ரோம ரோமமு ராம நாமமே!
ஓம் ஸ்ரீசீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமந்த் சமேத ஸ்ரீராமச் சந்திர பரப்பிரம்மணே நமஹ!
கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
- நம்மாழ்வார்
சிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோ அவ்வேத முதல் காரணன்
-கம்பராமாயணம்
எனையே கதியென்று சரணம் புகுந்தவர்
வாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு
குற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்
நன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்
-ஸ்ரீராமர்
ஸ்ரீராம காயத்ரி
ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்
ஸ்ரீ சீதா காயத்ரி
ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்
ராம பாத காயத்ரி
ஓம் ராமபாதாய வித்மஹே
ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்
வேதசாரம் கீதையே
கீதைசாரம் கிருஷ்ணரே
கிருஷ்ணர்பாதம் பற்றவே
கிருஷ்ணசாரம் கிட்டுமே
கிருஷ்ணசாரம் ராமரே
ராமர்சாரம் நாமமே
ராமநாமம் சொல்லவே
ராமர்பாதம் கிட்டுமே
ராமர்பாதம் கிட்டினால்
நன்மையாவும் கொட்டுமே
நன்மையாவும் கொட்டினால்
நன்மையாவும் கிட்டுமே
நன்மையாவும் என்கையில்
அளவு ஒன்றும் இல்லையே
அளவொன்றும் இன்றியே
நன்மையாவும் கிட்டுமே
ராமாயணம் விவசாயம்
பாகவதம் அறுவடை
ஸ்ரீராமராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!
-சிவபெருமான்
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே.- நம்மாழ்வார்
சிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோ அவ்வேத முதல் காரணன்
-கம்பராமாயணம்
எனையே கதியென்று சரணம் புகுந்தவர்
வாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு
குற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்
நன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்
-ஸ்ரீராமர்
ஸ்ரீராம காயத்ரி
ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்
ஸ்ரீ சீதா காயத்ரி
ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்
ராம பாத காயத்ரி
ஓம் ராமபாதாய வித்மஹே
ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்
வேதசாரம் கீதையே
கீதைசாரம் கிருஷ்ணரே
கிருஷ்ணர்பாதம் பற்றவே
கிருஷ்ணசாரம் கிட்டுமே
கிருஷ்ணசாரம் ராமரே
ராமர்சாரம் நாமமே
ராமநாமம் சொல்லவே
ராமர்பாதம் கிட்டுமே
ராமர்பாதம் கிட்டினால்
நன்மையாவும் கொட்டுமே
நன்மையாவும் கொட்டினால்
நன்மையாவும் கிட்டுமே
நன்மையாவும் என்கையில்
அளவு ஒன்றும் இல்லையே
அளவொன்றும் இன்றியே
நன்மையாவும் கிட்டுமே
ராமாயணம் விவசாயம்
பாகவதம் அறுவடை
ஸ்ரீராமராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!
-சிவபெருமான்
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்
-கம்பர்
நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே
-கம்பர்
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்
-கம்பர்
நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கியர்
போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்
ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்
காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்
நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்
ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்
ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-சிவவாக்கியர்
காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!
-வள்ளலார்
திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி
டில்லிக்கே ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
ஹரியாரைப் பணியச் சொன்ன
நல்ல வார்த்தை தட்டாதே
ஹரனாரை நினைக்கச் சொன்ன
அன்பு வார்த்தை தட்டாதே
சிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்
சிந்தைமிகு மானிடா
சிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு
சிவத்தை மறப்பதேனடா?
நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே
-கம்பர்
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்
-கம்பர்
நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கியர்
போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்
ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்
காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்
நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்
ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்
ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-சிவவாக்கியர்
காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!
-வள்ளலார்
திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி
டில்லிக்கே ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
ஹரியாரைப் பணியச் சொன்ன
நல்ல வார்த்தை தட்டாதே
ஹரனாரை நினைக்கச் சொன்ன
அன்பு வார்த்தை தட்டாதே
சிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்
சிந்தைமிகு மானிடா
சிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு
சிவத்தை மறப்பதேனடா?
ராம்ராம்
அம்மா பரமேஸ்வரியை
அடிபணிந்து போற்றுகிறேன்
அப்பா சதாசிவத்தை
அன்புடனே போற்றுகிறேன்
குருநாதர் கிருஷ்ணரை
கும்பிட்டே போற்றுகிறேன்
எந்தெய்வம் ராமரை
என்னுயிராய் போற்றுகிறேன்
கணிதம் தந்து அன்பு செய்த
ஈவ்ளின் மிஸ் போற்றுகிறேன்
தட்டித் தந்து தமிழ் தந்த
துரைராஜ் சார் போற்றுகிறேன்
அடித்தாலும் அன்பான
ராபர்ட் சார் போற்றுகிறேன்
என்னிலும் ஓளி கண்ட
க்ஸேவியர் சார் போற்றுகிறேன்
இன்னும் பல ஆசான்கள்
எத்தனை பேர் என் வாழ்வில்
அத்தனை பேரையும்
அடி பணிந்து போற்றுகிறேன்!
அடிபணிந்து போற்றுகிறேன்
அப்பா சதாசிவத்தை
அன்புடனே போற்றுகிறேன்
குருநாதர் கிருஷ்ணரை
கும்பிட்டே போற்றுகிறேன்
எந்தெய்வம் ராமரை
என்னுயிராய் போற்றுகிறேன்
கணிதம் தந்து அன்பு செய்த
ஈவ்ளின் மிஸ் போற்றுகிறேன்
தட்டித் தந்து தமிழ் தந்த
துரைராஜ் சார் போற்றுகிறேன்
அடித்தாலும் அன்பான
ராபர்ட் சார் போற்றுகிறேன்
என்னிலும் ஓளி கண்ட
க்ஸேவியர் சார் போற்றுகிறேன்
இன்னும் பல ஆசான்கள்
எத்தனை பேர் என் வாழ்வில்
அத்தனை பேரையும்
அடி பணிந்து போற்றுகிறேன்!
சுவாமி சின்மயானந்தர்
நன்றியுரை
சின்மையா னந்தரை சிந்தையுடன் நினைக்கிறேன்
என்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்
அவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது
நாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது
அவரென் இதயத்தில்
போட்ட விதை
மரமாகி நின்றது
இறைவனுக்காய்
பலபூக்கள்
நறுமணமாய்
பூத்தது
மனிதருக்கும்
பலகனிகள்
சுவைசத்தாய்
தந்தது
கிருஷ்ணரே அம்மரத்தை
நீரூற்றி வளர்த்தது
ராமரே அம்மரத்துக்கு
உரமாக இருந்தது
அவரைக் காணாத என் கண்கள்
என் குற்றம் செய்ததோ
அக்குற்றத்தை கரைத்திடவே
கண்ணீரை பெய்ததோ
அழுவது குற்றமென்று
அறிவுரைத்த குருவுக்கு
அழுகையில் சொட்டுகின்ற
கண்ணீரே காணிக்கை!
சுகம்பெற்ற இதயத்தின்
சோகமில்லா காணிக்கை
நன்றியால் பெருகியதால்
குற்றமில்லா காணிக்கை!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!!
என்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்
அவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது
நாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது
அவரென் இதயத்தில்
போட்ட விதை
மரமாகி நின்றது
இறைவனுக்காய்
பலபூக்கள்
நறுமணமாய்
பூத்தது
மனிதருக்கும்
பலகனிகள்
சுவைசத்தாய்
தந்தது
கிருஷ்ணரே அம்மரத்தை
நீரூற்றி வளர்த்தது
ராமரே அம்மரத்துக்கு
உரமாக இருந்தது
அவரைக் காணாத என் கண்கள்
என் குற்றம் செய்ததோ
அக்குற்றத்தை கரைத்திடவே
கண்ணீரை பெய்ததோ
அழுவது குற்றமென்று
அறிவுரைத்த குருவுக்கு
அழுகையில் சொட்டுகின்ற
கண்ணீரே காணிக்கை!
சுகம்பெற்ற இதயத்தின்
சோகமில்லா காணிக்கை
நன்றியால் பெருகியதால்
குற்றமில்லா காணிக்கை!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!!
Friday, January 15, 2016
சூரியனார் துதி
தொடுவானம் அதில்தோன்றும் சுடரான ஒளியே
பரப்பிரம்மன் உடலதனில் நீவலது விழியே
எங்கெங்கும் ஒளிபரப்பும் மகத்தான சோதி
என்றென்றும் புகழுடனே நிலைபெற்ற ஆதி
வடிவளித்து வாழ்வளிக்கும் பிரம்மாவும் நீயே
உயிரளித்து ஊக்குவிக்கும் நாரணர் நீயே
அழிக்கின்ற ஆற்றலுடை சிவனாரும் நீயே
பிரம்மமது வடிவெடுத்த முதலான தீயே
ரத்தத்தின் நிறத்துடனே காலையிலே வருவாய்
சத்தத்தின் சாயலின்றி உன்வேலை தொடர்வாய்
ஒளியாகி எங்கெங்கும் நீக்கமற நிறைவாய்
உயிர்களவை வாழ்வதற்கு நல்லொளியை தருவாய்
கிருமிகளை கொன்றொழிக்கும் உன்னொளியின் வெப்பம்
பாவங்களை பாவங்களை செய்திடுவாய் பட்பம்
இருளதனில் பாவங்கள் வளர்வதை போலே
உன்னொளியில் பாவங்கள் வளர்வதில்லை கண்டேன்
நீரதனை மேலெழுப்பி செய்திடுவாய் ஆவி
அவ்வாவியது மழையாக குளிர்கிறது பூமி
உன்னொளியில் தாவரங்கள் உணவதனை படைக்கும்
உணவதுவும் இல்லையெனில் உயிர்களெங்கு செழிக்கும்?
எழுவண்ண புரவிகளில் செய்கின்றாய் பவனி
உன்னாளு மையில்தான் தழைக்கின்றது தரணி
எழுவண்ண புரவிகளும் வானவில் வண்ணம்
புரவிக்கொடி உடையோனே தூயதுன தெண்ணம்
மானுடத்தைத் தாங்குகின்ற பூமியுன்னை சுற்றும்
அதைப்போலே எண்கோள்கள் உனைச்சுற்றும் சுற்றும்
சந்திரனும் உன்னிடத்தில் ஒளிபெற்று ஒளிர்ந்தான்
வெள்ளைநிற ஒளியளித்து இரவுகளில் மிளிர்ந்தான்
உன்னைத்தினம் துதிப்பவர்கள் தீங்கிழைக்க மாட்டார்
உடல்நலத்தோடு உழைத்துநல் செல்வம்புகழ் சேர்ப்பார்
நீவருவதற்கு முன்விழித்து மறைந்தபின் துயில்வார்
நெடுநாட்கள் பூமியிலே நலமுடனே வாழ்வார்
நேர்மையதை தூய்மையதை துதிப்பவர்க்கு தருவாய்
மனதிலுள்ள அழுக்கழித்து ஆத்மசுத்தி தருவாய்
வலதுகையால் நீர்வழங்கி உன்னைதினம் துதிப்போர்
வள்ளல்குணம் மேலோங்க புண்ணியங்கள் சேர்ப்போர்
வள்ளலென்று பெயரெடுத்த கர்ணனுன் பிள்ளை
அவன்கொண்ட புகழுக்கு வானமே எல்லை
கர்ணனுக்கு இணையான வள்ளலும் நீயே
வழங்கியதை திரும்பித்தர கேட்பதில்லை நீயே
சூரியனே உன்வம்சம் புகழுடைய வம்சம்
சூரியனே நீயோ நாரணரின் அம்சம்
உன்பிள்ளை மனுராஜன் செய்துவைத்தான் சட்டம்
அதைஏற்காத அரசாங்கம் ஆகிறது மட்டம்
ஆதியிலே நீ பெற்றாய் பிரம்மத்திடம் பாடம்
அதைக்கற்கின்ற மாணவர்க்கு சேவைகுணம் கூடும்
தன்னலமற்று சேவைசெய்யும் யோகமது கண்டேன்
கண்ணன்சொன்ன கீதையில் அப்பாடத்தை கண்டேன்
உன்னைத்தன் அம்சமென்று கண்ணனவன் சொன்னான்
பகலிலே ஒளிர்பவற்றுள் சூரியன்நான் என்றான்
அவன்தேரை காத்துநின்ற அனுமனுன் சீடன்
உன்தேர்முன் பின்நடந்து கற்றுக்கொண்டான் பாடம்
இஷ்வாகு மன்னனுக்கு நீசொன்னாய் கீதை
ரவிவம்சம் அன்றுமுதல் சென்றதப் பாதை
ரவிவம்சத்தில் வந்தவர்கள் அருஞ்செயல்கள் செய்தார்
அருஞ்செயல்கள் செய்துஅவர் வான்புகழை எய்தார்
அம்பரீசன் உன்வழியில் வந்தவொரு பிள்ளை
இன்றுவரை அவன்புகழும் அழிந்துவிட வில்லை
அவன்பக்திகண்டு நாரணரும் அவனரசைக் காத்தார்
துர்வாசர் அவனிடமே கோபம்கொண்டு தோத்தார்
திரிசங்கு சொர்க்கமென்று இன்றளவும் சொல்வர்
திரிசங்கு போல்சொர்க்கம் வேறுயெவர் செல்வர்
அரிச்சந்திரன் சத்தியத்தில் கொண்டநல் பிடிப்பு
காந்தியவர் சிறுவயதில் பிடித்துக்கொண்ட படிப்பு
சகரன்என்று ஒருமன்னன் உன்வழியில் வந்தான்
சாகரம் எனும்பெயரை கடலுக்குத் தந்தான்
பகீரதனும் பூமிக்கு கொண்டுவந்த கங்கை
அவனால்தான் சிவனாரும் கங்காதரனாம் இங்கே
பெருமுயற்சி அத்தனையும் பகீரதம் என்பர்
கங்கையில் குளித்துத்தங்கள் வினைகழிக்கும் அன்பர்
கங்கையால் கழிகின்றது மனிதர்களின் பாவம்
அவளில்லையென்றால் மனிதனியினம் எங்குதான் போகும்?
ரகுவென்று ஒருமன்னன் உன்வம்சம்வழி வந்தான்
உன்வம்சத்துக்கு பெரும்புகழை தனியனாய் தந்தான்
உலகெங்கும் படையெடுத்து சுற்றிவந்தான் பவனி
அவனாற்றல்கண்டு அவனடியில் பணிந்ததிந்தத் தரணி
அவன்தந்தையவர் வேள்விக்காக்க இந்திரனை எதிர்த்தான்
இடியதனால் அடிபட்டும் மீண்டும் நலமெழுந்தான்
அவனாற்றல் அதைக்கண்டு அவ்விந்திரனும் வியந்தான்
யாகத்தின் முழுப்பலனை ரகுதந்தைக்கு தந்தான்
ரகு உலகெங்கும் படையெடுத்து பெருஞ்செல்வம் சேர்த்தான்
தானம்தந்து தானம்தந்து அத்தனையும் தீர்த்தான்
அப்பொழுது ஒருசிறுவன் பொன்கேட்டு வந்தான்
தன்குருவுக்கு தருவதற்கு தட்சணை என்றான்
ரகுமன்னன் மண்வீட்டில் வசிப்பதையும் கண்டான்
ரகுமன்னன் மண்பானை நீர்க்குடிக்கக் கண்டான்
சிறுவனுக்கு பொன்னளிக்க நினைத்தானே ரகுவும்
குபேரனைத் தாக்கிடவே திரட்டினான் படையும்
குபேரனும் இதுயறிந்து பொன்மாரி பெய்தான்
பெரும்புகழோடு பெருஞ்செல்வம் ரகுமன்னன் எய்தான்
அவருக்கு அஜனென்று ஒருபிள்ளை பிறந்தார்
அஜனுக்கு தசரதரும் பிள்ளையாய் பிறந்தார்
தசரதரும் தேவருக்காய் போர்தொடுத்துச் சென்றார்
சம்பரனை சம்பரனை யுத்தத்தில் வென்றார்
தேவர்களும் தசரதரைப் போற்றி புகழ்செய்தார்
தசரதரும் அதன்பின்னே நல்லாட்சி செய்தார்
அதன்பின்னே உன்வம்சம் தொட்டதொரு உச்சம்
அவ்வுச்சம்தொட வைத்தவரின் கீர்த்திகளோ லட்சம்
அவ்வுச்சம்தொட வைத்தவரின் கீர்த்திகளை சொன்னால்
பாவங்களும் தீவினையும் தீர்ந்துவிடும் தன்னால்
சூரியனே உன்வம்சத்தில் ஶ்ரீராமர் பிறந்தார்
அவருக்கீடாக இல்லையொரு மன்னனென சிறந்தார்
அவருக்கீடாக மன்னர்மட்டும் இல்லையென்று இல்லை
அவருக்கீடான மனிதர்களும் தெய்வங்களும் இல்லை
தந்தைசொல் காத்திடவும் மகுடமதை விட்டார்
அப்போதே அப்போதே வான்புகழை தொட்டார்
யுத்தத்தில் அனைவருமே கைக்கொள்வர் வீரம்
அவர்மட்டும் யுத்தத்தில் கைக்கொண்டார் ஈரம்
தன்தம்பி மனம்குளிர மகுடமதை ஏற்றார்
மக்கள்நலம் காப்பதையே விரதமென்று நோற்றார்
மக்கள்மனம் தெளிந்திடவும் சீதையைத் பிரிந்தார்
என்றென்றும் இதயத்தில் சீதையுடன் வாழ்ந்தார்
அரிச்சந்த்ரன் கதையதனால் தெளிவுபெற்றார் காந்தி
ராமநாமம் தினமோதி தெளிவுபெற்றார் காந்தி
உன்வம்சத்தின் புகழறிந்தோர் நன்மையொன்றே செய்வர்
உயர்க்கொள்கையுடன் வாழ்ந்துமண்ணில் பெரும்புகழ் எய்வர்
பொன்னொளி மேனியனே உன்கதிர்கள் அழகு
உன்கதிர்கள் ஒளீயூட்டும் அத்தனையும் அழகு
அதிகாலை நீயேற்கும் செம்மைநிறம் சிறப்பு
அதன்பின்னே நீயேற்கும் மஞ்சள்நிறம் சிறப்பு
குங்குமப் பொட்டைப்போல் அதிகாலை எழுவாய்
குங்குமமாய் குங்குமமாய் மங்களங்கள் தருவாய்
அதன்பின்னே பொன்னொளியை நீபரப்பி செல்வாய்
பொன்மகளாய் பொன்மகளாய் செல்வமதும் தருவாய்
அதிகாலை உன்கதிர்கள் ஞானமதைக் கொடுக்கும்
மதியானம் உன்கதிர்கள் வலிமையதைக் கொடுக்கும்
மாலையிலே உன்கதிர்கள் செல்வமதைக் கொடுக்கும்
நீகொடுக்கும் நன்மைகளை எச்சக்தி தடுக்கும்?
சூரிய வணக்கமதும் சிறப்பான யோகம்
அந்த யோகத்தை செய்பவர்க்கு உடல்நலமும் கூடும்
சீசமர்த்த ராமதாசர் அவ்யோகம் செய்தார்
அதனாலே உடல்வலுவும் மனவலிவும் எய்தார்
உன்புகழை அகத்தியரும் ராமருக்கு சொன்னார்
உன்புகழை ஓதியதால் ஶ்ரீராமர் வென்றார்
மூவேளை நீராடி உனக்களித்தார் நீரை
காயத்ரி மந்திரத்தை ஓதிதந்தார் நீரை
சண்மார்க்கங்களில் உன்னைத்தினம் தொழுவதும் ஒன்று
உனைதுதித்தல் உனைதுதித்தல் சாலவும் நன்று
சௌமாரத்தின் இறைவனே சூரியனே போற்றி
சௌமியனே பாஸ்கரனே தினகரனே போற்றி
திவாகரனே கதிரவனே பகலவனே போற்றி
ஆதித்யா அழகுடையாய் அன்புடையாய் போற்றி
ஞாயிறே நியாயமே ஞானமே போற்றி
நேர்மையே நீதியே நாயகனே போற்றி
ரவியென்னும் நாமம்கொண்ட சத்குணனே போற்றி
சூரிய நாரணனே நற்குணனே போற்றி
உலகுக்கு ஒளியளிக்கும் பொன்நிறனே போற்றி
பலகோடி பலகோடி கரத்தவனே போற்றி
சூரியனே சூரியனே உன்பாதம் போற்றி
ஞாயிறே ஞாயிறே உன்பாதம் போற்றி
கதிரவனே கதிரவனே உன்பாதம் போற்றி
பகலவனே பகலவனே உன்பாதம் போற்றி
பாஸ்கரனே பாஸ்கரனே உன்பாதம் போற்றி
திவாகரனே தினகரனே உன்பாதம் போற்றி
ஆதித்யா ஆதித்யா உன்பாதம் போற்றி
ஆதவனே ஆதவனே உன்பாதம் போற்றி
மித்ரனே மித்ரனே உன்பாதம் போற்றி
ரவிரவியே ரவிரவியே உன்பாதம் போற்றி
அருணனெனும் சாரதியை உடையவனே போற்றி
அருணனெனும் சாரதியை உடையவனே போற்றி
வள்ளல்மனம் வள்ளல்குணம் தந்திடுவாய் போற்றி
நோய்களையும் நோய்களையும் களைந்திடுவாய் போற்றி
எதிரிகளை எதிரிகளை அழித்திடுவாய் போற்றி
எமனைப்பெற்ற புண்ணியனே போற்றிபோற்றி போற்றி
சரண்யுயவள் நாயகனே போற்றிபோற்றி போற்றி
ராக்யியின் நாயகனே போற்றிபோற்றி போற்றி
பிரபையவள் நாயகனே போற்றிபோற்றி போற்றி
சாயையவள் நாயகனே போற்றிபோற்றி போற்றி
மழைபொழிய காரணனே பூரணனே போற்றி
தாவரங்கள் உணவுசெய்ய வெப்பம்தந்தாய் போற்றி
நீயின்றி அமையாது பூமியிலே வாழ்வு
உன்னைத்தினம் துதிப்பவர்க்கு இல்லையொரு தாழ்வு
சூரியனே ஞாயிறே கதிரவனே போற்றி
பகலவனே பாஸ்கரனே தினகரனே போற்றி
ஆதித்யா ஆதவனே மித்ரனே போற்றி
ரவிரவியே ரவிரவியே ரவிரவியே போற்றி
போற்றிபோற்றி போற்றிபோற்றி உன்கதிர்கள் போற்றி
போற்றிபோற்றி போற்றிபோற்றி உன்னொளியும் போற்றி
போற்றிபோற்றி போற்றிபோற்றி உன்வெப்பம் போற்றி
போற்றிபோற்றி போற்றிபோற்றி உன்பாதம் போற்றி
Om Adhithya Vidhmahey
MahaJwaalaaya Dheemahi
Thanho soorya prachodhyath
அன்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Posted by ramesh sadasivam at 2:59 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment