழ் காத்த சூர்ய ராமர்

சீதையைப் பிரிந்த மக்களின் ராமர்
காதலை மறவா சீதையின் ராமர்
தாயுமானவர் லவகுச ராமர்
தாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்

கீதை தந்த கண்ணன் ராமர்
கண்ணனே வணங்கும் கண்ணிய ராமர்
சிவனை வணங்கும் பக்த ராமர்
சிவனே ஜபிக்கும் புண்ணிய நாமர்

முனிவர்கள் போற்றும் பிரம்மம் ராமர்
தவசிகள் நினைக்கும் நித்திய ராமர்
காந்தியின் கடவுள் சத்திய ராமர்
அறப் போர் பணித்த ஆண்டவன் ராமர்

ராம் ராம் என்றால் நல்லது நடக்கும்
ராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்
ராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்
ராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்

ராம் ராம் என்றால் உள்ளம் உருகும்
ராம் ராம் என்றால் உவகை பெருகும்
ராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்
ராம் ராம் என்றால் தர்மம் புரியும்

ராம் ராம் என்றால் வீரம் விளங்கும்
ராம் ராம் என்றால் வெற்றி விழையும்
ராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்
ராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்

ராம் ராம் என்றால் மனது அடங்கும்
ராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்
ராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்
ராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்

ஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்
ஒரு வைரம் போல மனதில் பதித்தால்
துன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்
இன்பம் எல்லாம் விரைவில் கூடும்

ஸ்ரீராமபுண்யஜெயம்

ஸ்ரீராமபுண்யஜெயம்

பெரிய குரு தட்சணை

தேவகிநந்தன் வசுதேவபுத்ரன்
யசோதேயன் நந்தகுமாரன்

ஆயன் மாயன் சேயன் தூயன்
இலையன் சிலையன் களையன் மலையன்
அமிழ்ந்தவன் உமிழ்ந்தவன் விழுங்கினன் முழங்கினன்
உதைத்தவன் வதைத்தவன் கதைத்தவன் சிதைத்தவன்

ஆலன் லீலன் சீலன் ஞாலன்
பாலன் வாலன் காலன் காலன்
குறும்பன் கரும்பன் இரும்பன் துரும்பன்
ஆடலன் விளையாடலன் கூடலன் குழலூதினன்

ராதையன் பூங்கோதையன்
பாதையன் நற்கீதையன்
துகிலிழுத்தவன் துகிலளித்தவன்
உடனிருப்பவன் துயரறுப்பவன்

உரலுருட்டினன் உறித்திருட்டினன்
தோலிருட்டினன் பொய்புரட்டினன்
மலையெடுத்தவன் குடைப்பிடித்தவன்
தேர்ச்செழுத்தினன் தேரழுத்தினன்

மண்ணையுண்டவன் வெண்ணையுண்டவன்
கீரையுண்டவன் தோலையுண்டவன்
அவலையுண்டவன் அகிலமுண்டவன்
அறிவுக்குவிருந்தினன் மனதுக்குமருந்தினன்

ஏகன் அனேகன் ப்ரணவன் ப்ராணன்
ஈகன் இகபரன் அரங்கன் சுரங்கன்
மயக்கினன் கலக்கினன் விளக்கினன் விளக்கினன்
லயித்தவன் ஜெயித்தவன் நழுவினன் சிறையினன்

பன்முகன் இன்முகன் நன்முகன் நாயகன்
இன்னகன் விண்ணகன் மண்ணகன் தாயகன்
இன்மனன் நன்மனன் பொன்மனன் பூமணன்
சற்குணன் பொற்குணன் நற்குணன் நாரணன்

மேஷன் ரிஷபன் மிதுனன் கடகன்
சிம்மன் கன்யன் துலான் விருச்சிகன்
தனுஷன் மகரன் கும்பன் மீனன்
கிரகன் நட்சத்திரன் நாடியன் நற்சோதிடன்

முதலையறுத்தவன் யானைவிடுத்தவன்
கஜேந்திரவரதன் நரேந்திரவதனன்
உரலையிழுத்தவன் மரத்தைவிடுத்தவன்
நளகூபரவரதன் நலமேதருவதனன்

ஆமேய்த்தவன் ஆதேய்த்தவன்
புல்லூட்டினன் பால்கூட்டினன்
ஆவருடினன் ஆதடவினன்
ஆசுற்றினன் ஆபற்றினன்

ஆவணைத்தவன் ஆவனைத்தவன்
ஆமயக்கினன் ஆயியக்கினன்
ஆவுக்கொருநண்பன் ஆவிரும்புமன்பன்
ஆமணிக்கிசைவன் ஆமணியின்னிசையன்

காளிங்கநர்த்தனன் ஆலிங்கனர்த்தனன்
ராசலீலாதாரி பரமவுபகாரி
அகயோகியன் சுகபோகியன்
தவவீரியன் சுபகாரியன்

ஸ்ரீபாண்டவதூதன் ஸ்ரீபார்த்தகீதன்
பான்சசன்யசத்தன் குருட்சேத்திரயுத்தன்
பரீட்சீத்தைமீட்டான் தற்பெருமைகாட்டான்
இஷ்டத்துக்குக்கல்யாணன் பிரம்மச்சர்யப்ரமாணன்

வாழைபோல்செழிப்பன் ஆலைமேல்மிதப்பன்
ஊழிதோறும்பிறப்பன் வாழியெனவுரைப்பன்
அருந்தருமகற்பன் பெருஞ்சத்யகவசன்
கடமையிருகண்ணன் கண்ணியகருமன்னன்

ஆனந்தசயனன் ஆனந்தநடனன்
கரும்புஜகசயனன் கரும்புஜகநடனன்
நவநீதசோரன் தங்கமணியாரன்
புன்முறுவல்காரன் கீர்த்தியபாரன்

தோப்புக்கரணன் அபிஷேகன் அலங்காரன் புகழாரன்
பொன்னாரன் பூவாரன் பல்லாரன் சொல்லாரன்
மலராரன் மல்லியாரன் முத்தாரன் மணியாரன்
தாமரையாரன் வெண்தாமரையாரன்
செண்பகமலராரன் செந்தாமரையாரன்

கலியமூர்த்தி எளியமூர்த்தி இனியமூர்த்தி புனிதமூர்த்தி
மறைமூர்த்தி மலைமூர்த்தி சத்யமூர்த்தி நித்யமூர்த்தி
வரதமூர்த்தி விரதமூர்த்தி தேவமூர்த்தி தெய்வமூர்த்தி
அன்புமூர்த்தி அகிலமூர்த்தி அண்டமூர்த்தி உண்டமூர்த்தி

கோப்ரியன் கோபிப்ரியன் ஆப்ரியன் ஆவினப்ரியன்
கோநேசன் கோதாசன் கோவாசன் கோவீசன்
கோபாலன் கோவாளன் கோவைத்தியன் கோவைத்தனன்
பால்சோறுப்ரியன் திருவெண்ணைப்ரியன்
தயிர்சாதப்ரியன் நீர்மோர்ப்ரியன்

குதிரைமுகன் கூர்மமுகன் பன்றிமுகன் சிங்கமுகன்
ராமமுகன் கிருஷ்ணமுகன் கருணைமுகன் பொறுமைமுகன்
நல்லமுகன் ஞானமுகன் வல்லமுகன் வரதமுகன்
சூர்யமுகன் சந்திரமுகன் மலர்ச்சிமுகன் குளிர்ச்சிமுகன்

திருத்துழாய்ஆரன் சதுர்வேதஆரன்
பிரபந்தஆரன் அபங்கஆரன்
திருவாய்மொழியாரன் திருப்பாவைமணியாரன்
பல்லாண்டுமுத்தாரன் நாச்சியார்மொழியாரன்

திருமழிசைத்தமிழாரன் மதுரகவிமொழியாரன்
திருமாலையாரன் ஸ்ரீசுப்ரபாதன்
கொஞ்சுகுலசேகரபிஞ்சுதமிழாரன்
திருமங்கைமன்னன்பெரியமொழியாரன்

திருப்பாவையாரன் நாச்சிமொழியாரன்
திருமொழியாரன் சந்தவிருத்தாரன்
திருமாலையாரன் திருவெழுச்சியாரன்
அன்றலர்ந்ததாமரையன் சென்றுளவுமாநிறையன்
கொண்டலுடைவான்நிறத்தன் வெள்ளைமனபால்நிறத்தன்

ஸ்ரீராமானுஜஜெயம்

ஸ்ரீராமானுஜஜெயம்

இளையபெருமாள் துதி

அவர் படுக்கப்போனால் அவர் படுக்க முன்படுத்தீர்
அவர் பிறக்கப்போனால் அவர் சிறக்க பிறப்பெடுத்தீர்
அவர் மழையிலானால் நனையவிடாமல் நீர் குடையானீர்
அவர் மழையானால் சிதறவிடாமல் நீர் கூடையாவீர்

அவர் அமரப்போனால் அவர் அமர ஆசனமாய்
அவர் ஆளப்போனால் அவர் ஆள தாசனுமாய்
அவர் நிற்கப்போனால் அவர் நிற்க நீர் மேடை
உமக்கு கட்டளையாவதவர் முகக்குறிப்பு கண்ஜாடை

அவர் தமையனானால் அவர் அணைக்க நீர் தம்பி
அவர் தம்பியானால் அவரை அணைக்க நீர் தமையன்
அவர் தலைவனானால் அவருக்கு நீர் தொண்டன்
நீர் தலைவனானால் உமக்கு அவர் தொண்டன்

அவர் வேதமானால் நீர் விளக்கம்தரும் ஆசான்
அவர் கீதையானால் நீர் பொருளுரைக்கும் பாஷ்யான்
அவர் நடக்கும் பாதையெல்லாம் நீர் முன்சென்று திருத்துவீர்
அவருக்காய் உண்ணாமல் உறங்காமல் உம்மைநீர் வருத்துவீர்
பொன்ஆதிஷேஷ ராமானுஜேஷ
லக்ஷ்மண அருளாளே பலராமப் பெருமாளே
உடையவரே பாஷ்யரே உடையளவில் காஷ்யரே
எதிராஜ மூர்த்தி எண்ணற்ற கீர்த்தி

கோவிலொரு கோபுரம் சுருக்கமாய் ஏறி
நாராயண மந்திரம் முழக்கமாய் கூறி
அனைவருக்கும் மோக்ஷம் வழங்கினீர் வாரி
நரகம் புக துணிந்த பரம உபகாரி

இளையபெருமாளே உம் பாதம் போற்றி
லக்ஷ்மணப்பெருமாளே உம் சேவை போற்றி
பலராமப்பெருமாளே உம் கீர்த்தி போற்றி
ராமானுஜேஷரே உம் தொண்டு போற்றி

கிருஷ்ண பலராமரே போற்றி
பலராம கிருஷ்ணரே போற்றி
ராம லக்ஷ்மணரே போற்றி
லக்ஷ்மண ராமரே போற்றி!!

ஸ்ரீராமதூதஜெயம்

ஸ்ரீராமதூதஜெயம்

சின்ன குரு தட்சணை

அஞ்சனை பெற்ற அருந்தவப் புதல்வனே
வஞ்சனையற்ற பக்தியில் முதல்வனே
ராம பக்தியில் தன்னை இழந்திடும்
தன்னை இழப்பதில் உள்ளம் நெகிழ்ந்திடும்
நல்ல வித்தையில் நீயென் முன்னோடி
அதை நான் கற்றிட கேட்கிறேன் மன்றாடி

மீண்டும் மீண்டும் கனவில் வந்து
உள்ளம் தளரா ஊக்கம் தந்து
எனை ராம பக்தனாய் ஆக்கிய குருவே
பணிவின் துணிவின் பக்தியின் உருவே
எப்படி சொல்வேன் நன்றிகள் உனக்கு
கைம்மாறு செய்ய வக்கில்லை எனக்கு

காமக் களியாட்டம் நிறைந்த இலங்கையில்
ராக்கதர் யாவும் உறங்கும் வேளையில்
ராம தூதனாய் உள்ளே நுழைந்தாய்
ராக்கதர் ஆட்டத்தை அறவே களைந்தாய்
நான் இருந்ததனாலா நடமாடும் இலங்கையாய்
நானுறங்கும் வேளையில் என்னுள்ளே புகுந்தாய்?

ஆணவம் உள்ளவன் நானென புரிந்தும்
காடென வளர்த்த காமங்கள் தெரிந்தும்
கதையோடு எந்தன் கனவில் தோன்றினாய்
பக்தியின் விதையை சேற்றில் ஊன்றினாய்
ராவணன் மமதையை நெருப்பால் எரித்தாய்
என் மமதையை மட்டுமேன் அன்பால் கரைத்தாய்?

எண்ணுருப்பு தேய நிலத்தில் விழுகிறேன்
ராம பக்தனே உன் பாதம் தொழுகிறேன்
நீ கைகூப்பும் நிலையை மனதில் கொணர்கிறேன்
ஆணவம் அற்றல் இதுவென உணர்கிறேன்
இறை படைப்பில் உனைவிட செல்வந்தர் இல்லை
இதை உணர்ந்ததால் என்னுள் ஏழ்மைகள் இல்லை

அடியேன் பணிகிறேன் உன் பாதம் தொழுகிறேன்
இன்னொரு இமயமே உன் கால்களில் விழுகிறேன்
இவ்வுலகம் எனையும் உனைப் போல கொள்ளட்டும்
இன்னொரு அனுமன் இவனென்று சொல்லட்டும்

ஸ்ரீராமருக்காய் மலைசுமந்த உன் தோளுக்கு வணக்கம்
வெண்கல மணியணிந்த உன் வாலுக்கு வணக்கம்
ஸ்ரீராமர்புகழ் பாட நீ மீட்டும் யாழுக்கு வணக்கம்
உன்னையே தாங்கி நிற்கும் உன் காலுக்கு வணக்கம்

ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்!!

ரோம ரோமமு ராம நாமமே!

ஓம் ஸ்ரீசீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமந்த் சமேத ஸ்ரீராமச் சந்திர பரப்பிரம்மணே நமஹ!

கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே.
- நம்மாழ்வார்


சிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோ அவ்வேத முதல் காரணன்
-கம்பராமாயணம்

எனையே கதியென்று சரணம் புகுந்தவர்
வாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு
குற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்
நன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்
-ஸ்ரீராமர்

ஸ்ரீராம காயத்ரி

ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்

ஸ்ரீ சீதா காயத்ரி

ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்

ராம பாத காயத்ரி

ஓம் ராமபாதாய வித்மஹே
ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்

வேதசாரம் கீதையே
கீதைசாரம் கிருஷ்ணரே
கிருஷ்ணர்பாதம் பற்றவே
கிருஷ்ணசாரம் கிட்டுமே

கிருஷ்ணசாரம் ராமரே
ராமர்சாரம் நாமமே
ராமநாமம் சொல்லவே
ராமர்பாதம் கிட்டுமே

ராமர்பாதம் கிட்டினால்
நன்மையாவும் கொட்டுமே
நன்மையாவும் கொட்டினால்
நன்மையாவும் கிட்டுமே

நன்மையாவும் என்கையில்
அளவு ஒன்றும் இல்லையே
அளவொன்றும் இன்றியே
நன்மையாவும் கிட்டுமே

ராமாயணம் விவசாயம்
பாகவதம் அறுவடை

ஸ்ரீராமராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!
-சிவபெருமான்

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்
-கம்பர்

நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே

-கம்பர்

மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்
-கம்பர்

நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்

அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கிய
ர்

போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்

ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்

காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்

நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்

ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்

ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-
சிவவாக்கியர்

காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!
-வள்ளலார்

திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி

டில்லிக்கே ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே

ஹரியாரைப் பணியச் சொன்ன
நல்ல வார்த்தை தட்டாதே
ஹரனாரை நினைக்கச் சொன்ன
அன்பு வார்த்தை தட்டாதே

சிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்
சிந்தைமிகு மானிடா
சிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு
சிவத்தை மறப்பதேனடா?

ராம்ராம்

அம்மா பரமேஸ்வரியை
அடிபணிந்து போற்றுகிறேன்
அப்பா சதாசிவத்தை
அன்புடனே போற்றுகிறேன்
குருநாதர் கிருஷ்ணரை
கும்பிட்டே போற்றுகிறேன்
எந்தெய்வம் ராமரை
என்னுயிராய் போற்றுகிறேன்

கணிதம் தந்து அன்பு செய்த
ஈவ்ளின் மிஸ் போற்றுகிறேன்
தட்டித் தந்து தமிழ் தந்த
துரைராஜ் சார் போற்றுகிறேன்
அடித்தாலும் அன்பான
ராபர்ட் சார் போற்றுகிறேன்
என்னிலும் ஓளி கண்ட
க்ஸேவியர் சார் போற்றுகிறேன்

இன்னும் பல ஆசான்கள்
எத்தனை பேர் என் வாழ்வில்
அத்தனை பேரையும்
அடி பணிந்து போற்றுகிறேன்!

சுவாமி சின்மயானந்தர்

சுவாமி சின்மயானந்தர்
என் கீதாச்சார்யார்

நன்றியுரை

சின்மையா னந்தரை சிந்தையுடன் நினைக்கிறேன்
என்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்
அவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது
நாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது

அவரென் இதயத்தில்
போட்ட விதை
மரமாகி நின்றது

இறைவனுக்காய்
பலபூக்கள்
நறுமணமாய்
பூத்தது

மனிதருக்கும்
பலகனிகள்
சுவைசத்தாய்
தந்தது

கிருஷ்ணரே அம்மரத்தை
நீரூற்றி வளர்த்தது
ராமரே அம்மரத்துக்கு
உரமாக இருந்தது

அவரைக் காணாத என் கண்கள்
என் குற்றம் செய்ததோ
அக்குற்றத்தை கரைத்திடவே
கண்ணீரை பெய்ததோ

அழுவது குற்றமென்று
அறிவுரைத்த குருவுக்கு
அழுகையில் சொட்டுகின்ற
கண்ணீரே காணிக்கை!

சுகம்பெற்ற இதயத்தின்
சோகமில்லா காணிக்கை
நன்றியால் பெருகியதால்
குற்றமில்லா காணிக்கை!

சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!!

Friday, January 15, 2016

சூரியனார் துதி


தொடுவானம் அதில்தோன்றும் சுடரான ஒளியே
பரப்பிரம்மன் உடலதனில் நீவலது விழியே
எங்கெங்கும் ஒளிபரப்பும் மகத்தான சோதி
என்றென்றும் புகழுடனே நிலைபெற்ற ஆதி

வடிவளித்து வாழ்வளிக்கும் பிரம்மாவும் நீயே
உயிரளித்து ஊக்குவிக்கும் நாரணர் நீயே
அழிக்கின்ற ஆற்றலுடை சிவனாரும் நீயே
பிரம்மமது வடிவெடுத்த முதலான தீயே

ரத்தத்தின் நிறத்துடனே காலையிலே வருவாய்
சத்தத்தின் சாயலின்றி உன்வேலை தொடர்வாய்
ஒளியாகி எங்கெங்கும் நீக்கமற நிறைவாய்
உயிர்களவை வாழ்வதற்கு நல்லொளியை தருவாய்

கிருமிகளை கொன்றொழிக்கும் உன்னொளியின் வெப்பம்
பாவங்களை பாவங்களை செய்திடுவாய் பட்பம்
இருளதனில் பாவங்கள் வளர்வதை போலே
உன்னொளியில் பாவங்கள் வளர்வதில்லை கண்டேன்

நீரதனை மேலெழுப்பி செய்திடுவாய் ஆவி
அவ்வாவியது மழையாக குளிர்கிறது பூமி
உன்னொளியில் தாவரங்கள் உணவதனை படைக்கும்
உணவதுவும் இல்லையெனில் உயிர்களெங்கு செழிக்கும்?

எழுவண்ண புரவிகளில் செய்கின்றாய் பவனி
உன்னாளு மையில்தான் தழைக்கின்றது தரணி
எழுவண்ண புரவிகளும் வானவில் வண்ணம்
புரவிக்கொடி உடையோனே தூயதுன தெண்ணம்

மானுடத்தைத் தாங்குகின்ற பூமியுன்னை சுற்றும்
அதைப்போலே எண்கோள்கள் உனைச்சுற்றும் சுற்றும்
சந்திரனும் உன்னிடத்தில் ஒளிபெற்று ஒளிர்ந்தான்
வெள்ளைநிற ஒளியளித்து இரவுகளில் மிளிர்ந்தான்

உன்னைத்தினம் துதிப்பவர்கள் தீங்கிழைக்க மாட்டார்
உடல்நலத்தோடு உழைத்துநல் செல்வம்புகழ் சேர்ப்பார்
நீவருவதற்கு முன்விழித்து மறைந்தபின் துயில்வார்
நெடுநாட்கள் பூமியிலே நலமுடனே வாழ்வார்

நேர்மையதை தூய்மையதை துதிப்பவர்க்கு தருவாய்
மனதிலுள்ள அழுக்கழித்து ஆத்மசுத்தி தருவாய்
வலதுகையால் நீர்வழங்கி உன்னைதினம் துதிப்போர்
வள்ளல்குணம் மேலோங்க புண்ணியங்கள் சேர்ப்போர்

வள்ளலென்று பெயரெடுத்த கர்ணனுன் பிள்ளை
அவன்கொண்ட புகழுக்கு வானமே எல்லை
கர்ணனுக்கு இணையான வள்ளலும் நீயே
வழங்கியதை திரும்பித்தர கேட்பதில்லை நீயே

சூரியனே உன்வம்சம் புகழுடைய வம்சம்
சூரியனே நீயோ நாரணரின் அம்சம்
உன்பிள்ளை மனுராஜன் செய்துவைத்தான் சட்டம்
அதைஏற்காத அரசாங்கம் ஆகிறது மட்டம்

ஆதியிலே நீ பெற்றாய் பிரம்மத்திடம் பாடம்
அதைக்கற்கின்ற மாணவர்க்கு சேவைகுணம் கூடும்
தன்னலமற்று சேவைசெய்யும் யோகமது கண்டேன்
கண்ணன்சொன்ன கீதையில் அப்பாடத்தை கண்டேன்

உன்னைத்தன் அம்சமென்று கண்ணனவன் சொன்னான்
பகலிலே ஒளிர்பவற்றுள் சூரியன்நான் என்றான்
அவன்தேரை காத்துநின்ற அனுமனுன் சீடன்
உன்தேர்முன் பின்நடந்து கற்றுக்கொண்டான் பாடம்

இஷ்வாகு மன்னனுக்கு நீசொன்னாய் கீதை
ரவிவம்சம் அன்றுமுதல் சென்றதப் பாதை
ரவிவம்சத்தில் வந்தவர்கள் அருஞ்செயல்கள் செய்தார்
அருஞ்செயல்கள் செய்துஅவர் வான்புகழை எய்தார்

அம்பரீசன் உன்வழியில் வந்தவொரு பிள்ளை
இன்றுவரை அவன்புகழும் அழிந்துவிட வில்லை
அவன்பக்திகண்டு நாரணரும் அவனரசைக் காத்தார்
துர்வாசர் அவனிடமே கோபம்கொண்டு தோத்தார்

திரிசங்கு சொர்க்கமென்று இன்றளவும் சொல்வர்
திரிசங்கு போல்சொர்க்கம் வேறுயெவர் செல்வர்
அரிச்சந்திரன் சத்தியத்தில் கொண்டநல் பிடிப்பு
காந்தியவர் சிறுவயதில் பிடித்துக்கொண்ட படிப்பு

சகரன்என்று ஒருமன்னன் உன்வழியில் வந்தான்
சாகரம் எனும்பெயரை கடலுக்குத் தந்தான்
பகீரதனும் பூமிக்கு கொண்டுவந்த கங்கை
அவனால்தான் சிவனாரும் கங்காதரனாம் இங்கே

பெருமுயற்சி அத்தனையும் பகீரதம் என்பர்
கங்கையில் குளித்துத்தங்கள் வினைகழிக்கும் அன்பர்
கங்கையால் கழிகின்றது மனிதர்களின் பாவம்
அவளில்லையென்றால் மனிதனியினம் எங்குதான் போகும்?

ரகுவென்று ஒருமன்னன் உன்வம்சம்வழி வந்தான்
உன்வம்சத்துக்கு பெரும்புகழை தனியனாய் தந்தான்
உலகெங்கும் படையெடுத்து சுற்றிவந்தான் பவனி
அவனாற்றல்கண்டு அவனடியில் பணிந்ததிந்தத் தரணி

அவன்தந்தையவர் வேள்விக்காக்க இந்திரனை எதிர்த்தான்
இடியதனால் அடிபட்டும் மீண்டும் நலமெழுந்தான்
அவனாற்றல் அதைக்கண்டு அவ்விந்திரனும் வியந்தான்
யாகத்தின் முழுப்பலனை ரகுதந்தைக்கு தந்தான்

ரகு உலகெங்கும் படையெடுத்து பெருஞ்செல்வம் சேர்த்தான்
தானம்தந்து தானம்தந்து அத்தனையும் தீர்த்தான்
அப்பொழுது ஒருசிறுவன் பொன்கேட்டு வந்தான்
தன்குருவுக்கு தருவதற்கு தட்சணை என்றான்

ரகுமன்னன் மண்வீட்டில் வசிப்பதையும் கண்டான்
ரகுமன்னன் மண்பானை நீர்க்குடிக்கக் கண்டான்
சிறுவனுக்கு பொன்னளிக்க நினைத்தானே ரகுவும்
குபேரனைத் தாக்கிடவே திரட்டினான் படையும்

குபேரனும் இதுயறிந்து பொன்மாரி பெய்தான்
பெரும்புகழோடு பெருஞ்செல்வம் ரகுமன்னன் எய்தான்
அவருக்கு அஜனென்று ஒருபிள்ளை பிறந்தார்
அஜனுக்கு தசரதரும் பிள்ளையாய் பிறந்தார்

தசரதரும் தேவருக்காய் போர்தொடுத்துச் சென்றார்
சம்பரனை சம்பரனை யுத்தத்தில் வென்றார்
தேவர்களும் தசரதரைப் போற்றி புகழ்செய்தார்
தசரதரும் அதன்பின்னே நல்லாட்சி செய்தார்

அதன்பின்னே உன்வம்சம் தொட்டதொரு உச்சம்
அவ்வுச்சம்தொட வைத்தவரின் கீர்த்திகளோ லட்சம்
அவ்வுச்சம்தொட வைத்தவரின் கீர்த்திகளை சொன்னால்
பாவங்களும் தீவினையும் தீர்ந்துவிடும் தன்னால்

சூரியனே உன்வம்சத்தில் ஶ்ரீராமர் பிறந்தார்
அவருக்கீடாக இல்லையொரு மன்னனென சிறந்தார்
அவருக்கீடாக மன்னர்மட்டும் இல்லையென்று இல்லை
அவருக்கீடான மனிதர்களும் தெய்வங்களும் இல்லை

தந்தைசொல் காத்திடவும் மகுடமதை விட்டார்
அப்போதே அப்போதே வான்புகழை தொட்டார்
யுத்தத்தில் அனைவருமே கைக்கொள்வர் வீரம்
அவர்மட்டும் யுத்தத்தில் கைக்கொண்டார் ஈரம்

தன்தம்பி மனம்குளிர மகுடமதை ஏற்றார்
மக்கள்நலம் காப்பதையே விரதமென்று நோற்றார்
மக்கள்மனம் தெளிந்திடவும் சீதையைத் பிரிந்தார்
என்றென்றும் இதயத்தில் சீதையுடன் வாழ்ந்தார்

அரிச்சந்த்ரன் கதையதனால் தெளிவுபெற்றார் காந்தி
ராமநாமம் தினமோதி தெளிவுபெற்றார் காந்தி
உன்வம்சத்தின் புகழறிந்தோர் நன்மையொன்றே செய்வர்
உயர்க்கொள்கையுடன் வாழ்ந்துமண்ணில் பெரும்புகழ் எய்வர்

பொன்னொளி மேனியனே உன்கதிர்கள் அழகு
உன்கதிர்கள் ஒளீயூட்டும் அத்தனையும் அழகு
அதிகாலை நீயேற்கும் செம்மைநிறம் சிறப்பு
அதன்பின்னே நீயேற்கும் மஞ்சள்நிறம் சிறப்பு

குங்குமப் பொட்டைப்போல் அதிகாலை எழுவாய்
குங்குமமாய் குங்குமமாய் மங்களங்கள் தருவாய்
அதன்பின்னே பொன்னொளியை நீபரப்பி செல்வாய்
பொன்மகளாய் பொன்மகளாய் செல்வமதும் தருவாய்

அதிகாலை உன்கதிர்கள் ஞானமதைக் கொடுக்கும்
மதியானம் உன்கதிர்கள் வலிமையதைக் கொடுக்கும்
மாலையிலே உன்கதிர்கள் செல்வமதைக் கொடுக்கும்
நீகொடுக்கும் நன்மைகளை எச்சக்தி தடுக்கும்?

சூரிய வணக்கமதும் சிறப்பான யோகம்
அந்த யோகத்தை செய்பவர்க்கு உடல்நலமும் கூடும்
சீசமர்த்த ராமதாசர் அவ்யோகம் செய்தார்
அதனாலே உடல்வலுவும் மனவலிவும் எய்தார்

உன்புகழை அகத்தியரும் ராமருக்கு சொன்னார்
உன்புகழை ஓதியதால் ஶ்ரீராமர் வென்றார்
மூவேளை நீராடி உனக்களித்தார் நீரை
காயத்ரி மந்திரத்தை ஓதிதந்தார் நீரை

சண்மார்க்கங்களில் உன்னைத்தினம் தொழுவதும் ஒன்று
உனைதுதித்தல் உனைதுதித்தல் சாலவும் நன்று
சௌமாரத்தின் இறைவனே சூரியனே போற்றி
சௌமியனே பாஸ்கரனே தினகரனே போற்றி

திவாகரனே கதிரவனே பகலவனே போற்றி
ஆதித்யா அழகுடையாய் அன்புடையாய் போற்றி
ஞாயிறே நியாயமே ஞானமே போற்றி
நேர்மையே நீதியே நாயகனே போற்றி

ரவியென்னும் நாமம்கொண்ட சத்குணனே போற்றி
சூரிய நாரணனே நற்குணனே போற்றி
உலகுக்கு ஒளியளிக்கும் பொன்நிறனே போற்றி
பலகோடி பலகோடி கரத்தவனே போற்றி

சூரியனே சூரியனே உன்பாதம் போற்றி
ஞாயிறே ஞாயிறே உன்பாதம் போற்றி
கதிரவனே கதிரவனே உன்பாதம் போற்றி
பகலவனே பகலவனே உன்பாதம் போற்றி

பாஸ்கரனே பாஸ்கரனே உன்பாதம் போற்றி
திவாகரனே தினகரனே உன்பாதம் போற்றி
ஆதித்யா ஆதித்யா உன்பாதம் போற்றி
ஆதவனே ஆதவனே உன்பாதம் போற்றி

மித்ரனே மித்ரனே உன்பாதம் போற்றி
ரவிரவியே ரவிரவியே உன்பாதம் போற்றி
அருணனெனும் சாரதியை உடையவனே போற்றி
அருணனெனும் சாரதியை உடையவனே போற்றி

வள்ளல்மனம் வள்ளல்குணம் தந்திடுவாய் போற்றி
நோய்களையும் நோய்களையும் களைந்திடுவாய் போற்றி
எதிரிகளை எதிரிகளை அழித்திடுவாய் போற்றி
எமனைப்பெற்ற புண்ணியனே போற்றிபோற்றி போற்றி


சரண்யுயவள் நாயகனே போற்றிபோற்றி போற்றி
ராக்யியின் நாயகனே போற்றிபோற்றி போற்றி
பிரபையவள் நாயகனே போற்றிபோற்றி போற்றி
சாயையவள் நாயகனே போற்றிபோற்றி போற்றி

மழைபொழிய காரணனே பூரணனே போற்றி
தாவரங்கள் உணவுசெய்ய வெப்பம்தந்தாய் போற்றி
நீயின்றி அமையாது பூமியிலே வாழ்வு
உன்னைத்தினம் துதிப்பவர்க்கு இல்லையொரு தாழ்வு

சூரியனே ஞாயிறே கதிரவனே போற்றி
பகலவனே பாஸ்கரனே தினகரனே போற்றி
ஆதித்யா ஆதவனே மித்ரனே போற்றி
ரவிரவியே ரவிரவியே ரவிரவியே போற்றி

போற்றிபோற்றி போற்றிபோற்றி உன்கதிர்கள் போற்றி
போற்றிபோற்றி போற்றிபோற்றி உன்னொளியும் போற்றி
போற்றிபோற்றி போற்றிபோற்றி உன்வெப்பம் போற்றி
போற்றிபோற்றி போற்றிபோற்றி உன்பாதம் போற்றி

Om Adhithya Vidhmahey
MahaJwaalaaya Dheemahi
Thanho soorya prachodhyath

அன்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

0 comments: